ஏகபாத சலபாசனம்--ஆசனம்
செய்முறை... சிலருக்குத் தொடைகளுக்குக் கீழே கைமுஷ்டிகளை தாக்குக் கொடுத்துக்கொண்டாலும் இரண்டு கால்களையும் மேலே உயர்த்த முடியாமலிருக்க...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_23.html?m=0
செய்முறை...
சிலருக்குத்
தொடைகளுக்குக் கீழே கைமுஷ்டிகளை தாக்குக் கொடுத்துக்கொண்டாலும் இரண்டு
கால்களையும் மேலே உயர்த்த முடியாமலிருக்கும். இப்படிப்பட்டவர்கள் முதலில்
விரிப்பில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். இரு கைகளையும் உடலோடு ஒட்டி
வைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் மூச்சை அடக்கியபடி
வலது காலை மட்டும் உயர்த்த வேண்டும். இதே நிலையில் 5 வினாடிகள் இருந்து
பின் பழைய நிலைக்கு வரவும். அடுத்து இடது காலில் செய்யவும். இவ்வாறு 4
முதல் 5 முறை செய்ய வேண்டும்.
பயன்கள்...
இவ்வாசனம்
உடம்பின் நரம்பு மண்டலத்தில் வலுவாக இயங்கி, ஒரே சமயத்தில் நரம்பு மண்டலம்
முழுவதையும் சுறுசுறுப்படையச் செய்கிறது. இடைநரம்பு, பிங்கலைநரம்பு என்று
சொல்லப்படும் இடதுகால் நரம்பையும், வலதுகால் நரம்பையும் இயக்கி இவற்றோடு
தொடர்புடைய நரம்பு மண்டலத்தின் எல்லாப் பகுதிகளையும் சுறுசுறுப்பும்
வலிமையும் பெறச்செய்கிறது.
Post a Comment