டல் சருமத்தையும் டாலடிக்கச் செய்யலாம்! பாரம்பரியம் VS பார்லர் ! ஹெல்த் ஸ்பெஷல்!!
டல் சருமத்தையும் டாலடிக்கச் செய்யலாம்! பாரம்பரியம் VS பார்லர் - 14 பார்லர் வெ யில் காரணமாக பாதிக்கப்படும் சருமத்துக்கு, பார்லர்...
https://pettagum.blogspot.com/2014/07/vs.html?m=0
டல் சருமத்தையும் டாலடிக்கச் செய்யலாம்!
பாரம்பரியம் VS பார்லர் - 14
பார்லர்
வெயில்
காரணமாக பாதிக்கப்படும் சருமத்துக்கு, பார்லர் மற்றும் பாரம்பரிய
சிகிச்சைகளைக் கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, 'க்ரீன்
டிரெண்ட்ஸ்’ பார்லரின் சீனியர் டிரெயினர் பத்மா சொன்ன சம்மருக்கான பார்லர்
சிகிச்சைகள்...
''க்ளோயிங் ரேடியன்ஸ் என்றொரு சிகிச்சை இருக்கிறது.
இது, டல் சருமத்துக்கான ஸ்பெஷல் ஃபேஷியல். இது சருமத்தைப் பொலிவாக்குவதோடு,
தளர்ந்த சருமத்தை இறுக்கமாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றும்.
ஃபிரெஷ் பழங்கள் மற்றும் பிளாட்டின செல்லுலாய்டு கொண்ட
ஃபேஷியலை பிளாட்டினம் க்ளோ என்று சொல்வோம். இதில் டி - டேன் ஃபேஸ் பேக்கும்
உள்ளதால், கருமை மற்றும் மங்கு குறைந்து, முகம் பளபளப்பாகும். மேலும்
சருமத்துக்குக் குளிர்ச்சியும் தரவல்லது.
வெயிலினால் பாதிக்கப்பட்ட கைகளையும், கால்களையும்
ப்ளீச் செய்து, கைக்கு மெனிக்யூர், காலுக்கு பெடிக்யூர் செய்யலாம். இதன்
மூலம் இறந்த செல்களை நீக்கி சுத்தப்படுத்தி, சரும நிறத்தைக் கூட்டலாம்.
இதனுடன் 'வேக்ஸிங்’கும் செய்துகொள்வது, கூடுதல் அழகு தரும்'' என்று சொன்ன
பத்மா, பியூட்டி டிப்ஸும் தந்தார்...
பாரம்பரியம்
வெயிலினால்
ஏற்படும் சரும பாதிப்புகளிலிருந்து தற்காப்பதற்கான பாரம்பரிய முறையிலான
சிகிச்சையை வழங்குகிறார், 'கேர் அண்ட் க்யூர்’ அரோமா கிளினிக் நிர்வாகி
கீதா அஷோக்...
''பாத எரிச்சல்:
வெயில் காலத்தில் வயதானவர்களுக்கு பாத எரிச்சல் வருவது இயல்பு. இதற்குத்
தினமும் இரவில் அரை பக்கெட் குளிர்ந்த நீரில் ஒரு கைப்பிடி கல் உப்பு, ஒரு
கைப்பிடி எப்சம் உப்பு (கெமிக்கல் கடைகளில் கிடைக்கும்), பத்து மில்லி
விளக்கெண்ணெய் விட்டு, பக்கெட் நீரில் பாதங்களை கால் மணி நேரம் ஊறவிடவும்.
விளக்கெண்ணெய் நக இடுக்கில் சென்று, பாதத்துக்கு குளிர்ச்சி தரும்.
கண் எரிச்சல்:
காதி கிராஃப்ட்டில் கிடைக்கக்கூடிய 'குளிர் தாமரை தைலம்’ மற்றும்
விளக்கெண்ணெய் இரண்டிலும் தலா ஐந்து மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து,
உச்சந்தலையில் வைத்து சூடு பறக்கத் தேய்க்கவும். பிறகு, தலைமுழுவதும்
தேய்த்து, 2 மணி நேரம் ஊறவைத்து அலசினால்... கண் எரிச்சல் மட்டும்
இல்லாமல், உடல் சூடும் சுத்தமாகக் குறைந்து, உடம்பே லேசானது போல இருக்கும்.
உடல் சூடு: சோற்றுக்கற்றாழையை
இரண்டாகக் கீறி, அதனுள் கைப்பிடி அளவு வெந்தயத்தை வைத்து, கற்றாழையை
திரும்பவும் ஒன்றாக வைத்து மூடி, கயிற்றால் கட்டி விடவேண்டும். இரண்டு நாட்
கள் கழித்து கயிற்றைப் பிரித்தால் உள்ளிருக் கும் வெந்தயம்
முளைவிட்டிருக்கும். அதை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து வழித்தெடுத்து
அரைத்து, அதில் ஐந்து மில்லி நல்லெண்ணெய், பத்து மில்லி விளக்கெண்ணெய்
கலந்து தலையில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து குளித்தால்... உடம்பு
குளிர்ச்சியாகும்.
எண்ணெய் வழியும் முகம்: அளவுக்கு
அதிகமான வெயிலால், புறஊதா மற்றும் அகச்சிவப்பு கதிர்கள் சருமத்தில்
ஊடுருவி, சீபம் எனும் எண்ணெயை அதிகமாக சுரக்கச் செய்யும். வெயிலினால்
ஏற்கெனவே வியர்வைத் துவாரங்கள் திறந்து வியர்ப்பதால், அதே துவாரங்கள்
வழியாக சீபம் எனும் எண்ணெயும் வெளியேறும். இதனால்தான் முகத்தில் எண்ணெய்
வழிகிறது.
காற்றில்
உள்ள தூசு, அழுக்கு என மாசுக்கள் சருமத்தோடு ஒட்டிக்கொண்டு முகத்தின்
பொலிவைக் குறைக்கும். இதன் விளைவாக முகப்பரு, கரும்புள்ளி, ரேஷஸ், மங்கு
போன்றவை ஏற்படும்'' என்று சொன்ன கீதா அஷோக் எண்ணெய் வழிவதைக்
கட்டுப்படுத்தி, முகத்தைப் பொலிவாக்க சில 'ஹோம் மேடு’ டிப்ஸ்கள் தந்தார்...
பளீரிடும்...
நாட்டு மருந்துக்
கடையில் கிடைக்கக் கூடிய பாதாம் பிசினை பொடித்து, ஒரு ஸ்பூன் அளவுக்கு
எடுத்து, கால் டம்ளர் தண்ணீரில் கலந்து, 3 மணி நேரம் ஊறவிடவும். அதனுடன்
தர்பூசணிச் சாறு 2 டீஸ்பூன், பாதாம் எண்ணெய் அரை டீஸ்பூன் சேர்த்துக்
கலக்கவும். கண், மூக்கு, வாய்க்கு மட்டும் துளையிட்ட மெல்லிய மஸ்லின்
துணியை முகத்தின் மீது போட்டு, அதன் மேல் இந்தக் கலவையை கனமான பேக்
போடவும். அரை மணி நேரம் கழித்துக் கழுவவும். இந்தக் கலவையை ரெடி செய்து
ஃப்ரிட்ஜில் வைத்து தினமும் பயன்படுத்தினால், முகம் குளிர்ந்து
பொலிவாவதுடன், நிறமும் கூடும். இது அனைத்து வகை சருமம் கொண்டவர்களுக்கும்
ஏற்றது!

Post a Comment