சமையல் குறிப்புகள்! நீர்க்கொழுக்கட்டை
தேவையானவை: புழுங்கல் அரிசி & 2 கப், துவரம்பருப்பு & 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் & 1 மூடி, காய்ந்த மிளகாய்- & 3 அல்லது ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_7392.html?m=0
தேவையானவை: புழுங்கல் அரிசி & 2 கப், துவரம்பருப்பு & 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் & 1 மூடி, காய்ந்த மிளகாய்- & 3 அல்லது 4, உப்பு, பெருங்காயம் & தேவை யான அளவு.
தாளிக்க: தேங்காய் எண்ணெய் & 3 ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை & தலா தேவையான அளவு.
செய்முறை: அரிசியையும் துவரம்பருப்பையும் 2 மணி நேரம் ஊறவைத்து, மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் ஒரு எலுமிச்சம் பழ அளவு எடுத்து 2 கப் தண்ணீர் விட்டு நன்கு கரைத்து தனியாக வைத்துக்கொள்ள வும். மீதி மாவை சிறு சிறு உருண்டை களாக உருட்டி வைத்துக்கொள்ளவும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, அதில் கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்த பிறகு, உருட்டி வைத்திருக்கும் கொழுக்கட்டைகளை அதில் மெதுவாகப் போடவும். 10 நிமிடம் நன்றாக வெந்தபிறகு கொழுக்கட்டைகள் மேலே மிதந்து வரும். அப்படியே இறக்கி, பருப்புக் கஞ்சியுடன் சேர்த்தே கொழுக்கட்டைகளைச் சூடாகப் பரிமா-றவும். மீண்டும் சாப்பிடத் தோன்றும் இந்த நீர்க்கொழுக்கட்டை, உடம்புக்கு எந்த ஊறும் விளைவிக்காத, சுவையான எளிமையான பழங்காலத்து சிற்றுண்டி!
நீர்க்கொழுக்கட்டை: அரைத்த கலவையை வேகவைப்பதற்கு பதிலாக, முதலில் திட்டமாக தண்ணீர் வைத்து, கொதித்ததும் கொழுக்கட்டைகளைப் போடவேண்டும். எல்லாம் வெந்து மேலே மிதந்து வந்தபிறகு, கரைத்த அரிசி&பருப்புக் கலவையைச் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டும் இறக்கலாம்.
Post a Comment