ப்ரகாசமான முகத்திற்க்கு -- அழகு குறிப்புகள்.
வரண்ட சருமத்திற்க்கு தினமும் இரவில்,கைகள் கால்கள் பாதங்கள் போன்ற இடங்களில்,ஆலிவ் எண்ணையை தடவி வர, வரண்ட சருமம்-பட்டு போல் மாறி விடும் சுருக...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_6432.html?m=0
வரண்ட சருமத்திற்க்கு
தினமும் இரவில்,கைகள் கால்கள் பாதங்கள் போன்ற இடங்களில்,ஆலிவ் எண்ணையை தடவி வர, வரண்ட சருமம்-பட்டு போல் மாறி விடும்
சுருக்கங்களை போக்க
முட்டையின் வெள்ளையை தேன் கலந்து,முகத்தில் தடவி,பின் 15நிமிடம் கழித்து கழுவிவிடவும்.
வழ வழ முகம்
பழுத்த வாழை பழத்தைப் பாலோடு கலந்து,பிசைந்து,முகம் கழுத்து கைகள்ளில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்
ப்ரகாசமான முகத்திற்க்கு
ஆரஞ்சு பழத்தோல் பொடியை,தயிரில் கலந்து முகம்,கழுது பகுதிகளில் தடவிவர,பளிச்சென ப்ரகாசமாய் சிவப்பழகுடன் மாறி விடும் முகம்!
முக்கியமான அழகுக்குறிப்பு
எப்போதும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருங்கள்!!! அந்த ஒரு சிரிப்பே நம்மை உலக அழகியாக்கிவிடும்!!!
முகச் சுருக்கம் நீங்க காரட் உதவுகிறது. முதலில் ஆலிவ் எண்ணெயினால் முகத்தை மஸாஜ் செய்ய வேண்டும். பின்னர் முகத்தைக் கழுவாமல் ஒரு காரட் சாற்றுடன் கடலைமாவு இரண்டு ஸ்பூன் கலந்து பூசி அரைமணி நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் ஒரு மாதத்தில் நல்ல பலன் தெரியும்.
Post a Comment