பெங்களூர் பிரியாணி--சமையல் குறிப்பு
பெங்களூர் பிரியாணி தேவையானப் பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ அரிசி - 1 கிலோ எண்ணை - 100 கிராம் நெய் - 150 கிராம் பட்டை பிரியாணி இலை,...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_4187.html?m=0
பெங்களூர் பிரியாணி
தேவையானப் பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
அரிசி - 1 கிலோ
எண்ணை - 100 கிராம்
நெய் - 150 கிராம்
பட்டை பிரியாணி இலை,கிராம்பு,ஏலக்காய் -தேவையான அளவு
வெங்காயம் - 500 கிராம்
தக்காளி -500 கிராம்
இஞ்சி - 11/2 ஸ்பூன்
பூண்டு - 11/2 ஸ்பூன்
கொ. மல்லி தழை-1 கப்
புதினா - 11/2 கப்
ப. மிள்காய் - 5
தயிர் - 1கப்
சிகப்பு மிளகாய் தூள் - 11/2 டீஸ்பூன்
மஞ்சள் போடி - 1/2 டீஸ்பூன்
தணியா பொடி-1 டீஸ்பூன்
கலர் பொடி - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் - 1
நெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை
பெங்களூர் பிரியாணி
செய்முறை:
ஓர் பெரிய சட்டில் எண்ணையும் நெய் ஊற்றி பாதி வெங்காயம் போட்டு பொந்நிறமாக பொரிக்கவும். அதனை தணியாக எடுத்து வைக்கவும்.
பின் அதில் பட்டை, கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிந்ததும் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் பிறகு பாதி கொ. மல்லி புதினா வை போட்டு கிளறவும்.
ப.மிளகாய் மிளகாய் தூள், மஞ்சல் தூள், உப்பு தேவையான் அளவு போட்டு வதங்கியவுடன் சிக்கன் தயிர் தனியாபொடி,1/2 மூடி எலுமிச்சைசாறு தக்காளி மீதி கொ.மல்லி புதினா போட்டு வேக விடவும்.
சிக்கன் நன்குவெந்த்தும் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு 1 1/2கப் சூடு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் கலர் பொடி உப்பு போடவும்.
அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து நன்கு வடி கட்டவும்.
அரிசியை போட்டு நன்கு கிளரவும்.
அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால் பகுதி வெந்தவுடன் தீயை சுருக்கவும். பாதி எலுமிச்சை ஜீஸ் ஊற்றவும்.
சட்டி்யை சுற்றிலும் துணிகட்டி தம்மில் போடவும். 10 நிமிடங்கள் கழித்து சுவையான பிரியாணி ரெடி.
சூடாக ராய்தா எண்ணை கத்திரிக்காயுடன் பரிமாறவும்.
Post a Comment