புதுவையில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கியது!!
புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடைத்துறை வளாகத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் இயங்கி வந்தது. இந்த பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு ரூ.60...
https://pettagum.blogspot.com/2016/02/blog-post_7.html?m=0
புதுவை
மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடைத்துறை வளாகத்தில் பாஸ்போர்ட்
அலுவலகம் இயங்கி வந்தது. இந்த பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு ரூ.60 லட்சம்
செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு நவீன மயமாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு
விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை
செயலாளர் முக்தேஸ்பர்தேசி தலைமை தாங்கினார். சென்னை பாஸ்போர்ட் மண்டல
அதிகாரி பாலமுருகன் வரவேற்றார். முதல்அமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி,
ரிப்பன் வெட்டி பாஸ்போர்ட் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். அவர்
பேசியதாவது:–
புதுவையில் பிரெஞ்சு குடிமக்கள் அதிகமாக
வசித்து வருகின்றனர். புதுவையிலிருந்து அடிக்கடி வெளிநாட்டிற்கு செல்ல
வேண்டியிருந்தது. இதனால் பாஸ்போர்ட் எடுப்பதற்கு முன்பு சென்னை செல்ல
வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்றி புதுவையிலேயே பாஸ்போர்ட் சேவை மையம்
அமைக்க வேண்டும் என்று எண்ணினோம். இதற்கு முயற்சிகள் எடுத்து சேவை மையம்
உருவாக காரணமாக இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி.
புதுவை ஒரு சுற்றுலாதலம். புதுவை தற்போது
கல்விக்கேந்திரமாகவும் உருவாகியுள்ளது. இதனால் ஆண்டுக்கு 2 ஆயிரம்
பொறியியல் பட்டதாரிகளும், 500 மருத்துவ பட்டதாரிகளும் படித்து முடித்து
வெளியேறுகின்றனர். இவர்கள் வெளிநாடுகளில் வேலைக்கு செல்கின்றனர். திருமணம்
முடிந்து மனைவி, தாய், தந்தையையும் வெளிநாடு அழைத்து செல்கின்றனர்.
கிராமத்திலிருந்து பல பெரியவர்கள் வெளிநாட்டிற்கு செல்கின்றனர். இதற்கு
அடிப்படை காரணம் கல்விதான்.
கடந்த காலங்களில் பாஸ்போர்ட் கிடைக்க
குறைந்தது 3 அல்லது 4 மாதமாகும். போலீசார் ஆய்வுக்கு பிறகுதான் பாஸ்போர்ட்
வழங்கப்படும். தற்போது 3 நாட்களில் பாஸ் போர்ட் வழங்கப்படும் என அதிகாரிகள்
உறுதியளித்துள்ளனர். பாஸ்போர்ட் வழங்கிய பிறகு போலீஸ் ஆய்வு நடத்தப்படும்
என்று கூறியுள்ளார்.
புதுவை காரைக்கால் மட்டுமில்லாமல்
தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் புதுவையில்
பாஸ்போர்ட் எடுக்கலாம். கடந்த காலங்களை விட பாஸ்போர்ட் விண்ணப்பிப்போர்
எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு
புதுவையை கல்விக்கேந்திரமாக உருவாக்கியதுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன்,
ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் நேரு, பாலன், வாரியத்தலைவர் ஞானசேகரன்,
தலைமை செய லாளர் மனோஜ்பரிதா, நிதித்துறை செயலாளர் சந்திரகர்பர்தி,
பாஸ்போர்ட் மண்டல அதிகாரிகள் சசிக்குமார், லிங்கசாமி, மணிசர்ராஜா உள்ளிட்ட
பலர் பங்கேற்றனர். உதவி பாஸ்போர்ட் அதிகாரி பாலசுப்பிரமணியம் நன்றி
கூறினார்.
Post a Comment