முந்திரி உருண்டை--சமையல் குறிப்புகள்
முந்திரி உருண்டை தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, உளுத்தம்பருப்பு - 50கிராம், பச்சைப் பயறு - கால் கிலோ, ஏலக்காய் - 3, வெல்லம் - 300 கிராம் ...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_13.html?m=0
முந்திரி உருண்டை
தேவையானவை:
பச்சரிசி - கால் கிலோ,
உளுத்தம்பருப்பு - 50கிராம்,
பச்சைப் பயறு - கால் கிலோ,
ஏலக்காய் - 3,
வெல்லம் - 300 கிராம் (பொடித்துக் கொள்ளவும்),
சர்க்கரை - 50கிராம்,
தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்),
எள் - 25கிராம்,
முந்திரி - 25கிராம் (பொடியாக உடைத்துக் கொள்ளவும்),
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியாக ஊற வைத்து தோசை மாவு போல் அரைத்து வைக்கவும். பச்சைப் பயறை வறுத்து ஆற வைத்து, மிக்ஸியில் நைஸாக பொடித்து வைக்கவும். எள்ளை வெறும் வாணலியில் வறுத்தெடுக்கவும். தேங்காய் துருவலை சிறிது நேரம் வதக்கி பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். பொடித்த வெல்லத்தை பாத்திரத்தில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பெரிய தாம்பாளம் அல்லது பேசின் எடுத்து வறுத்து பொடித்த பச்சைப் பயறு மாவு, வறுத்த எள்ளு, வதக்கிய தேங்காய், பொடித்த முந்திரி, தூள் செய்த ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் வெல்லக்
கரைசலை இதனுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனை கோலி உருண்டைகள் போல பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
அரைத்த பச்சரிசி - உளுத்தம்பருப்பு மாவில் சிறிது உப்பு சேர்க்கவும். பின் உருண்டைகளாக மாவில் முக்கியெடுத்து, காய்ந்த எண்ணெயில் போட்டு நன்கு வெந்தவுடன் எடுத்து ஆற வைத்து சாப்பிடவும்.
இது உள்ளே மென்மையாகவும் வெளியே மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
Post a Comment