உலக மொழிகளின் தாய் மொழியாக தமிழ் மொழி பேசும் தமிழராகப் பிறந்ததற்காக உலகத் தமிழர் அனைவரும் பெருமை கொள்வோம் !
உலக மொழிகளின் தாய் மொழியாக தமிழ் மொழி பேசும் தமிழராகப் பிறந்ததற்காக உலகத் தமிழர் அனைவரும் பெருமை கொள்வோம் ! உலக மொழிகளின் மூலம் த...

உலக மொழிகளின் தாய் மொழியாக தமிழ் மொழி பேசும் தமிழராகப் பிறந்ததற்காக உலகத் தமிழர் அனைவரும் பெருமை கொள்வோம் !
இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி
உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி
உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி
காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி
கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி
எண்ணிலடங்கா சொற்கள் கொண்ட தமிழ்மொழி
எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி
பழமைக்கு பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி
புதுமைக்கு புதமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி
இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி
இணையில்லாப் புகழ்மிக்கக உயர்தனித் தமிழ்மொழி
முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி
மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி
உலகிற்கு பண்பாட்டை பறைசாற்றும் தமிழ்மொழி
உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ்மொழி
மனிதநேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி
மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி
பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி
புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி
அறிஞர்கள் பலரை செதுக்கிய தமிழ்மொழி
விஞ்ஞானிகள் பலரை வளர்த்த தமிழ்மொழி
மெஞ்ஞானிகள் பலரை வழங்கிய தமிழ்மொழி
இயல்,இசை,நாடகம் சிறந்து விளங்கிடும் தமிழ்மொழி
எத்திக்கும் முத்தமிழிலும் முத்திரை பதித்திடும் தமிழ்மொழி
அகமும் புறமும் அழகாக விளங்கும் தமிழ்மொழி
அற்புத உறவுகளுக்கு தனித்தனி சொல்லழகு தமிழ்மொழி
முல்லை,மருதம்,குறிஞ்சி,நெய்தல்
மூச்சாக உலகத் தமிழருக்கு விளங்கிடும் தமிழ்மொழி
மனதை இளமையாக்கும் இனிய தமிழ்மொழி
மமதையை அழித்து ஒழித்திடும் தமிழ்மொழி
தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை இனிய தமிழ்மொழி
தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் தமிழ்மொழி
ஒரு எழுத்தில் பொருள் கூறும் தமிழ்மொழி
ஒரு எழுந்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி
காந்தியடிகள் மனதார புகழ்ந்திட்ட தமிழ்மொழி
தமிழனாக பிறந்திட ஆசைப்பட வைத்த தமிழ்மொழி
கவிஞர்கள் கட்டித் காத்த கரும்பு தமிழ்மொழி
கவிதைகள் கட்டித்தங்கம் போன்ற தமிழ்மொழி
உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி
உலகில் ஈடு இணையற்ற உன்னதமொழி தமிழ்மொழி!
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே !
சொல்லியது பன்மொழி அறிஞர் பாரதியார் !
உரைப்பது தமிழனன்று அமெரிக்கா ஆய்வாளர் !
உன்னத தமிழ் மொழியில் ஏராளம் !
ஆயிரக்கணக்கில் அழகு தமிழில் உண்டு !
அமிழ்து ! அமிழ்து ! என்று ஒலி கேட்கும் !
முக்காலமும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி !
ஒரு சொல் கூட பொருள் இன்றி இல்லை !
இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்கள் உண்டு !
மூவகை எழுத்துக்களின் சுரங்கம் தமிழ் மொழி !
பிறக்கும்போதே சிறப்போடு பிறந்த மொழி !
பன்னாட்டு அறிஞர்கள் போற்றிடும் தமிழ்மொழி !
உலகமே போற்றிடும் உன்னத மொழி தமிழ்மொழி !
தனிப்பெரும் இடம்பெற்ற இலக்கியம் திருக்குறள்
தமிழ் என்ற சொல்லே இடம் பெறாத திருக்குறள்
தமிழன் என்ற சொல்லே இடம் பெறாத திருக்குறள்
கடவுள் என்ற சொல்லே இடம் பெறாத திருக்குறள்
கற்கண்டை மிஞ்சும் கனிச்சுவை மிக்க திருக்குறள்
வாழ்வியல் நெறியை பயிற்றுவிக்கும் திருக்குறள்
வாழ்வின் அர்த்தம் உணர்த்தும் திருக்குறள்
உலக இலக்கியங்களின் உன்னதம் திருக்குறள்
உலகிற்கு அறநெறி அறிவிக்கும் திருக்குறள்
உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்
உலக மக்கள் யாவரும் அறிந்த திருக்குறள்
அழியாப் பெருமையுடன் நிலைத்திருக்கும் திருக்குறள்
அறியாமை நீக்கிடும் அறிவுடைமை திருக்குறள்
மனிதநேயம் மனத்தில் விதைக்கும் திருக்குறள்
மடமை நீக்கி பகுத்தறிவைப் போதிக்கும் திருக்குறள்
ஈடு இணையற்ற இனிய இலக்கியம் திருக்குறள்
எண்ணிலடங்கா கருத்துப் புதையல் திருக்குறள்
காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய் என்ற அறிஞர்
டால்ஸ்டாயின் குரு செந்நாப்புலவர் திருக்குறள்
சொக்க வைக்கும் சொற்களின் சுரங்கம் திருக்குறள்
சோகத்தை மறக்க வைக்கும் சுகம் திருக்குறள்
தமிழுக்கும் செம்மொழி பெற்றுத் தந்த திருக்குறள்
தமிழருக்குப் பெருமை ஈட்டித் தந்த திருக்குறள் !
திருக்குறள் வழி நடந்தால் வாழ்க்கை சிறக்கும்
தான் என்ற அகந்தையை அகற்றுவது திருக்குறள்
நான் என்ற செருக்கை அழிப்பது திருக்குறள்
உயர்ந்த ஒழுக்கத்தை உணர்த்திடும் திருக்குறள்
ஓயாத உழைப்பைப் போதிக்கும் திருக்குறள்
முயற்சியை முன் நிறுத்திடும் திருக்குறள்
அயற்சியை உடன் அகற்றிடும் திருக்குறள்
ஆறாவது அறிவை பயிற்றுவிக்கும் திருக்குறள்
ஆராய்ச்சி அறிவை வளர்த்திடும் திருக்குறள்
மனிதனை மனிதனாக வாழவைக்கும் திருக்குறள்
மனிதனின் மிருகக்குணம் போக்கிடும் திருக்குறள்
மனிதனை அறிஞனாக ஆக்கிடும் திருக்குறள்
மனிதனின் அறியாமையை நீக்கிடும் திருக்குறள்
மனிதனை சான்றோனாக செதுக்கிடும் திருக்குறள்
அறிவியல் அறிவை உருவாக்கும் திருக்குறள்
அப்துல்கலாமை உயர்த்தியது திருக்குறள்
உலக இலக்கியத்தின் இமயம் திருக்குறள்
உலகில் ஈடு இணையற்ற நூல் திருக்குறள்
உலக மனிதர்கள் யாவருக்கும் வாழ்க்கையை
உணர்த்தும் ஒப்பற்ற உயர்ந்த திருக்குறள்
இல்லறம் நல்லறமாக விளங்கிட வேண்டும்
அன்பும் அறனும் அவசியம் வேண்டும்
உயர்ந்த தவத்தை விட சிறந்தது
ஒழுக்கமாக இல்லறத்தில் வாழ்வது
பிறர் பழிக்கும் தீமைகள் இன்றி
பிறர் போற்றும் வாழ்க்கை இல்லறம்
பூ உலகில் செம்மையாக வாழ்பவன்
வானுலக தேவர்களை விட சிறந்தவன்
வாழ்வது எப்படி என்பதை அறிய
வளமான திருக்குறளைப் படியுங்கள்
பாடாத பொருள் இல்லை திருக்குறளில்
சொல்லாத கருத்து இல்லை திருக்குறளில்
1330 திருக்குறள் மனப்பாடம் செய்வதைவிட
10 திருக்குறள் வழி நடப்பது நன்று !
திருவள்ளுவர் !
உலகப்பொதுமறைப் படைத்த
உலகப்பெரும் புலவர்
திருவள்ளுவர் !
திருவாளர்
திருவள்ளுவர் !
அற்புத இலக்கியம் வடித்தவர்
திருவள்ளுவர் !
அரங்கேற்றம் ஆனவர்
திருவள்ளுவர் !
அன்பு மனைவியைப் பெற்றவர்
திருவள்ளுவர் !
வாசித்த இலக்கியம் படைத்தவர்
திருவள்ளுவர் !
ஈராயிரம் வயது கடந்தும்
இளமையாக இருப்பவர்
திருவள்ளுவர் !
ஏற்க வைத்தவர்
திருவள்ளுவர் !
வாசகர்களின் கண் அவர்
திருவள்ளுவர் !
கலங்கி நிற்கையில் திசை காட்டும் வள்ளுவம் !
மனிதநெறி மனிதனுக்குக் கற்பிக்கும் வள்ளுவம் !
வாழ்வின் அர்த்தம் உணர்த்திடும் வள்ளுவம் !
ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக இயம்பிய வள்ளுவம் !
மனக்கவலை போக்கும் மருந்தாகும் வள்ளுவம் !
மனிதநேயம் மனதிற்குப் பயிற்றுவிக்கும் வள்ளுவம் !
வாழ்வில் வெற்றிக்கு வழி வகுக்கும் வள்ளுவம் !
அன்பின் வலிமை உணர்த்திடும் வள்ளுவம் !
நல்ல செயல்கள் செய்ய வைக்கும் வள்ளுவம் !
கற்றவரின் மேன்மையைக் காட்டிடும் வள்ளுவம் !
தன்னிகரில்லா அறம் போதிக்கும் அற்புதம் வள்ளுவம் !
விலங்கிலிருந்து வேறுபடுத்திடும் வள்ளுவம் !
எல்லோரும் போற்றிடும் பெட்டகம் வள்ளுவம் !
தமிழுக்கு மகுடமாக விளங்குவது வள்ளுவம் !
வளமான உலகின் முதல் மொழி தமிழுக்கு !
ஓட முடிந்தவருக்கு ஊன்றுகோல் தேவையன்று !
தன்னிகரில்லா மொழிக்கு பிறமொழி எழுத்து வேண்டாம் !
தமிழில் கலப்படம் தமிழுக்குக் கேடு தரும் !
ரோசா என்று எழுதிப் பழகுங்கள் !
இராசா என்று எழுதிப் பழகுங்கள் !
ரமேசு என்று எழுதிப் பழகுங்கள் !
ஏன் கையை ஏந்த வேண்டும் வடமொழியில் !
இருப்பவன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும் !
வடமொழி எழுத்துக்களை கலப்பவரை இகழ் !
தடுத்திட திட்டம் வகுத்துத் தடுத்திடுவோம் !
அனைவரும் தமிழ்மொழி காக்க அணி வகுப்போம் !
தமிழை உயிருக்கு மேலாக மதிப்பது நன்று
மறத் தமிழனுக்கோ தமிழ்தான் மேல்
தரணியில் முதல்க்குரல் தமிழன் குரலாக இருக்கட்டும்
தாயே தடுத்தாலும் விடமாட்டோம்
உலகின் முதல் மனிதன் பேசியது தமிழ்மொழி
ஆராய்ச்சி அறிஞர்களின் முடிவான முடிவு
எண்ணிலடங்கா சொற்களின் சுரங்கம் தமிழ்மொழி
அவ்வையின் ஆத்திச்சூடியை அருளியது தமிழ்மொழி
பாவேந்தரின் குடும்பவிளக்கை ஏற்றிறயது தமிழ்மொழி
பாடல்களால் நிறைந்து விளங்கும் தமிழ்மொழி
தேவநேயப் பாவாணர் கூற்று முற்றிலும் உண்மை
தேசியநூல் என்ற மகுடத்தை சூட்டியே தீருவோம்
தமிழா இப்படிப் பேசுவது தகுமா ?
மதியப் பொழுதை ஆப்ட்ரநூன் என்றாய்
நல்ல பொழுதை ஆங்கிலத்தால் கொன்றாய்
வீட்டை ஹவுஸ் என்றாய்
கழிவறையை டாய்லெட் என்றாய்
தண்ணீரை வாட்டர் என்றாய்
உப்பை சால்ட் என்றாய்
காதலியை லவ்வர் என்றாய்
கடிதத்தை லெட்டர் என்றாய்
கல்லூரியை காலேஜ் என்றாய்
ஆசிரியரை டீச்சர் என்றாய்
விமானத்தை பிளைன் என்றாய்
தொலைபேசியை போன் என்றாய்
குணத்தை கேரக்டர் என்றாய்
விபத்தை ஆக்ஸிடென்ட் என்றாய்
எப்போது வரும் உனக்கு தமிழ் உணர்வு !
ஆங்கிலேயன் தமிழ் கலந்து ஆங்கிலம் பேசுவானா ?
சோகத்திலும் சுந்தரத் தமிழ் பேசுகின்றனர்
தமிழா !சிந்தித்து தமிழிலேயே பேசு !
தமிழா தமிழா சொல் தினமும் நீ
தரணியில் பேசுவது தமிழா சொல்
உலக மொழிகளின் தாய் தமிழ்
உலகமே பார்த்துச் சிரிக்குது தமிழின் நிலை
நாளும் சிதைக்கின்றனர் நல்ல தமிழை
ஆங்கிலத்தில் மம்மி என்றழைக்கும் மடமை
ஆங்கிலத்தில் டாடி என்றழைக்கும் கொடுமை
தமிழை தமிழாகப் பேசிட நீ பழகு
ஆங்கிலேயன் என்றும் பேசுவதில்லை
தமிங்கிலம் பேசி உளறுகின்றான்
ஒரு கரம் தூக்கி குட்மோர்னிங் நிறுத்து
ஈடு இணையற்ற உயர்தனிச் செம்மொழி தமிழ் !
திருக்குறளால் பெருமை பெற்ற மொழி தமிழ் !
திருவள்ளுவரால் உலகம் அறிந்த மொழி தமிழ் !
எண்ணிலடங்காச் சொற்களின் சுரங்கம் தமிழ் !
எண்ணிட இனித்திடும் மொழி நம் தமிழ் !
உலகின் முதல் மொழி தமிழ் உணர்ந்திடுக !
உலகில் பன்னாட்டு மொழி தமிழ் அறிந்திடுக !
உலகம் முழுவதும் ஒலிக்கும் நம் தமிழ் !
உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் தமிழ் !
இலக்கியங்களின் இமயம் நம் தமிழ் !
இலக்கணங்களின் இருப்பிடம் நம் தமிழ் !
எழுத்திலும் பேச்சிலும் நிலைத்த ஒரே செம்மொழி !
இனிமையான செம்மொழி சிதைப்பதை நிறுத்துக !
தமிழா தமிழை, தமிழாகப் பேசு !
தமிழா தமிழை, தமிழாக எழுது !
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு !
ஒப்பற்ற தமிழுக்கு, பிறமொழி நஞ்சு !
என்ன வளம் இல்லை தமிழ் மொழியில் !
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில் !
ஆங்கிலச் சொற்கள் கலப்பது மடமை !
ஆங்கிலக் கலப்பின்றி பேசுவது கடமை !
தமிழில் பிறமொழி கலந்து பேசக் கூசு !
தமிழில் பிறமொழி கலவாமல் பேசு !
பிறமொழி எழுத்தும் , சொல்லும் !
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்!
அமுதம் என்றார்கள் !
அமுதம் நாங்கள் பருகியது இல்லை !
அன்று புராணக்கதை கதைத்தது !
இனிய தமிழ் படியு்ங்கள் !
தீ்ந்தமிழ் படியு்ங்கள் !
சந்தத்தமிழ் படியு்ங்கள் !
கற்கண்டுத்தமிழ் படியு்ங்கள் !
வளம் மிக்க தமிழ் படியு்ங்கள் !
ஒப்பற்றத் தமிழ் படியு்ங்கள் !
பைந்தமிழ் படியு்ங்கள் !
நிதமும் தமிழ் படியு்ங்கள் !
விவேகத்தமிழ் படியு்ங்கள் !
சீர்மிகு தமிழ் படியு்ங்கள் !
மயக்கும் தமிழ் படியு்ங்கள் !
முதல்மொழி தமிழ் படியு்ங்கள் !
கனித்தமிழ் படியுங்கள் !
சுந்தரத்தமிழ் படியுங்கள் !
வற்றாதத் தமிழ் படியுங்கள் !
முத்தமிழ் படியு்ங்கள் !
மாண்புமிகு தமிழ் படியு்ங்கள் !
இனிமையான தமிழ் படியு்ங்கள் !
சங்கத்தமிழ் படியு்ங்கள் !
சாதாரணம் தமிழ் முன் அமுதம் !
தமிழை நினைக்காதவன் தமிழனா ? சிந்திப்பாய் !
தமிழின் அருமை தமிழன் அறியவில்லை !
பேச்சில் நல்ல தமிழ் காணமல் போனது !
இனிய தமிழின் நிலை என்னாகும் சிந்திப்பீர் !
உயர்மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும் !
நல்ல தமிழ் பேசி அனைவரும் முயலுங்கள் !
அம்மா என்று அழகு தமிழில் ஒலிக்கின்றன !
தமிங்கிலம் பேசித் தமிழை சிதைக்கின்றான் !
மம்மி என்று அழைப்பது மடமை உணர்ந்திடு !
டாடி என்பது தமிழ் அல்ல நீ நம்பு !
பெரிய பட்டியலே உறவுச்சொற்கள் உண்டு !
பதத்தில் ஒற்றைச் சொல் மட்டுமே உண்டு !
பெரிய பட்டியலே உறவுச்சொற்கள் உண்டு !
ஒற்றைச் சொல் ஆண்ட்டி மட்டுமே உண்டு !
ஆங்கிலேயரும் புகழும் மொழி தமிழ் !
முத்தமிழை உலகிற்கு தந்த மொழி தமிழ் !
தாயினும் உயர்ந்தது தமிழ் உணர்வீர் !
ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்!
உலகம் முழுவதும் பரவியுள்ள மொழி தமிழ் !
உரைத்தார் அன்றே பன்மொழி அறிஞர் பாவாணர் !
பண்டைக் காலம் முதல் ஆளுமை மொழி தமிழ் !
இதயத்தில் இடம் பிடித்த மொழி தமிழ் !
மூத்த புலவர்கள் கட்டிக் காத்த மொழி தமிழ் !
இணையில்லா திருக்குறளை ஈந்தமொழி தமிழ் !
மொழியின் பால் ஈர்ப்பு சக்தி உள்ள மொழி தமிழ் !
செம்மையைக் காத்திட முயல்வாய் தமிழா !
கலப்பு மொழிக்கு தீமையே தந்திடும் !
கலப்படம் மொழியில் புரிவதும் குற்றமே !
எண்ணிலடங்கா சொற்கள் மிகுந்த மொழி தமிழ் !
இனிய முத்தமிழில் இனிய மொழி தமிழ் !
தமிழை தமிழாகவேப் பேசிட முயலுங்கள் !
அழகு தமிழுக்கு எந்த மொழியும் ஈடாகாது
தமிழோடு பிற மொழி கலப்பதை நிறுத்து !
இருப்பவன் பிச்சை எடுத்தல் அநியாயம் !
ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்!
தமிழர்கள் தமிழின் சிறப்பை இன்னும் உணரவில்லை !
கவிதைகளும் வசனங்களும் குவிந்த மொழி தமிழ் !
சுவைகளின் அரங்கம் நம் முத்தமிழ் !
உயிரினும் மேலானது நம் தாய்மொழி தமிழ் !
எதற்காக பிறமொழி எழுத்துக்களை கலக்க வேண்டும் !
தமிழைத் தமிழாக மட்டுமே எழுதுவோம் !
மொழியில் தூய்மை நாளும் கடைபிடிப்போம் !
தமிழோடு ஆங்கிலம் கலப்பதை ஒழித்திடுவோம் !
ஒப்பற்ற தமிழை உருக்குலைத்து வருகின்றனர் !
தமிழர் மட்டும் தமிழோடு ஆங்கிலம் கல்ப்பதேன் ?
.தமிழ்நாட்டில் தமிழ்க்கொலையா ?
செந்தமிழில் வழக்காட இன்னும் முடியவில்லை !
மதுரத்தமிழ் இன்றும் அனுமதிக்கவில்லை !
அழகு தமிழ் இன்னும் இடம் பெறவில்லை !
தமிங்கிலம் மிக வேகமாக பரவிவிட்டது !
பத்தில் எட்டுச் சொற்கள் ஆங்கிலமானது !
பைந்தமிழைத் தின்னும் திமிங்கிலமானது தமிங்கிலம் !
படிக்காத பாமரப் பாட்டி பேச்சிலும் கலந்தது தமிங்கிலம் !
தவறாமல் தினமும் நடக்குது தமிழ்க்கொலை !
நிகழ்ச்சியில் பேசுவோரின் பேச்சில் தமிங்கிலம் !
என்னாகும் நம் தமிழ் தயவுசெய்து சிந்திப்பீர் !
உரிய மதிப்பினை நம் தமிழுக்குத் தந்திடுக !
தமிழர்கள் தமிழின் சிறப்பை இன்னும் உணரவில்லை !
கவிதைகளும் வசனங்களும் குவிந்த மொழி தமிழ் !
சுவைகளின் அரங்கம் நம் முத்தமிழ் !
உயிரினும் மேலானது நம் தாய்மொழி தமிழ் !
எதற்காக பிறமொழி எழுத்துக்களை கலக்க வேண்டும் !
தமிழைத் தமிழாக மட்டுமே எழுதுவோம் !
மொழியில் தூய்மை நாளும் கடைபிடிப்போம் !
தமிழோடு ஆங்கிலம் கலப்பதை ஒழித்திடுவோம் !
ஒப்பற்ற தமிழை உருக்குலைத்து வருகின்றனர் !
இயல் இசை நாடகம் முத்தமிழ் முத்திரை தமிழ் !
ஈடு இணையற்ற உயர்தனிச் செம்மொழி தமிழ் !
திருவள்ளுவரால் உலகம் அறிந்த மொழி தமிழ் !
எண்ணிட இனித்திடும் மொழி நம் தமிழ் !
உலகில் பன்னாட்டு மொழி தமிழ் அறிந்திடுக !
உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் தமிழ் !
இலக்கணங்களின் இருப்பிடம் நம் தமிழ் !
இனிமையான செம்மொழி சிதைப்பதை நிறுத்துக !
தமிழா தமிழை தமிழாக எழுது !
ஒப்பற்ற தமிழுக்கு பிறமொழி நஞ்சு !
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்
ஆங்கிலக் கலப்பின்றி பேசுவது கடமை !
தமிழில் பிறமொழி கலந்து பேசக் கூசு !
தமிழில் பிறமொழி கலவாமல் பேசு
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
Post a Comment