கேன்சரைத் தடுக்கும் சோற்றுக்கற்றாழை!....பசியின்மை விலக...மலச்சிக்கல் தீர...வயிற்றுவலி குணமாக...நாட்டு வைத்தியம்!
நாட்டு வைத்தியம்! ...
https://pettagum.blogspot.com/2013/06/blog-post_3312.html?m=0
நாட்டு வைத்தியம்!
|
கேன்சரைத் தடுக்கும் சோற்றுக்கற்றாழை!
|
'பசி
வயித்தைக் கிள்ளுது'னு சிலர் சொல்லக் கேட்டிருப்பீங்க... இது
எல்லோருக்கும் இருக்கக்கூடிய, வர வேண்டிய இயற்கை நிகழ்வு. ஆனா, 'பசியே
எடுக்க மாட்டேங்குது'னு சிலர் சொல்வாங்க. இது கோளாறு. இதை கட்டாயம் சரி
செய்தாகணும். இதுக்கு கைவசம் வைத்தியம் இருக்கு.
பசியின்மை விலக...
பிரண்டைத் துவையல் இதுக்கு
கைகண்ட மருந்து. பிரண்டைத் தண்டு, தேவையான அளவு புளி, காஞ்ச மிளகாய்,
பூண்டு, உளுந்து, தேங்காய், தேவைப்பட்டா கொஞ்சம் சின்ன வெங்காயம். இது
எல்லாத்தையும் நல்லெண்ணெய் விட்டு வதக்கி, மையா அரைக்ணும். கூடவே தேவையான
அளவு உப்பு சேர்த்துக்கோங்க. சுடுசோத்துல முதல் கவளம் சாப்பிடும்போது,
இந்தத் துவையலையும் சேர்த்துச் சாப்பிடுங்க. அடுத்தமுறை பசி எடுக்கும்.
தேவைப்பட்டா இன்னொரு நாள் சேர்த்துக்கோங்க.சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் எல்லாம் சம அளவு எடுத்து பொடியாக்குங்க. அதுல கால் ஸ்பூன் அளவு எடுத்து, தேன் இல்லனா நெய் சேர்த்து காலையில வெறும் வயித்துல சாப் பிட்டு வந்தீங்கனா... சில நாள்ல 'கபகப'னு பசி எடுக்க ஆரம்பிக்கும்.
மலச்சிக்கல் தீர...
பப்பாளிப் பழத்தை தினமும் ஒரு
துண்டு சாப்பிட்டு வந்தீங்கனா... மலச்சிக்கல் சரியாகும். அதோட வயிறு
தொடர்பான சில நோய்களும்கூட குணமாகும்.
வயிற்றுவலி குணமாக...
- இன்னும் சொல்றேன்...
குறிப்பு: நாஞ்சொல்லியிருக்கற பொருளுங்கள்ல பலதும் உங்க வீட்டுலயே இருக்கும். இல்லாட்டி, நாட்டுமருந்து கடையில கிடைக்கும்.
Post a Comment