இஃப்தார் நோன்பு ஸ்பெஷல்! வெஜிடபிள் குமூஸ் ராப் !
இ ஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பிருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மிக ஈர...
https://pettagum.blogspot.com/2017/05/blog-post_51.html?m=0
இஸ்லாமிய
மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பிருப்பது
கடமையாக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மிக
ஈர்ப்பு... இவையே நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கம். சூரிய உதயத்துக்கு
முன்பாகவே (காலை 5 மணி வாக்கில்) நோன்பு தொடங்கிவிடும்.
சூரியன் அஸ்தமனமான பிறகு (மாலை 6 மணி வாக்கில்) நோன்பை முடித்துக்கொள்வது வழக்கம். நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ என பெயர். இஃப்தாரில் உண்ணுவதற்கான சிறப்பு உணவுகளின் ரெசிப்பிகளை அளிக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசீனா செய்யது.
------------------------------------------------------------------------------------------------------------------------
வெஜிடபிள் குமூஸ் ராப்
தேவையானவை:
சப்பாத்தி - 6
முட்டையின் வெள்ளைக் கரு - 2
எண்ணெய் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
பூரணம் செய்ய:
கேரட் - 2 (பொடியாக நறுக்கவும்)
பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப்
நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப்
உரித்த பச்சைப் பட்டாணி – அரை கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டுப் பல் - 2 (தட்டவும்)
ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
குமூஸ் செய்ய:
செய்த பூரணம் - முக்கால் கப்
பூண்டு - 3 பல்
சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன்
கெட்டித் தயிர் - அரை கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, பூண்டு, வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும், இதனுடன் காய்கறிகள், உப்பு, ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதுவே பூரணம். தயிரைத் துணியில் போட்டு மூட்டை போல கட்டி மூன்று மணி நேரம் தொங்கவிடவும். பிறகு வற்றிய தயிர் மற்றும் குமூஸ் செய்யக் கொடுத்துள்ள மற்ற பொருள்களை மிக்ஸியில் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும். குமூஸ் தயார்.
பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக் கரு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும். தோசைக்கல்லை காயவிட்டுச் சப்பாத்தியைப் போட்டுச் சூடாக்கி மேலே சிறிதளவு முட்டை கலவையைப் பரப்பி, எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிடவும். வெள்ளைக் கரு வெந்த பின் எடுத்து சப்பாத்தியின் மேல் 2 டேபிள்ஸ்பூன், குமூஸைத் தடவவும். பிறகு, அதன் மேல் வதக்கிய காய்கறி பூரணத்தை வைத்து இறுக்கமாக சுருட்டவும். சப்பாத்தி ரோலைப் பாதியாக நறுக்கிப் பரிமாறவும்.
குறிப்பு:
பூரணத்துடன் கோழி இறைச்சி சேர்த்தும் செய்யலாம்.
சூரியன் அஸ்தமனமான பிறகு (மாலை 6 மணி வாக்கில்) நோன்பை முடித்துக்கொள்வது வழக்கம். நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ என பெயர். இஃப்தாரில் உண்ணுவதற்கான சிறப்பு உணவுகளின் ரெசிப்பிகளை அளிக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசீனா செய்யது.
------------------------------------------------------------------------------------------------------------------------
வெஜிடபிள் குமூஸ் ராப்
தேவையானவை:
சப்பாத்தி - 6
முட்டையின் வெள்ளைக் கரு - 2
எண்ணெய் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
பூரணம் செய்ய:
கேரட் - 2 (பொடியாக நறுக்கவும்)
பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப்
நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப்
உரித்த பச்சைப் பட்டாணி – அரை கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டுப் பல் - 2 (தட்டவும்)
ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
குமூஸ் செய்ய:
செய்த பூரணம் - முக்கால் கப்
பூண்டு - 3 பல்
சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன்
கெட்டித் தயிர் - அரை கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, பூண்டு, வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும், இதனுடன் காய்கறிகள், உப்பு, ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதுவே பூரணம். தயிரைத் துணியில் போட்டு மூட்டை போல கட்டி மூன்று மணி நேரம் தொங்கவிடவும். பிறகு வற்றிய தயிர் மற்றும் குமூஸ் செய்யக் கொடுத்துள்ள மற்ற பொருள்களை மிக்ஸியில் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும். குமூஸ் தயார்.
பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக் கரு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும். தோசைக்கல்லை காயவிட்டுச் சப்பாத்தியைப் போட்டுச் சூடாக்கி மேலே சிறிதளவு முட்டை கலவையைப் பரப்பி, எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிடவும். வெள்ளைக் கரு வெந்த பின் எடுத்து சப்பாத்தியின் மேல் 2 டேபிள்ஸ்பூன், குமூஸைத் தடவவும். பிறகு, அதன் மேல் வதக்கிய காய்கறி பூரணத்தை வைத்து இறுக்கமாக சுருட்டவும். சப்பாத்தி ரோலைப் பாதியாக நறுக்கிப் பரிமாறவும்.
குறிப்பு:
பூரணத்துடன் கோழி இறைச்சி சேர்த்தும் செய்யலாம்.
Post a Comment