இறால் மஞ்சள் வாடா---சமையல் குறிப்புகள்
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல் தேவையான பொருட்கள் அரிசிமாவு - 1 கப் தேங்காய் - 1/2 மூடி (துறுவியது) மஞ்சள் தூள் - ...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_5437.html?m=0
இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல்
தேவையான பொருட்கள்
அரிசிமாவு - 1 கப்
தேங்காய் - 1/2 மூடி (துறுவியது)
மஞ்சள் தூள் - சிறிது
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவைக்கு
உள் அடக்கத்துக்கு
வெங்காயம் - 5
பச்சைமிளகாய் - 4 பொடியாக நறுக்கியது
தேங்காய்பூ - 1/4 மூடி (துறுவியது)
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - சிறிது
கருவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மாசித்தூள் - 1 தேக்கரண்டி
இறால் - 15 -20
முதலில் வாடாவிற்க்கு உள்ளே வைக்கும் அடக்கத்தினை தயார் செய்துக்கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய்,கருவேப்பிலை,மஞ்சள்தூள்,உப்பு, இறால் இவற்றை சேர்த்து கிளறி வைக்கவும்
* கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு கிளறிய கலவையினை சேர்க்கவும். இதோடு துருவிய தேங்காய், மாசித்தூள், உப்பு சேர்க்கவும்
* இந்த கலவையினை ஆற வைக்கவும்.
வாடா செய்ய:
* ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, தேங்காய் பூ, மஞ்சள்த்தூள், உப்பு போட்டு தேவைக்கு சூடு நீர் ஊற்றி கிளறி விடவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும்
வாடா தட்டும் முறை:
ஒரு பலகையில் சுத்தமான காட்டன் துணியை விரித்து அதில் ஒரு சிறு உருண்டை மாவை எடுத்து உள்ளங்கை அளவு வட்டமாக தட்டவும்.
* மாவை தட்டும் போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு அந்த தண்ணீரை தொட்டு தட்டவும்.
ஒரு பலகையில் சுத்தமான காட்டன் துணியை விரித்து அதில் ஒரு சிறு உருண்டை மாவை எடுத்து உள்ளங்கை அளவு வட்டமாக தட்டவும்.
பின் இன்னொரு சிறு உருண்டை மாவை எடுத்து இதே போல தட்டி ஒரு தட்டிய வட்டத்தின் மேல் செய்து வைத்த இறால் அடக்கத்தினை ஒரு கரண்டி அளவு வைத்து அதன் மேல் தட்டி வைத்த மற்றொரு வட்டத்தை வைத்து விரலில் தண்ணீர் தொட்டுக்கொண்டு சுற்றிவர ஒட்டிவிடவும்.
பிரிந்து வராதது போல் எல்லா பக்கமும் தண்ணீர் தொட்டு ஓட்டவும்
இதே போல் எல்லா மாவையும் வட்டங்களாக தட்டி வாடா வாக தட்டவும்
* பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி தீயை மிதமானதாக வைத்து தட்டிவைத்த வாடாவை போட்டு பொரித்து எடுக்கவும்
மிகவும் சுவையான காயல் ஸ்பெஷல் மஞ்சள் வாடா தயார். நோன்பு நேரங்களில் கறிக் கஞ்சியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
தேவையான பொருட்கள்
அரிசிமாவு - 1 கப்
தேங்காய் - 1/2 மூடி (துறுவியது)
மஞ்சள் தூள் - சிறிது
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவைக்கு
உள் அடக்கத்துக்கு
வெங்காயம் - 5
பச்சைமிளகாய் - 4 பொடியாக நறுக்கியது
தேங்காய்பூ - 1/4 மூடி (துறுவியது)
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - சிறிது
கருவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மாசித்தூள் - 1 தேக்கரண்டி
இறால் - 15 -20
முதலில் வாடாவிற்க்கு உள்ளே வைக்கும் அடக்கத்தினை தயார் செய்துக்கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய்,கருவேப்பிலை,மஞ்சள்தூள்,உப்பு, இறால் இவற்றை சேர்த்து கிளறி வைக்கவும்
* கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு கிளறிய கலவையினை சேர்க்கவும். இதோடு துருவிய தேங்காய், மாசித்தூள், உப்பு சேர்க்கவும்
* இந்த கலவையினை ஆற வைக்கவும்.
வாடா செய்ய:
* ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, தேங்காய் பூ, மஞ்சள்த்தூள், உப்பு போட்டு தேவைக்கு சூடு நீர் ஊற்றி கிளறி விடவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும்
வாடா தட்டும் முறை:
ஒரு பலகையில் சுத்தமான காட்டன் துணியை விரித்து அதில் ஒரு சிறு உருண்டை மாவை எடுத்து உள்ளங்கை அளவு வட்டமாக தட்டவும்.
* மாவை தட்டும் போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு அந்த தண்ணீரை தொட்டு தட்டவும்.
ஒரு பலகையில் சுத்தமான காட்டன் துணியை விரித்து அதில் ஒரு சிறு உருண்டை மாவை எடுத்து உள்ளங்கை அளவு வட்டமாக தட்டவும்.
பின் இன்னொரு சிறு உருண்டை மாவை எடுத்து இதே போல தட்டி ஒரு தட்டிய வட்டத்தின் மேல் செய்து வைத்த இறால் அடக்கத்தினை ஒரு கரண்டி அளவு வைத்து அதன் மேல் தட்டி வைத்த மற்றொரு வட்டத்தை வைத்து விரலில் தண்ணீர் தொட்டுக்கொண்டு சுற்றிவர ஒட்டிவிடவும்.
பிரிந்து வராதது போல் எல்லா பக்கமும் தண்ணீர் தொட்டு ஓட்டவும்
இதே போல் எல்லா மாவையும் வட்டங்களாக தட்டி வாடா வாக தட்டவும்
* பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி தீயை மிதமானதாக வைத்து தட்டிவைத்த வாடாவை போட்டு பொரித்து எடுக்கவும்
மிகவும் சுவையான காயல் ஸ்பெஷல் மஞ்சள் வாடா தயார். நோன்பு நேரங்களில் கறிக் கஞ்சியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
Post a Comment