மீண்டும் ‘டெங்கு’ தப்புவது எப்படி? உஷார் டிப்ஸ்.. !
மீண்டும் ‘டெங்கு’ தப்புவது எப்படி? உஷார் டிப்ஸ்.. மழை வந்தாலே விதவிதமான காய்ச்சல்கள் பரவத் தொடங்கி, படுக்கவைத்துவிடுகிறது. '...
https://pettagum.blogspot.com/2014/11/blog-post_15.html?m=0
மீண்டும் ‘டெங்கு’ தப்புவது எப்படி? உஷார் டிப்ஸ்..
மழை வந்தாலே விதவிதமான காய்ச்சல்கள் பரவத் தொடங்கி,
படுக்கவைத்துவிடுகிறது. ''வேகமாகப் பரவுகிறது டெங்கு'', ''டெங்குவால்
அட்மிட் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு'' என்கிற செய்திகள்
கதிகலங்கவைக்கின்றன. மழைக்காலத்தின் அடையாளமாகிவரும் இந்த டெங்கு
காய்ச்சலைத் தவிர்க்க முடியுமா? டெங்கு பற்றிய முழுவிவரத்தையும், வருமுன்
காப்பதற்கான தகவல்களையும் தருகிறார் தொற்றுநோய்த் துறை மருத்துவர்
சுரேஷ்குமார்.
'ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுவால் டெங்கு காய்ச்சல்
பரவுகிறது. மற்ற காய்ச்சலைப் போல அல்லாமல், மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை
தொடர்ந்து காய்ச்சல் இருக்கும் போது ரத்தத்தில் உள்ள, பிளேட் லெட்ஸ்
(Platelets) என்ற ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறையும். மருத்துவர்
ஆலோசனையை முழுமையாகப் பின்பற்றுவதன் மூலம் நோயிலிருந்து விரைவில் குணமாகி விடலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்,
அதிகம் உடல் எடை கொண்டவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த நோயால் அதிகம்
பாதிப்படைகிறார்கள். நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழவகைகள், மோர், கஞ்சி,
நீர் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.'
மழைக்காலத்தில் அதி கரிக்கும் கொசுக்கள் டெங்கு உட்பட
இன்னும் பல காய்ச்சல்களைத் தந்துவிட்டே செல்கின்றன. கொஞ்சம் எச்சரிக்கையாக
இருந்தால், இந்த நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.
மலேரியா காய்ச்சல்
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் (Plasmodium vivax) என்ற
ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட கொசு, மனிதர்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா
மனிதர்களுக்குப் பரவுகிறது.
அதிகக் காய்ச்சலும், உடல் சில்லிட்டு ஏற்படும்
நடுக்கமும் இதன் முதல்நிலை அறிகுறிகள். தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு
போன்றவை ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும். கொசு கடித்த ஒரு சில வாரங்க
ளுக்குப் பிறகு இந்த அறிகுறிகள் வெளிப்படும். சிலருக்கு ஒட்டுண்ணி சில
மாதங்கள், சமயங்களில் வருடங்கள்கூட உடலில் அமைதியாக இருந்துவிட்டு நோய்
எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும்போது வெளிப்படும்.
எளிய ரத்தப் பரிசோதனை மூலம் மலேரியாவைக் கண்டறியலாம்.
டாக்டர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை, பரிந்துரைத்த காலத்துக்கு தவறாமல்
எடுத்துக்கொள்வதன் மூலம் மலேரியா காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம்.
டைபாய்டு காய்ச்சல் 
சாலமோனெல்லா டைபி (Salmonella typhi) என்ற
பாக்டீரியாவால் டைபாய்டு பரவுகிறது. உணவு, நீர் மூலம் பரவும் காய்ச்சல்
இது. மழைக்காலத்தில் சுகாதாரமற்ற நீர் காரணமாக குழந்தைகளுக்கு இது அதிக
அளவில் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, மலச்சிக்கல் அல்லது
வயிற்றுப்போக்கு போன்றவை டைபாய்டு காய்ச்சலின் அறிகுறிகள். இந்தக்
காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பு மருந்துகள் உள்ளன.
பாதுகாப்பான குடிநீர், உணவு, டைபாய்டு காய்ச்சல்
உள்ளவர்களிடம் நெருக்கம் தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது கைகளை கிருமி
நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், தனிநபர் சுகாதாரத்தில்
முக்கியத்துவம் கொடுத்தால், இந்தக் காய்ச்சலைத் தவிர்க்கலாம்.
எலிக்காய்ச்சல்
பாக்டீரியா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட எலியின்
சிறுநீர் மூலம் மனிதர்களுக்கு இந்தக் காய்ச்சல் பரவுகிறது. எலியின்
சிறுநீரை மிதிப்பவர்களின் சருமத்தின் வழியாக இந்தக் கிருமி உள்ளே
நுழைகிறது. கிருமி உள்ளே நுழைந்து 2 முதல் 20 நாட்களில் பாதிப்பை
வெளிப்படுத்தும். இந்தக் கிருமித் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல்,
குளிர், தசைவலி, கண் சிவத்தல், வாந்தி, மஞ்சள் காமாலை, வயிற்றுவலி,
வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதன் அறிகுறிகள் டெங்கு,
மலேரியா போலவே இருக்கும். எலிக்காய்ச்சலை ரத்தப் பரிசோதனை மூலம்
கண்டறியலாம். டாக்டர் பரிந்துரையின்படி, ஆன்டிபயாடிக் மருந்துகள்
எடுத்துக்கொள்வதன் மூலம் இந்தக் காய்ச்சலில் இருந்து தப்பலாம்.
மழைக்காலத்தில் எப்போதும் செருப்பு அணிந்து செல்ல
வேண்டும். வெளியே சென்று வீடு திரும்பியதும் கால்களை வெதுவெதுப்பான நீரில்
நன்கு கழுவ வேண்டும்.
மழைக்காலத்தில் குழந்தை பராமரிப்பு டிப்ஸ்...
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக
இருப்பதால், மழைக்கால நோய்கள் எளிதில் தாக்கும். நோய் பாதிக்கப்பட்ட
குழந்தைகள், சிகிச்சைகளை எதிர்கொண்டு மீண்டு வருவதற்குள் அதிக சிரமங்களை
சந்திக்க வேண்டியிருக்கும். பெற்றோர் கொஞ்சம் பாதுகாப்பாக இருப்பதன் மூலம்
குழந்தைகளை இந்த நோய்களில் இருந்து காப்பாற்ற முடியும்.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:
கொசுக்கள் மாயமாகும்!
டெங்குவை தடுக்க செய்ய வேண்டியவை...
'கொசு’று தகவல்!
ஒன்பது வகை மூலிகையால் செய்யப்பட்ட நிலவேம்பு குடிநீர்
சூரணம், அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் இலவசமாக
வழங்கப்படுகிறது. இது டெங்குவுக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட்டு, நோய்
எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. நொச்சி செடி இருக்கும் இடத்தில்
கொசுக்கள் வர முடியாது என்பதால், கொசுக்களை அழிக்கும் பொருட்டு சென்னை
மாநகராட்சி, மக்களுக்கு நொச்சிச் செடியை வழங்கி வருகிறது.
டெங்கு காய்ச்சல் குறித்த சந்தேகங்களை கேட்க, தகவல்களை
பெற கட்டணமில்லா தொலைபேசி 104 மூலமும், 04424334810, 04424350496 என்ற
தொலைபேசி எண்கள் மூலமும், 94443 40496, 93614 82898 என்ற செல்போன் எண்கள்
மூலமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
டெங்கு காய்ச்சலிலிருந்து மீள சித்த மருத்துவத்தில்
சிறப்பான சிகிச்சை இருக்கிறது'' என்கிறார் சித்த மருத்துவர் நந்தினி
சுப்பிரமணி.
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு மிகச் சிறந்த மூலிகை.
நிலவேம்பு, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தி, டெங்கு வைரஸ்
தாக்கத்தினால், கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுப் பொருட்களைக் களைந்து,
கல்லீரலைப் பலப்படுத்தும். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு
மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் கொடுக்கக் கூடாது.

Post a Comment