கோடையிலும் பொங்கும் கிணறு! மேல்மட்ட தண்ணீர் அறுவடை! விவசாயக்குறிப்புக்கள்!!
கோடையிலும் பொங்கும் கிணறு! மேல்மட்ட தண்ணீர் அறுவடை! கோ டை வெயில் வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது. ஆங்காங்கே தண்ணீர் பஞ்சம் தலைவி...
https://pettagum.blogspot.com/2015/04/blog-post_50.html?m=0
கோடையிலும் பொங்கும் கிணறு! மேல்மட்ட தண்ணீர் அறுவடை!
கோடை வெயில் வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது. ஆங்காங்கே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆழ்துளைக் கிணறுகளில் தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைப்பதே பெரும்பாடு. அப்படியென்றால், திறந்தவெளிக் கிணறுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இப்படிப்பட்ட நிலையிலும், தஞ்சாவூர் மாவட்டம், மண்டலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமனின் திறந்தவெளிக் கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருப்பதோடு... இறைக்க இறைக்க ஊறிக் கொண்டிருக்கிறது. ஜெயராமன் மேற்கொண்ட சின்ன தொழில்நுட்பம்தான், இதற்குக் காரணம்!
பொதுவாகத் திறந்தவெளிக் கிணறுகளில் தண்ணீர் வற்றினால், அப்படியே
போட்டுவிட்டு... ஆழ்துளைக்கிணறு அமைத்து நிலத்தடி நீரை முழுமையாக
உறிஞ்சுவதுதான் வழக்கம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் அதல
பாதாளத்துக்குச் செல்வதோடு, தண்ணீரில் உப்புத் தன்மை அதிகரித்து,
பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், ஜெயராமன் நிலத்தடி நீரில் கை
வைக்காமல், நிலத்தின் மேல் மட்டத்தண்ணீரை மட்டுமே அறுவடை செய்து, ஆண்டு
முழுவதும் செழிப்பாக விவசாயம் செய்து வருகிறார்.
இந்தத் தொழில்நுட்பம் பற்றி பேச ஆரம்பித்த ஜெயராமன், “விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான், அரசு மேல்நிலைப் பள்ளியில கணிப்பொறி ஆசிரியரா வேலை பார்த்துக்கிட்டே, விவசாயமும் செய்றேன். இது கடைமடைப் பகுதி. ஆத்துத் தண்ணீரை நம்பி விவசாயம் செய்ய முடியாது. திறந்தவெளிக் கிணறுகள் அமைச்சி, அதுல இருந்து தண்ணீர் இறைச்சிதான் எங்க பகுதியில விவசாயம் செஞ்சோம். ஒரு கட்டத்துல கிணறுகள்ல தண்ணீர் குறைஞ்சி போகவும்... கிணறுகளை அப்படியே விட்டுட்டு, போர்வெல் அமைக்க ஆரம்பிச்சாங்க. ஆரம்பத்துல 70, 80 அடியில தண்ணீர் கிடைச்சுது. அதுக்கு பிறகு 300, 350 அடி ஆழத்துக்கு தண்ணீர் போயிடுச்சு. எனக்கு, ஏற்கெனவே இருக்குற கிணறை சும்மா போட்டுட்டு, பல லட்ச ரூபாய் செலவு செஞ்சி போர்வெல் அமைச்சி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்குறதுல விருப்பம் இல்லை. அப்படியே அமைச்சாலும் எதிர்காலத்துல சுத்தமான தண்ணீருக்கு உத்தரவாதம் இல்லை. இந்தக் கிணத்துக்குள்ளேயே வேறு என்ன மாற்றம் செய்யலாம்னு தீவிரமான தேடுதல்யே இருந்தேன்.
ஒரு கட்டத்துல வரகூர் கிராமத்து விவசாயி ஒருத்தர், தன் கிணத்தோட
பக்கவாட்டு பகுதிகள்ல நீளமான துளைகள் அமைச்சிருந்ததைக் கேள்விப்பட்டேன்.
அதை பார்த்துட்டுப் பத்து வருஷத்துக்கு முன்ன நானும் என்னோட கிணத்துல
அதேபோல துளைகள் அமைச்சேன். பதினஞ்சாயிரம் ரூபாய்தான் செலவாச்சு. கிணத்தோட
மொத்த சுற்றளவு 30 அடி. ஏழரை அடி இடைவெளியில 4 துளைகள் அமைச்சிருக்கோம். 4
இஞ்ச் விட்டத்துல 100 அடி தூரத்துக்கு இந்த துளைகளை அமைச்சிருக்கோம்.
கிணத்துல இருந்து 20 அடி தூரம் வரைக்கும் இரும்புக் குழாய் இருக்கு.
கிணத்தோட ஆழம் 25 அடி. இதுல 15 அடி ஆழத்துல பக்கவாட்டு பகுதிகள்ல இந்த
துளைகள் இருக்கு. இந்த துளைகள்ல இருந்து நிரந்தரமா எந்நேரமும் தண்ணீர்
ஊத்திக்கிட்டே இருக்கு. இதனால் கடும்கோடையிலும் கூட, தண்ணீர் நிறைஞ்சே
இருக்கு கிணறு.
ஏழரை ஹெச்.பி. நீர் மூழ்கி மோட்டார் மூலம் தினமும் காலையில 4 மணிநேரமும்
சாயந்தரம் 4 மணிநேரமும் தண்ணீர் இறைக்கிறோம். ஆனாலும், உடனே தண்ணீர்
நிறைஞ்சிடுது. பத்து வருசமா, இந்த தண்ணீரை வெச்சுதான் 5 ஏக்கர்ல
முப்போகமும் சாகுபடி செய்றோம். இதுல மூணு ஏக்கர்ல முப்போகமும் நெல்லு.
மீதியுள்ள 2 ஏக்கர்ல ஒரு போகம் நெல், இருபோகம் உளுந்து, பயறு, கடலைனு
செழிப்பா சாகுபடி செய்றோம். தவிர, பக்கத்து வயல்காரருக்கும் மூணு
ஏக்கருக்கு தண்ணீர் கொடுக்குறோம்.
அவரும் இதை வெச்சு மூணு போகம் சாகுபடி செய்றார்” என்ற ஜெயராமன் நிறைவாக, “வயலுக்கு பாய்ச்சுற தண்ணீர்ல பத்து சதவீதத்தை மட்டும்தான் பயிர்கள் எடுத்துக்குது. மீதி தண்ணீர், இடுக்குகள் வழியா கீழ இறங்கி, இந்தத் துளைகள் மூலமா, கிணத்துக்கே வந்துடுது. மழைநீரும் நிலத்துக்குள்ள இறங்கி, கிணத்துக்கு வந்துடுது. மூணு போகமும் சாகுபடி செய்றதுனால, மண்ணுல எப்போதும் ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கு. பயனில்லாம கிடக்குற கிணறுகள்ல, இது மாதிரி துளைகள் அமைச்சா... தண்ணீர் பிரச்னைக்கு சுலபமா தீர்வு கிடைச்சுடும்’’ என்றார்.
திறந்தவெளிக் கிணறுகளின் உள்ளே பக்கவாட்டுப் பகுதிகளில் நீளமான துளைகள் அமைப்பது குறித்து திண்டுக்கல் மாவட்டம் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை வேளாண் பொறியாளர் பிரிட்டோவிடம் கருத்து கேட்டோம்.
‘‘இது மிகச்சிறந்த முறையாகும். கிணறுகளின் உள்ளே வெள்ளைநிற படிவுப்பாறைகள் உள்ள பகுதிகளைத் தேர்ந்தெடுத்து துளைகள் அமைக்க வேண்டும். இதுபோன்ற பகுதிகளில் உள்ள துளைகள் அவ்வளவு எளிதில் சிதையாது. நீர்ப்பிடிப்பு, நீர்க்கசிவு, ர்ப்போக்குவரத்து அனைத்துக்கும் இதுதான் ஏற்றது. நீளமான துளையிடுவதற்கும் எளிதாக இருக்கும்.
எதிர்காலத்தில் நெகிழ்வுத் தன்மையால் இந்தத் துளைகளில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்க, துளையின் ஒட்டுமொத்த நீளத்துக்குமே பிளாஸ்டிக் குழாய் சொருகுவது நல்லது. பிளாஸ்டிக் குழாயில் சுமார் 10 சென்டிமீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே துளைகள் இருக்க வேண்டும்’’ என்றார்.
கோடை வெயில் வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது. ஆங்காங்கே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆழ்துளைக் கிணறுகளில் தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைப்பதே பெரும்பாடு. அப்படியென்றால், திறந்தவெளிக் கிணறுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இப்படிப்பட்ட நிலையிலும், தஞ்சாவூர் மாவட்டம், மண்டலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமனின் திறந்தவெளிக் கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருப்பதோடு... இறைக்க இறைக்க ஊறிக் கொண்டிருக்கிறது. ஜெயராமன் மேற்கொண்ட சின்ன தொழில்நுட்பம்தான், இதற்குக் காரணம்!
இந்தத் தொழில்நுட்பம் பற்றி பேச ஆரம்பித்த ஜெயராமன், “விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான், அரசு மேல்நிலைப் பள்ளியில கணிப்பொறி ஆசிரியரா வேலை பார்த்துக்கிட்டே, விவசாயமும் செய்றேன். இது கடைமடைப் பகுதி. ஆத்துத் தண்ணீரை நம்பி விவசாயம் செய்ய முடியாது. திறந்தவெளிக் கிணறுகள் அமைச்சி, அதுல இருந்து தண்ணீர் இறைச்சிதான் எங்க பகுதியில விவசாயம் செஞ்சோம். ஒரு கட்டத்துல கிணறுகள்ல தண்ணீர் குறைஞ்சி போகவும்... கிணறுகளை அப்படியே விட்டுட்டு, போர்வெல் அமைக்க ஆரம்பிச்சாங்க. ஆரம்பத்துல 70, 80 அடியில தண்ணீர் கிடைச்சுது. அதுக்கு பிறகு 300, 350 அடி ஆழத்துக்கு தண்ணீர் போயிடுச்சு. எனக்கு, ஏற்கெனவே இருக்குற கிணறை சும்மா போட்டுட்டு, பல லட்ச ரூபாய் செலவு செஞ்சி போர்வெல் அமைச்சி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்குறதுல விருப்பம் இல்லை. அப்படியே அமைச்சாலும் எதிர்காலத்துல சுத்தமான தண்ணீருக்கு உத்தரவாதம் இல்லை. இந்தக் கிணத்துக்குள்ளேயே வேறு என்ன மாற்றம் செய்யலாம்னு தீவிரமான தேடுதல்யே இருந்தேன்.
அவரும் இதை வெச்சு மூணு போகம் சாகுபடி செய்றார்” என்ற ஜெயராமன் நிறைவாக, “வயலுக்கு பாய்ச்சுற தண்ணீர்ல பத்து சதவீதத்தை மட்டும்தான் பயிர்கள் எடுத்துக்குது. மீதி தண்ணீர், இடுக்குகள் வழியா கீழ இறங்கி, இந்தத் துளைகள் மூலமா, கிணத்துக்கே வந்துடுது. மழைநீரும் நிலத்துக்குள்ள இறங்கி, கிணத்துக்கு வந்துடுது. மூணு போகமும் சாகுபடி செய்றதுனால, மண்ணுல எப்போதும் ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கு. பயனில்லாம கிடக்குற கிணறுகள்ல, இது மாதிரி துளைகள் அமைச்சா... தண்ணீர் பிரச்னைக்கு சுலபமா தீர்வு கிடைச்சுடும்’’ என்றார்.
தொடர்புக்கு, ஜெயராமன், செல்போன்: 96555-14609.
‘இது மிகச் சிறந்த முறை!’திறந்தவெளிக் கிணறுகளின் உள்ளே பக்கவாட்டுப் பகுதிகளில் நீளமான துளைகள் அமைப்பது குறித்து திண்டுக்கல் மாவட்டம் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை வேளாண் பொறியாளர் பிரிட்டோவிடம் கருத்து கேட்டோம்.
‘‘இது மிகச்சிறந்த முறையாகும். கிணறுகளின் உள்ளே வெள்ளைநிற படிவுப்பாறைகள் உள்ள பகுதிகளைத் தேர்ந்தெடுத்து துளைகள் அமைக்க வேண்டும். இதுபோன்ற பகுதிகளில் உள்ள துளைகள் அவ்வளவு எளிதில் சிதையாது. நீர்ப்பிடிப்பு, நீர்க்கசிவு, ர்ப்போக்குவரத்து அனைத்துக்கும் இதுதான் ஏற்றது. நீளமான துளையிடுவதற்கும் எளிதாக இருக்கும்.
எதிர்காலத்தில் நெகிழ்வுத் தன்மையால் இந்தத் துளைகளில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்க, துளையின் ஒட்டுமொத்த நீளத்துக்குமே பிளாஸ்டிக் குழாய் சொருகுவது நல்லது. பிளாஸ்டிக் குழாயில் சுமார் 10 சென்டிமீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே துளைகள் இருக்க வேண்டும்’’ என்றார்.
தொடர்புக்கு, செல்போன்: 99444-50552.
Post a Comment