நல்ல வருமானம் கொடுக்கும் பாரம்பர்ய நெல்! மதிப்புக்கூட்டினால் கூடுது லாபம்!மகசூல்!!

உ ற்பத்திச் செலவு குறைவு, மதிப்புக் கூட்டுதல் மூலம் கூடுதல் விலை என்று பாரம்பர்ய நெல் சாகுபடியின் மூலம் கிடைக்கும் பலன்கள் அதிகம். இதைப...

ற்பத்திச் செலவு குறைவு, மதிப்புக் கூட்டுதல் மூலம் கூடுதல் விலை என்று பாரம்பர்ய நெல் சாகுபடியின் மூலம் கிடைக்கும் பலன்கள் அதிகம். இதைப் புரிந்துகொண்ட விவசாயிகள் பலர், பாரம்பர்ய நெல் சாகுபடியில் நிறைவான லாபம் பார்த்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைவாணி.
 யோகா ஆசிரியையான கலைவாணி, இந்த ஆண்டுக் குறுவைப்பட்டத்தில் 5 ஏக்கர் பரப்பில் குள்ளக்கார் ரக நெல்லைச் சாகுபடி செய்துள்ளார். மன்னார்குடியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழகண்டமங்கலம் எனும் கிராமத்தில் இருக்கிறது, கலைவாணியின் நெல் வயல். ஒரு பகல்பொழுதில் வயலில் இருந்த கலைவாணியைச் சந்தித்துப் பேசினோம்.

“எனக்கு இயற்கை விவசாயத்துல ஈடுபாடு வரக்காரணம், என்னோட கணவர் கணேஷ்தான். அவர் மஸ்கட்ல வேலை பார்த்துக்கிட்டு இருக்கார். இப்போ விடுமுறையில வந்திருக்கார். நான் முதுகலை யோகா படிச்சிட்டு, மன்னார்குடியில் சில பள்ளிக்கூடங்கள்ல பகுதி நேர யோகா ஆசிரியையா வேலை செய்திட்டிருக்கேன். தினமும் இரண்டு மணிநேரம்தான் யோகா வகுப்பு இருக்கும். மற்ற நேரங்கள்ல வயலுக்கு வந்திடுவேன். என்னோட அப்பாவும் விவசாயத்துக்கு உதவியா இருக்கார். எங்க வீட்ல இருந்து 10 கிலோமீட்டர் தூரத்துல வயல் இருக்கு. இருந்தாலும் தினமும் டூ வீலர்ல வயலுக்கு வந்திடுவேன். மூணு வருஷத்துக்கு முன்ன, என்னோட கணவர் இந்த நிலத்தை வாங்கினார். இயற்கை விவசாயம் செய்யலாம்னு அவர் சொன்னப்போ, அதெல்லாம் சரியா வராதுனு நான் சொன்னேன். ஆனாலும், அவர் உறுதியோடு இருந்து என்னை உற்சாகப்படுத்தினார். ‘பசுமை விகடன்’ புத்தகத்துல வந்த கட்டுரைகளை என்னைப் படிக்கச் சொன்னார். அதையெல்லாம் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. அதுலதான் பாரம்பர்ய ரக நெல்லைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன். குள்ளக்கார் ரகத்தை உற்பத்தி செய்து அதன் அரிசியைச் சாப்பிட ஆரம்பிச்ச பிறகு, எனக்கு இருந்த இடுப்பு வலி குணமாக ஆரம்பிச்சது. என் அப்பாவுக்கு நீரிழிவு நோயும் கட்டுக்குள் வந்தது. அதுக்கப்புறம்தான் முழுமையா விவசாயத்துல ஈடுபட்டு பாரம்பர்ய நெல்லைச் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். பசுமை விகடனைப் பார்த்துத்தான் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்கிறோம். ஜீவாமிர்தம், பஞ்சகவ்யானுதான் பயன்படுத்துறோம். அதையெல்லாம் தயாரிக்கத் தேவையான சாணம், சிறுநீரை விலைக்குத்தான் வாங்கிக்கிறோம். அடுத்து, இங்கேயே ஆடு, மாடுகளை வளர்க்கலாம்னு இருக்கோம்” என்ற கலைவாணி, வயலுக்குள் அழைத்துச் சென்று பயிர்களைக் காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.


 “மொத்தம் 7 ஏக்கர் வயல் இது. நெல் ஜெயராமனின் யோசனைப்படி, ஆரம்பத்துல சோதனை முயற்சியா ஒரு ஏக்கர் வயல்ல மட்டும் இயற்கை முறையில் நெல் சாகுபடி செஞ்சோம். விதைப்புக்கு முன்னாடி, நிலத்தை வளப்படுத்த… 7 ஏக்கர்லயும் 750 ஆடுகளை கொண்டு, 20 நாள்கள் கிடை போட்டோம். ஏக்கருக்கு 20 கிலோ வீதம் தக்கைப்பூண்டு விதைச்சு 30-ம் நாள் மடக்கி உழுதோம். 2017-ம் வருஷம், குறுவைப்பட்டத்தில் ஒரு ஏக்கர் வயல்ல மட்டும் குள்ளக்கார் ரகத்தைச் சாகுபடி செஞ்சோம். அதுல ஏக்கருக்கு 9 மூட்டை (60 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சது. சம்பாப்பட்டத்தில் காட்டுயானம் ரக நெல்லைச் சாகுபடி செஞ்சோம். அதுல, 12 மூட்டை மகசூல் கிடைச்சது. போன வருஷம், குறுவையில் ஒண்ணே முக்கால் ஏக்கர் வயல்ல குள்ளக்கார் ரக நெல்லைச் சாகுபடி செஞ்சோம். அதுல ஏக்கருக்கு 15 மூட்டை அளவு மகசூல் கிடைச்சது.

போன வருஷம் சம்பாப்பட்டத்தில் ஒன்றரை ஏக்கர் வயல்ல காட்டுயானம் ரக நெல்லைச் சாகுபடி செஞ்சோம். கஜா புயல்ல பாதிப்பு ஏற்பட்டுடுச்சு. அதுல மொத்தம் 15 மூட்டை மகசூல் கிடைச்சது. இந்த வருஷம் குறுவைப்பட்டத்தில் 5 ஏக்கர் வயல்ல குள்ளக்கார் நெல் ரகத்தைச் சாகுபடி செஞ்சிருக்கோம். விதைச்சு 45 நாள் ஆகுது. பயிர் நல்லா செழிப்பாக இருக்கு. ஒரு ஏக்கருக்கு 15 மூட்டைக்கு மேல மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறோம்” என்ற கலைவாணி நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“நெல்லை அரிசியாக்கி நண்பர்கள், உறவினர்களுக்கு விற்பனை செய்திட்டு இருக்கோம். வாடிக்கையாளர்களோட தேவைக்கேற்ப 5 கிலோவிலிருந்து அதிகபட்சம் 50 கிலோ வரை பேக் செய்து விற்பனை செய்றோம்.
இப்போ சந்தை வாய்ப்பு அதிகமாகிக்கிட்டே இருக்கு. ஒரு கிலோ அரிசி 80 ரூபாய்னு விற்பனை செய்றோம். குருணை, வைக்கோல், தவிடு எல்லாத்தையும் விற்பனை செய்றது மூலமாகவும் தனியா வருமானம் கிடைக்குது. எல்லாச் செலவும் போக, ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது” என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு, கலைவாணி, செல்போன்: 82481 52571.



இப்படித்தான் சாகுபடி செய்யணும்

ரு ஏக்கர் பரப்பில் குள்ளக்கார் ரக நெல் சாகுபடி செய்யும் விதம் குறித்துக் கலைவாணி சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே…

குள்ளக்கார் ரகத்தின் வயது 110-115 நாள்கள். ஒரு ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்ய, 5 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலில் அடியுரமாக 50 கிலோ மாட்டு எரு போட்டு மண்ணைச் சமப்படுத்த வேண்டும். 30 கிலோ விதைநெல்லுடன் (முளைக்கட்டிய மூன்றாம் கொம்பு விதை) 150 மில்லி சூடோமோனஸ் திரவம் கலந்து, நாற்றங்காலில் விதைக்க வேண்டும். 10-ம் நாள் 30 மில்லி பஞ்சகவ்யாவை 13 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 15-ம் நாள் பாசனநீரில் 40 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்துவிட வேண்டும். 20-ம் நாள் 30 மில்லி பஞ்சகவ்யாவை 13 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 25-ம் நாள் நாற்றுகள் செழிப்பாக வளர்ந்து நடவுக்குத் தயாராகிவிடும்.

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஆட்டுக்கிடை அமைத்து, ஏக்கருக்கு 25 கிலோ வீதம் தக்கைப்பூண்டு விதைக்க வேண்டும். 30-ம் நாள் தண்ணீர் கட்டி தக்கைப்பூண்டை மடக்கி உழ வேண்டும். அடுத்த 10 நாள்களில் தயிர் பதத்துக்கு மண்ணின் தன்மை மாறிவிடும். பிறகு ஓர் உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்தி, முக்கால் அடி இடைவெளியில் குத்துக்கு 2-3 நாற்றுகள் வீதம் நடவு செய்ய வேண்டும். 3-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா, 300 மில்லி சூடோமோனஸ் திரவம் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும். 13-ம் நாள், பாசன நீரில் 400 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்துவிட வேண்டும். 23-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி மீன் அமினோ அமிலம் கலந்து தெளிக்க வேண்டும்.
33-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். 43-ம் நாள், 24 கிலோ வேப்பம்பிண்ணாக்கை மணலுடன் கலந்து பரவலாகத் தூவ வேண்டும். 53-ம் நாள், பாசன நீரில் 400 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்துவிட வேண்டும். 63-ம் நாள், 100 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி மீன் அமினோ அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப அவ்வப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து ஜீவாமிர்தம் மட்டும் கொடுத்து வந்தால் போதுமானது. கதிர் முற்றிய பிறகு அறுவடை செய்யலாம்.
மழைநீரில் மூழ்கினால் காப்பாற்றும் முட்டைக் கரைசல்

லைவாணியின் கணவர் கணேஷ், “டெல்டா இயற்கை விவசாயிகள் அசோஷியேஷன்-ங்கற பேர்ல ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கு. இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பர்ய நெல் சாகுபடி தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் இந்தக் குரூப் மூலமாகத் தெரிஞ்சிக்க முடியுது. இந்த வருஷம், குள்ளக்கார் நடவு செஞ்ச அன்னிக்கு, மழை பெய்ஞ்சு, நாற்றுகள் தண்ணீரில் மூழ்கிடுச்சு. அப்ப நான் மஸ்கட்ல இருந்தேன். பயிர்கள் அழுக ஆரம்பிச்சிடுச்சு. என்னோட மனைவி எனக்கு போன் பண்ணி வருத்தப்பட்டாங்க. இளம்பயிர்கள எப்படிக் காப்பாத்துறதுனு வாட்ஸ்அப் குரூப்ல உள்ள இயற்கை விவசாய நண்பர்கள்கிட்ட கேட்டேன்.

ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீர்ல 500 மில்லி முட்டைக் கரைசல் கலந்து தெளிக்கணும்னு சொன்னாங்க. ஒரு கிலோ சின்ன வெங்காயத்தைத் தண்ணீர்ல ஊற வெச்சு, அரைச்சு சாறு எடுத்துக்கணும். அதோட 10 முட்டைகளோட வெள்ளைக்கரு, 50 கிராம் வசம்பு, 50 கிராம் சூடோமோனஸ்னு மூன்றையும் கலந்து 10 லிட்டர் தண்ணீர் சேர்த்தால் முட்டைக்கரைசல் தயார். இதைத் தெளிச்ச சில நாள்கள்லயே, பயிர் உயிர் பிடிச்சு வளர ஆரம்பிச்சது” என்று அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

தொடர்புக்கு, செல்போன்: கணேஷ், மஸ்கட்: 0096896 350554 

Thanks to vikatan.com

Related

விவசாயக்குறிப்புக்கள் 4809143593185278993

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item