மக்மல் பூரி!--சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள் : மைதா மாவு, சர்க்கரை - தலா கால் கிலோ தேங்காய் - 1 மூடி அரிசி மாவு - 50 கிராம் நெய் - 100 கிராம் எண்ணெய் - அரை லிட்டர் ஜி...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post.html?m=0
தேவையான பொருட்கள்:
மைதா மாவு, சர்க்கரை -
தலா கால் கிலோ
தேங்காய் - 1 மூடி
அரிசி மாவு - 50 கிராம்
நெய் - 100 கிராம்
எண்ணெய் - அரை லிட்டர்
ஜிலேபி பவுடர் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: தேங்காயை துருவி, பாலெடுத்து, உப்புடன் மைதாவை சேர்த்து, பூரிக்கு பிசைவது போல பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். நெய்யுடன், அரிசி மாவை கலந்து கொள்ளவும். மைதா மாவு உருண்டைகளை, பூரி போல தேய்க்கவும். ஒரு பூரி மேல், கொஞ்சம் அரிசி மாவை தடவி, அதன் மேல், மற்றொரு பூரியை போடவும். அதன் மேல், சிறிது நெய் கலந்த அரிசி மாவை தடவவும். மீண்டும் ஒரு பூரியை அதன் மேல் வைக்க வேண்டும். அதே போல், ஐந்து பூரிகளை வைக்கவும். அதை, அப்படியே சேர்த்து உருட்டவும். அதை, குறுக்காக மூன்று அல்லது நான்கு துண்டுகளாக வெட்டவும்.
ஒவ்வொரு துண்டையும், பூரிப் பலகை மேல் வைத்து, லேசாக தேய்க்கவும். இது, பார்ப்பதற்கு வெஜிடபிள் பப்ஸ் வடிவில் இருக்கும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூரிகளை ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும். சர்க்கரையுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, பாகு காய்ச்சவும். பாகில் ஜிலேபி பவுடரை சேர்த்து கொள்ளவும். கம்பிப் பதம் வந்தவுடன் இறக்கி வைத்து, பொரித்து வைத்துள்ள பூரிகளை போட்டு எடுக்கவும்.
Post a Comment