கால்நடைகளைத் தாக்கும் வெப்ப நோய்கள்... கைகொடுக்கும் பாரம்பர்ய மருத்துவம்!
த ற்போது நிலவிவரும் கோடைப்பருவத்தில்... வெப்பநிலை அதிகரிப்பால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்கும் முறைகள் குறித்துத் தஞ்சாவூ...
https://pettagum.blogspot.com/2018/05/blog-post_27.html?m=0
தற்போது நிலவிவரும் கோடைப்பருவத்தில்...
வெப்பநிலை அதிகரிப்பால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்கும் முறைகள் குறித்துத்
தஞ்சாவூரில் உள்ள மரபுசார் கால்நடை மூலிகை மருத்துவ
மையத்தின் முன்னாள் தலைவரும் கால்நடை மருத்துவருமான புண்ணியமூர்த்திச் சொன்ன விஷயங்கள்
இங்கே இடம்பிடிக்கின்றன.
“கோடைக்காலத்தில் ஏற்படும் நோய்களை
நம்முடைய பாரம்பர்ய மருத்துவம் மூலமே குணப்படுத்த முடியும். வழக்கமாக மாடுகளுக்குக்
கோடைக்காலத்தில் அயற்சி ஏற்படும்.
இதற்கு மாடுகள் நிற்கும் இடத்தில் குறைந்தபட்சம் 25 அடி சுற்றளவுக்கு நிழல் இருந்தால்தான் கால்நடைகளை வெப்பம்
தாக்காமல் பாதுகாக்க முடியும்.
ஹெச்.எஃப் போன்ற கலப்பின மாடுகள், 4 டிகிரி முதல்
21 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலையைத்தான்
தாங்கும். அதனால், அவற்றை மலைப்பிரதேசங்களில் மட்டுமே
வளர்க்க முடியும். சமவெளிப்பகுதியில் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளுக்குக்
கோடைக்காலத்தில் நான்கைந்து முறை தண்ணீர் குடிக்க
விட வேண்டும். இரவு எட்டு மணியளவில் கால்நடைகளுக்குத் தாகம் அதிகமாக இருக்கும். இந்த
நேரத்தில் அவசியம் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
வெந்தயத்தை ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, மாவாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாட்டுக்கு ஒரு கைப்பிடி வெந்தய மாவு என்ற அளவில், தீவனத்தில் கலந்து கொடுத்துவந்தால் மாடுகளின் உடல் குளிர்ச்சியடையும். அதேபோல ஒரு மாட்டுக்கு ஒரு கைப்பிடி அளவு பெருநெல்லிக்காயை இடித்துத் தீவனத்தில் கலந்துகொடுக்கலாம். நெல்லிக்காய்க்குப் பதிலாக ஒரு கைப்பிடி நெல்லி வற்றலைத் தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்தும் கொடுக்கலாம். தினமும் ஒரு கட்டு வீதம் அகத்திக்கீரை, 2 மொந்தன் வாழைப்பழம் எனக் கொடுத்து வந்தால் மாடுகளை வெப்ப நோய்களிலிருந்து காப்பாற்றலாம்.கோடைக்காலத்தில் மாடுகளுக்கு மடி அம்மை நோய் வர வாய்ப்புகள் உண்டு. இந்த நோய் வந்தால், மாடுகளின் மடியில் கொப்புளங்கள் உருவாகி மாடுகள் பாதிக்கப்படும். ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள், பூண்டு 2 பல், தலா ஒரு கைப்பிடி துளசி, வேப்பிலை, திருநீற்றுப்பச்சிலை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து... வெண்ணெயில் குழைத்து, தினமும் மூன்று வேளைகள் மடியில் தடவிவந்தால் மடி அம்மை குணமாகும். ஆடுகளுக்கு அம்மை நோய் தாக்கினாலும் இதே மருந்தைப் பயன்படுத்திக் குணமாக்கலாம்.
தலா ஒரு ஸ்பூன் வெந்தயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதோடு 2 பூண்டு, 1 ஸ்பூன் மஞ்சள்தூள், 2 கைப்பிடி நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றை அரைத்துச் சேர்க்க வேண்டும். அக்கலவையுடன் ஒரு மூடி தேங்காய் துருவல் சேர்த்துப் பிசைந்து மாடுகளுக்குத் தினமும் ஒருவேளை வீதம் 3 நாள்களுக்குக் கொடுத்தால்... வாய்ப்புண், காய்ச்சல் மற்றும் கோமாரி உள்ளிட்ட பாதிப்புகள் வராது.
கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோயைத்தடுக்க... ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி கீழாநெல்லி ஆகியவற்றை இடித்துத் தூளாக்கி, தனியாகவோ அல்லது அரிசி குருணையோடோ கலந்து கொடுக்க வேண்டும். இது 10 கோழிகளுக்கான அளவு. 3 முதல் 5 நாள்களுக்குக் கொடுத்துவந்தால் போதுமானது.”
தொடர்புக்கு, கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி, செல்போன்: 98424 55833.
வெந்தயத்தை ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, மாவாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாட்டுக்கு ஒரு கைப்பிடி வெந்தய மாவு என்ற அளவில், தீவனத்தில் கலந்து கொடுத்துவந்தால் மாடுகளின் உடல் குளிர்ச்சியடையும். அதேபோல ஒரு மாட்டுக்கு ஒரு கைப்பிடி அளவு பெருநெல்லிக்காயை இடித்துத் தீவனத்தில் கலந்துகொடுக்கலாம். நெல்லிக்காய்க்குப் பதிலாக ஒரு கைப்பிடி நெல்லி வற்றலைத் தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்தும் கொடுக்கலாம். தினமும் ஒரு கட்டு வீதம் அகத்திக்கீரை, 2 மொந்தன் வாழைப்பழம் எனக் கொடுத்து வந்தால் மாடுகளை வெப்ப நோய்களிலிருந்து காப்பாற்றலாம்.கோடைக்காலத்தில் மாடுகளுக்கு மடி அம்மை நோய் வர வாய்ப்புகள் உண்டு. இந்த நோய் வந்தால், மாடுகளின் மடியில் கொப்புளங்கள் உருவாகி மாடுகள் பாதிக்கப்படும். ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள், பூண்டு 2 பல், தலா ஒரு கைப்பிடி துளசி, வேப்பிலை, திருநீற்றுப்பச்சிலை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து... வெண்ணெயில் குழைத்து, தினமும் மூன்று வேளைகள் மடியில் தடவிவந்தால் மடி அம்மை குணமாகும். ஆடுகளுக்கு அம்மை நோய் தாக்கினாலும் இதே மருந்தைப் பயன்படுத்திக் குணமாக்கலாம்.
தலா ஒரு ஸ்பூன் வெந்தயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதோடு 2 பூண்டு, 1 ஸ்பூன் மஞ்சள்தூள், 2 கைப்பிடி நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றை அரைத்துச் சேர்க்க வேண்டும். அக்கலவையுடன் ஒரு மூடி தேங்காய் துருவல் சேர்த்துப் பிசைந்து மாடுகளுக்குத் தினமும் ஒருவேளை வீதம் 3 நாள்களுக்குக் கொடுத்தால்... வாய்ப்புண், காய்ச்சல் மற்றும் கோமாரி உள்ளிட்ட பாதிப்புகள் வராது.
கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோயைத்தடுக்க... ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி கீழாநெல்லி ஆகியவற்றை இடித்துத் தூளாக்கி, தனியாகவோ அல்லது அரிசி குருணையோடோ கலந்து கொடுக்க வேண்டும். இது 10 கோழிகளுக்கான அளவு. 3 முதல் 5 நாள்களுக்குக் கொடுத்துவந்தால் போதுமானது.”
தொடர்புக்கு, கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி, செல்போன்: 98424 55833.
‘‘அஞ்சறைப் பெட்டியிலேயே
மருந்துகள் இருக்கு!’’
மாடுகளுக்குப் பாரம்பர்ய முறை மூலம் வைத்தியம் செய்துகொள்கிறார், தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மகேஷ். ஒரு காலைவேளையில் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த மகேஷைச் சந்தித்தோம்.
மாடுகளுக்குப் பாரம்பர்ய முறை மூலம் வைத்தியம் செய்துகொள்கிறார், தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மகேஷ். ஒரு காலைவேளையில் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த மகேஷைச் சந்தித்தோம்.
“என்கிட்ட எட்டு நாட்டு மாடுகள்
இருக்கு. தினமும் காலையில 8 மணிக்குள்ள மாடுகளைக் குளிப்பாட்டிடுவேன்.
வெயில் வந்த பிறகு குளிப்பாட்டினால், சூட்டைக் கிளப்பிடும். தினமும் குளிப்பாட்டினாலே
உடம்புல உஷ்ணம் அதிகமாகுறதைத் தவிர்த்துடலாம்.
கோடைக்காலத்துல பத்து மணிக்குள்ள மேய்ச்சலை முடிச்சிடுவோம். பிறகு சாயந்தரம் 4 மணிக்கு மேலதான் மேய்ச்சலுக்கு விடுவோம். அதனால, வெப்பத்துல இருந்து மாடுகளைக்
காப்பாத்திட முடியுது. நான் ஏழு வருஷமா என்னோட மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்தான் செஞ்சுக்கிட்டுருக்கேன். வீட்டு
அஞ்சறைப்பெட்டியிலேயே ஆடு மாடுகளுக்குத் தேவையான பாதி மருந்துகள் இருக்கு.
கோடைக்காலத்துல
மாடுகளுக்குக் காய்ச்சல் வர வாய்ப்பிருக்கு. 10 கிராம் மஞ்சள்தூள், 10 கிராம் மிளகு, 10 கிராம் வெந்தயம், 10 கிராம் சீரகம், 2 பூண்டு, ஒரு கைப்பிடி வேப்பிலை, ஒரு கைப்பிடித் துளசி, 5 வெற்றிலை, 100 கிராம் நாட்டுச்சர்க்கரை, ஒரு கைப்பிடி திருநீற்றுப்பச்சிலை
எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து அரைச்சுக்
கொடுத்தா காய்ச்சல் குணமாகிடும். இது ஒருவேளைக்கான அளவு. இது மாதிரி தினமும் ரெண்டு வேளைனு, மூணு நாள் கொடுத்தால் போதும்.
மாடுகளுக்கு
மடிவீக்க நோய் வந்தால், 30 சோற்றுக்கற்றாழை மடல்கள், 20 கிராம் மஞ்சள் தூள், ஒரு சுண்டைக்காய் அளவு சுண்ணாம்பு
மூணையும் சேர்த்து நல்லா அரைச்சு மடியில தடவணும்.
தினமும் 3 வேளை 3 நாள்களுக்குத் தடவிவந்தால் மடிநோய் குணமாகிடும்” என்றார்.
தொடர்புக்கு, மகேஷ், செல்போன்: 87549 69831.
தொடர்புக்கு, மகேஷ், செல்போன்: 87549 69831.
Post a Comment