செடி,கொடி,மரம் வளர்ப்பவர்களுக்கான டிப்ஸ்
1. செடிகளுக்கு விடப்படும் தண்ணீர் மிகவும் உப்பு தண்ணீராக இருக்க கூடாது. 2. தொட்டிகளில் செடியை வளர்ப்பவர்கள் குறிப்பாக ஒன்று முதல் ஒன்றரை அ...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_5447.html?m=0
1. செடிகளுக்கு விடப்படும் தண்ணீர் மிகவும் உப்பு தண்ணீராக இருக்க கூடாது.
2. தொட்டிகளில் செடியை வளர்ப்பவர்கள் குறிப்பாக ஒன்று முதல் ஒன்றரை அடி ஆழமன சிமென்டு தொடிகளை பயன் படுத்தினால் திரும்ப திரும்ப செடிகளை நடுவதற்கு வசதியாக இருக்கும். தொட்டிகளில் செம்மண், மணல், கார்டன்ப்ளூம் உரத்தை கலக்கவும்.
3. செடிகளுக்கு காலையிலும், மாலையிலும் தண்ணீர் விடவும். இயற்கை உரங்களைப் போடு வளர்க்கப்படும் செடிகளில் வளரும் காய்கள், சுவையாக இருப்பதோடு உடல் எஅலத்திற்கும் மிக நல்லவை
4. முருங்கை மரம் பூக்காமல் இருந்தால் மரத்தை சுற்றி செல்லும் பெரிய வேர்களில் மணலை நீக்கி விட்டு வேரின் பட்டையை பிள்ந்து அதன் இடுக்கில் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் வைத்து மறுபடியும் பிளந்த பட்டையைமூடி மறுபடியும் வேரை மூடி விட வேண்டும்.15 நாட்களில் பூ மொட்டுகள் கட்டி விடும்.
5. பூத்த முருங்கை பூக்கள் காய்விடாமல் உதிர்ந்தால் பழைய அணிகள் 10 எடுத்து அடி மரத்தில் ஆங்காங்கே முழுவதுமாக உள்ளே செல்லும் படி ஆணியடித்து விட வேண்டும்.விரைவில் காய்கள் தொங்கும்.
6. தக்காளி, வெண்டை, பசை மிளகாய் போன்ற காய்கறி செடிகளுக்கு டீத்தூள், முட்டை ஓடு,மக்கிய காய்கறி கழிவுகளை உரமாக போடலாம்
7. அவரை கொடி பூக்காமல் இருந்தால் இலைகலை இடையிடையே உருவி எடுத்து விட்டால்பூக்கள் பூத்து காய்கள் காய்க்கத்தொடங்கும்.
8. கருவேப்பிலை செடி காய்ந்து விட்டால் அந்த இடத்தை பறித்து விட்டால் உடனே துளி விட்டு படர்ந்து வளரும்
9. எழுமிச்சை மரத்திற்கு மீன் கழிவுகளை போட்டால் செழித்து வளரும் காயும் காய்த்து விடும்.
10.வீட்டுத் தோட்டத்தில் கொய்யா, மா, சப்போட்டா இருந்தால் முதல் இரண்டு வருடம் பூக்கும் பூக்களை உருவி விட்டல் பின்னல் நன்றக காய்க்கும்
Post a Comment