இஞ்சிக்கு மிஞ்சினது எதுவுமே இல்ல ! வயித்துக் கோளாறுகளை விரட்டியடிக்கணுமா..? வழிமுறை இதோ...
'நொறுங்க தின்னா... நூறு வயசு'னு சொலவடை சொல்லுவாங்க ஊர...
https://pettagum.blogspot.com/2013/06/blog-post_8575.html?m=0
ஆறு மாசத்துல இருந்து மூணு வயசு வரை உள்ள கொழந்தைங்களுக்கான வைத்தியம்...
பேய்மிரட்டி இலை - 4, சீரகம் - கால் ஸ்பூன்... இது ரெண்டையும் ராத்திரியே ஒரு சட்டியில போட்டு, அரை டம்ளர் தண்ணி விட்டு கொதிக்க வைங்க. மறுநாள் காலை யில எடுத்து பிழிஞ்சி, ஒரு பாலாடை அளவு கொழந்தைங்களுக்கு கொடுத்தா... வயிறு சம்பந்தமான பிரச்னையெல்லாம் பட்டுனு காணாம போகும்.
அடுத்தது, பெரியவங்களுக்கான வைத்தியம்...
பிரண்டைத்தண்டு. நல்ல இளந்தண்டா 10 கணு எடுத்துக்கோங்க. அதை நல்லெண்ணெய் விட்டு வதக்கி... புளி, உப்பு, காஞ்ச மிளகாய், வறுத்த உளுந்தம்பருப்பு சேர்த்து அரைச்சி சாப்பிட்டீங்கனாலும் கோளாறு போயே போயிரும். அதுமட்டுமில்ல... சாப்பாடும் கூட கொஞ்சம் இழுக்கும்.
வயித்து உப்புசம், திடீர் வயித்துவலினு சிலர் படாத பாடுபடுவாங்க. உடனே ஒரு கைப்பிடி முருங்கை இலையை உருவுங்க, காம்பெல்லாம் தள்ளிட்டு... கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நல்லா கசக்குங்க. அதுல வர்ற சாறை அப்பிடியே குடிச்சிருங்க. கசக்குறப்ப கைவிரல் நடுவுல வடிஞ்சிருக்கற சாறை வயித்துல தடவுங்க, வயித்துவலி வந்த வழியைப் பாத்து ஓடியே போயிரும் ஓடி!

Post a Comment