கிராமத்து கைமணம்! துவரைக் குழம்பு
கிராமத்து கைமணம்! வாய்க்கு ருசியான , சூப்பர் டேஸ்ட்டுல ஒரு குழம்பு காத்திருக்கு. படிங்க... செய்யுங்க... பாராட்டுப் பெறுங்க! துவரைக் குழ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_4688.html?m=0
கிராமத்து கைமணம்!
வாய்க்கு ருசியான , சூப்பர் டேஸ்ட்டுல ஒரு குழம்பு காத்திருக்கு. படிங்க... செய்யுங்க... பாராட்டுப் பெறுங்க!
துவரைக் குழம்பு
இந்த சீஸன்ல எக்கச்சக்கமா கிடைக்கற துவரைக் காய்ல செய்யற குழம்பு இது.
துவரைக் காயை வாங்கிவந்து, உரிச்சு பயறா ஒரு கப் எடுத்து வச்சுக்குங்க. பதினஞ்சு சின்ன வெங்காயத்தையும் பத்துப் பல்லு பூண்டையும் தோலுரிச்சு, ரெண்டா நறுக்கி வச்சுக்குங்க. நாலு தக்காளிப் பழத்தை பொடியா நறுக்கி வச்சுக்குங்க. எலுமிச்சங்காயளவு புளியை ரெண்டு கப் தண்ணியில கரைச்சு வச்சுக்குங்க. ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் சோம்பை எடுத்து, எண்ணெய் விடாம வறுத்துப் பொடிச்சு வச்சுக்குங்க.
கடாயில மூணு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காய வச்சு, கொஞ்சம் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, வெந்தயம் போட்டு தாளிச்சு, வெங்காயம், பூண்டை வதக்கிக்குங்க. உரிச்சு வச்சிருக்கற துவரையோட தக்காளி, ரெண்டரை ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் தனியாத் தூள், கால் டீஸ்பூன் மஞ்சத்தூள், தேவையான உப்பு சேத்து, தக்காளி கரையற வரைக்கும் நல்லா வதக்குங்க. ரெடியா வச்சிருக்கற புளித் தண்ணியை, வதக்குன கலவையில ஊத்தி, பத்து நிமிஷம் கொதிக்க விடுங்க. குழம்புல பச்சை வாடை போனதும், பொடிச்சு வச்சிருக்கற பொடியத் தூவி, ரெண்டு பல்லு பூண்டை நசுக்கிப் போட்டு, ஒரு நிமிஷம் கிளறி இறக்குங்க.
Post a Comment