தெரிந்து கொள்ளுங்கள்... சமையல் அரிச்சுவடி,
காய்கறிகளை தண்ணீர் ஊற்றி, அப்படியே வேக வைக்கக் கூடாது. சாம்பார் கொதிக்கும் @பாது போட வேண்டும். அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் போகாமலிருக்க...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_1128.html?m=0
காய்கறிகளை தண்ணீர் ஊற்றி, அப்படியே வேக வைக்கக் கூடாது. சாம்பார் கொதிக்கும் @பாது போட வேண்டும். அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் போகாமலிருக்கும். சமைத்த சாம்பாரையோ, ரசத்தையோ, இரண்டாவது முறை திரும்ப அடுப்பில் வைத்து சுட வைக்கக் கூடாது. ருசி கெட்டு விடும். உடம்புக்கும் கெடுதல்; சத்தும் போய்விடும். அரிசியையும், பருப்பையும் கலந்து, வாசனை வரும்வரை வறுத்து, களைந்து போட்டு, வெண் பொங்கலோ, சர்க்கரைப் பொங்கலோ செய்தால், பொங்கல் சீக்கிரமாக வெந்து விடும். வாசனையாகவும் இருக்கும். தனி ருசியுடன் இருக்கும். ரசத்துக்கு புளி கரைக்கும் போது சிறிது வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்தால், ரசம் தனி ருசியுடன் இருக்கும்.
Post a Comment