முக‘வரி’கள் மறைய...! மருத்துவ டிப்ஸ்!!
முக‘வரி’கள் மறைய... சு ருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே, தோலில் ஏற்படும் சுருக்கங்கள...
https://pettagum.blogspot.com/2014/06/blog-post_9721.html?m=0
முக‘வரி’கள் மறைய...
சுருக்கங்கள்
அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே,
தோலில் ஏற்படும் சுருக்கங்கள் 'மூப்பு நெருங்குகிறது’ என்பதைச் சொல்லாமல்
சொல்லும். இந்தச் சுருக்கங்களைப் போக்க பலரும் பியூட்டி பார்லர், மாற்று
மருத்துவ சிகிச்சைகள் எனத் தீவிர முயற்சியில் இறங்குவார்கள். ஆனால்,
அவர்களின் கவனம் முழுவதும் முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்குவதில்
இருக்குமே தவிர, கை, கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் சுருக்கங்களை பற்றிய
அக்கரை இருக்காது. வயதின் மூப்பு, சருமத்தில் எங்கெல்லாம் தெரியும்? வந்த
சுருக்கங்களைக் குறைக்கவும், வராமல் தடுக்கவும் என்ன செய்யலாம்? என்பது
குறித்த டிப்ஸ்களைத் தருகிறார் அழகுக் கலை நிபுணர் ஹசீனா சையத்.
'நம் தோலில் உள்ள கொலாஜென் மற்றும் எலாஸ்டின் என்ற
புரதங்கள், தோலுக்கு மிருதுவையும், உறுதித்தன்மையையும் தருகிறது. வயது
அதிகரிக்கும்போது புரதங்களின் அளவு உடலில் குறையும். இதன் காரணமாகவே தோலில்
சுருக்கங்கள் ஏற்படுகின்றன. முதலில் உள்ளங்கையின் மேற்புறத்தில்தான்
சுருக்கங்கள் தோன்றும். ஏனெனில், இந்தப் பகுதியில்தான் நீர் அதிக அளவில்
பயன்படுத்தப்படுகிறது. பிறகுதான் முகத்திலும், கழுத்துப் பகுதியிலும்
தெரியும்.
பொதுவாக, எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு சுருக்கங்கள்
அதிகம் வருவது இல்லை. வறண்ட தோல் உடையவர்களுக்கு கொலாஜென் குறைபாட்டால்,
விரைவில் சுருக்கங்கள் ஏற்பட்டுவிடும்.
35 முதல் 40 வயதுடையவர்களுக்கு சுருக்கம் ஏற்பட்டால்,
அது இயற்கையாக வயது அதிகரிப்பதைக் காட்டுகிறது. ஆனால் 25 முதல் 30 வயதுடைய
வர்களுக்கு சுருக்கம் ஏற்படுமானால், அவர்களின் வாழ்க்கைமுறையிலோ, உணவுப்
பழக்கத்திலோ பிரச்னைகள் அல்லது மரபு சார்ந்த பிரச்னைகள் இருக்க
வாய்ப்புள்ளது.
புகைபிடித்தல், சோப் மற்றும் க்ரீம்களை அடிக்கடி
மாற்றுதல், சருமத்தில் சூரிய ஒளி அதிகம் படுதல், மன அழுத்தம்,
சுற்றுச்சூழல் மற்றும் நம் முக பாவனைகளும்கூட சுருக்கங்கள் வருவதற்குக்
காரணமாக அமைந்துவிடுகின்றன. மேலும், சிலர் தூங்குவதற்கு முன்பு, முகத்தில்
க்ரீம்கள், முல்தானி மட்டி, சந்தனம் என ஏதேனும் பூசிக்கொண்டு
படுப்பார்கள். எந்த ஒரு பொருளையும் முகத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல்
வைத்திருக்கக் கூடாது. இதனால், தோல் வறண்டு, அச்சுப் பதிந்து சுருக்கங்கள்
ஏற்பட்டு விடும்.
சரும சுருக்கங்களைப் போக்க மருத்துவ ரீதியாக பல
சிகிச்சைகள் இருந்தாலும், அவற்றுக்கான கட்டணம் அதிகம். பக்கவிளைவுகளையும்
உண்டாக்கும். எனவே, சுருக்கங்கள் வந்தவுடன் அதைப் போக்க முயற்சி
எடுப்பதைவிட, வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலே
போதும், என்றும் இளமையாக இருக்கலாம்!' என்கிறார் ஹசீனா.
சரும சுருக்கங்களை தடுக்க எளிய டிப்ஸ்..

Post a Comment