விஷக்கடி... விரட்டி அடி! --ஹெல்த் ஸ்பெஷல்,
விஷக்கடி... விரட்டி அடி! வி மானத்தில் ஒருவரை தேள் கொட்டியதால், அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்ட செய்தியை சமீபத்தில் படி...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_5276.html?m=0
விஷக்கடி... விரட்டி அடி!
தேள்களில் சுமார் 2,000 வகைகள் இருந்தாலும் 25 முதல் 40 வகையானவைதான் ஆபத்தானவை. விஷத்தன்மையும் தேளுக்கு தேள் மாறுபடும். ஒருவரை தேள் கொட்டிவிட்டால், அந்தப் பகுதியை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர் கொட்டுப்பட்ட இடத்துக்கு அருகில் மோதிரம், மெட்டி, வளையல் போன்ற ஆபரணங்கள் ஏதேனும் அணிந்திருந்தால், அவற்றை அகற்றிவிட வேண்டும். காரணம், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள திசுக்கள் வீங்க முடியாமல் போனால், ரத்த ஓட்டத்தைத் தடை செய்யக்கூடும். ஐஸ் கட்டிகளை 10 நிமிடங்கள் வைத்து லேசாக அழுத்தலாம். பின்னர் ஐஸ் கட்டியை எடுத்துவிட்டு, 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் ஐஸ் ஒத்தடம் தரலாம். வலி நிவாரணிகள் எதையும் பயன்படுத்தக் கூடாது. கொட்டுப்பட்ட இடத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் மட்டுமே, ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுக்கலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் கீறுவதோ, வாயை வைத்து உறிஞ்சுவதோ கூடாது.
கொட்டிய தேள் என்ன வகை என்று தெரிந்தால், சிகிச்சைக்கு அது உதவியாக இருக்கும். எனவே, கொட்டிய தேளை ஒரு டப்பாவில் போட்டு மருத்துவரிடம் காட்டலாம். தேள் கொட்டிவிட்டால் என்ன செய்வது என்பதைத் தெரிந்துகொள்வது எந்த அளவு முக்கியமோ, அதே அளவு தேள் கடியே ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.
துணிமணிகள், கை உறைகள் மற்றும் கால் உறைகள், ஷூக்கள் போன்றவற்றை அணிவதற்கு முன் நன்கு உதறிவிட்டுப் பயன்படுத்தினால் தேள் கடி ஏற்படாமல் தப்பலாம். தேள்களுக்கு இரையாகும் சிறு பூச்சிகள், கரப்பான், பல்லி போன்றவை வீட்டுக்குள் இல்லாமல் பார்த்துக்கொண்டால், தேளே வீட்டை நெருங்காது.
பூரான்: பெரிய சைஸ் பூரான்கள் விஷத்தன்மைகொண்டவை. இவை கடித்தால், தலைவலி, மயக்கம், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். கடி வாயில் வீக்கமும் இருக்கும். உடனடியாக மருத்துவச் சிகிச்சை அளிக்காவிட்டால், அது சீரியஸான விளைவுகளை ஏற்படுத்தும். ஐஸ் கட்டிகளை வைப்பதுதான் உடனடி முதல் உதவி.
கொட்டிய குளவியின் கூர்மையான முள் போன்ற உறுப்பு சில சமயம் தோலில் புதைந்திருக்கலாம். மருத்துவரின் உதவியோடு அதனை அகற்றிவிட வேண்டும்.
தேனீ: தேனீ கொட்டிய இடத்தை நன்கு கழுவி, கொட்டிய கொடுக்கு இருந்தால் அதை நீக்கி, ஐஸ்
குளவிக் கூடுகளையோ, தேன் கூட்டையோ தேவை இல்லாமல் கலைக்கக் கூடாது. பழ மரங்கள், பூந்தோட்டங்கள் நிறைந்த பகுதிகளில் தேனீ மற்றும் குளவிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே, மேற்படி இடங்களுக்குச் செல்லும்போது அடர் வண்ணத்திலான ஆடைகள் அணிந்து செல்ல வேண்டாம்; வாசனைத் திரவியங்களையும் தவிர்க்க வேண்டும். முழுக்கை மற்றும் முழுக்கால் ஆடைகளுடன், தகுந்த காலணிகளையும் அணிந்து செல்வதே பாதுகாப்பானது.'

1 comment
எங்கள் மரத்தில் தேனீ கூடு உள்ளது விடிய காலையில் விளக்கு வெளிச்சத்திற்கு அதிகமாக வருகின்றன எனவே எங்களையும் கொட்டுவதண்டு அதை விரட்ட வலி என்ன.இனிமே வராமல் இருப்பதற்கு என்ன செய்ய
Post a Comment