சிரிப்பு ...மனச்சோர்வு போக்கும், ரத்த அழுத்தம் குறைக்கும், இதயம் காக்கும்...!

மனச்சோர்வு போக்கும், ரத்த அழுத்தம் குறைக்கும், இதயம் காக்கும்... ‘சிரிப்பு’! “நல்ல மார்க் வாங்க துப்பில்லை! `ஜீரோ’ வாங்கிட்டு வந்திருக்...

மனச்சோர்வு போக்கும், ரத்த அழுத்தம் குறைக்கும், இதயம் காக்கும்... ‘சிரிப்பு’!

“நல்ல மார்க் வாங்க துப்பில்லை! `ஜீரோ’ வாங்கிட்டு வந்திருக்கியே... நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான்டா லாயக்கு...” - பள்ளித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த பிள்ளையை இப்படித் திட்டித் தீர்த்த அப்பாக்கள் ஏராளம். இதில் அந்த மாணவன் மனதில் ஆழமாகப் பதிந்துபோகும் விஷயம் ஒன்று உண்டு. அது, தனக்குத் திறமை இல்லை; சாமர்த்தியம் போதாது; தன்னால் எந்தச் செயலையும் சரியாகச் செய்ய முடியாது’ என்பது. அதோடு, இன்னோர் அபத்தமான விஷயமும் விதைக்கப்பட்டுவிடும். அதாவது `ஆடு, மாடு மேய்ப்பவர்கள் திறமையற்றவர்கள்’ என்ற தகவல். பெற்றோராலும், பிறராலும் சிறு வயதிலேயே விதைக்கப்படும் இதுபோன்ற எண்ணங்கள் அவர்கள் வளர்ந்த பிறகும் தொடர்ந்துகொண்டேயிருக்கும். அதன் காரணமாகவே அவர்கள் பின்னாளில் புதிதாக எதையும் முயற்சி செய்து பார்க்க மாட்டார்கள். தனக்குள்ள திறமை இவ்வளவுதான், தன்னால் இவ்வளவுதான் முடியும் என்று நகர்ந்துகொண்டிருக்கும் அவர்கள் வாழ்க்கை.
சரி... சரியாகப் படிக்காத, சொல் பேச்சுக் கேளாத பிள்ளைகளை எப்படித்தான் கண்டிப்பது?

“ ‘என்ன இப்பிடி ‘முட்டை’ வாங்கிட்டு வந்திருக்கே... இப்படியே தொடர்ந்து முட்டையா வாங்கிட்டு இருந்தீன்னா கோழிப்பண்ணைதான் வைக்கமுடியும். நீ திறமைசாலியாச்சேப்பா..! அப்புறம் ஏன் இப்படி மார்க் குறையுது? கொஞ்சம் கவனமாப் படி கண்ணு...’’ எனக் கொஞ்சம் நகைச்சுவையுடன், அவர்களைத் தட்டிக்கொடுக்கும்விதத்தில் அன்பாகக் கூறும் அறிவுரைகள்தான் பிள்ளைகளுக்குத் தேவை’’ என்கிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக்.

ஒரு நாளை தொடங்கும்போது, நாம் என்ன மனநிலையில் இருக்கிறோமோ அப்படித்தான் அந்தநாள் முழுக்க இருப்போம். காலையில் ஒரு நல்ல நகைச்சுவைக் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அலுவலகத்துக்குப் போனால், அந்த நாள் முழுக்க மகிழ்ச்சிகரமாக இருக்கும். நல்லவரோ, கெட்டவரோ சிரிக்க மறந்து சிடுசிடுவென இருப்பவர்களை யாரும் விரும்புவதில்லை. முகமலர்ச்சியோடு, சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்களைத்தான் பெரும்பாலானோர் விரும்புவார்கள். எத்தனையோ ஆசிரியர்கள் நமக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திருந்தாலும், நகைச்சுவையுணர்வுடன் பாடம் நடத்திய தமிழ் ஐயாதான் நம் அத்தனை பேரின் மனதிலும் நிறைந்திருப்பார். குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கக் காரணம் அவர்கள் யார், என்ன, எப்படிப்பட்டவர் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு முன்னால் யார் நின்று சிரித்தாலும் சிரிப்பார்கள்; நாம் சிரிக்காவிட்டாலும் சிரிப்பார்கள். சிரிப்பு உலகின் தனித்துவமான மொழி. இந்த மொழியை அறிந்தவர்கள் அனைவராலும் நேசிக்கப்படுவார்கள்; யாராலும் வெறுக்கப்பட மாட்டார்கள். சிரிப்பின் மகத்துவத்தை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். சிரிப்பு மனதுக்கு மட்டுமல்ல... உடலுக்கும் ஏராளமான நன்மைகளை அள்ளித் தரும் மாயாஜாலம்.

அது பற்றி விரிவாக விளக்குகிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக்... “நகைச்சுவை உணர்வு, புன்னகை, சிரிப்பு மூன்றும் ஒரு மனிதனுக்கு இன்றியமையாதவை. சிரித்தல் என்பது சாப்பிடுவது, தூங்குவது போன்ற ஒரு கடமை அல்ல. அது ஓர் உணர்வு (Emotion). நம்மிடம் உள்ள நகைச்சுவையுணர்வுதான் நம் புன்னகைக்கும் சிரிப்புக்குமான ஆரம்பப்புள்ளியாக இருக்கும். எந்த விஷயத்தையும் ஒருவித வெறுப்போடும், எரிச்சலோடும் அணுகக் கூடாது. ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியோடுதான் தொடங்க வேண்டும். அதற்கு நண்பர்களிடம் மட்டுமல்லாமல், குடும்பத்திலும் நகைச்சுவையுணர்வுடன் உறவாடப் பழக வேண்டும். முந்தைய நாள்களின் சண்டைகள், பிரச்னைகளைப் பற்றி காலையில் சிந்திக்கக் கூடாது. இரவோடு இரவாக மறந்துவிட வேண்டும். காலை எழுந்தவுடன் நம் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையான, மகிழ்ச்சியான விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதுதான் நம்மை பாசிட்டிவ்வாக வைத்துக்கொள்ள உதவும். நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவும்.

நம்முடைய உணர்வுகளைப் (Emotions) பொறுத்துதான் நம்முடைய பழக்கவழக்கங்களும், செயல்பாடுகளும் இருக்கும். இவை அனைத்தும் நீயூராலாஜிக்கலாகவே ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. இவையனைத்தையும் இணைக்கும் இடத்துக்கு 'லிம்பிக் சிஸ்டம்' (Limbic system) என்று பெயர். அதில் இருக்கும் அமிக்தலா (Amygdala)தான் நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய உறுப்பு. நாம் சிரிக்கும்போது இது தூண்டப்பட்டு நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.

இயற்கை வலி நிவாரணி!
சிரிக்கும்போது நம் உடலில் உள்ள ஹேப்பி ஹார்மோன்களான எண்டார்பின் (Endorphins) அதிக அளவில் சுரக்கும். தலைவலி, உடலில் வேறு எங்கு வலி இருந்தாலும் அதை மறக்கச் செய்யும். அடிபட்ட குழந்தைகளைச் சிரிக்கவைப்பதற்கான முயற்சிகளைத்தான் பெரும்பாலும் செய்வோம். சிரிக்கும்போது குழந்தைகள் தங்களின் வலியை மறக்கிறார்கள். சிறியவர்கள் மட்டும் அல்ல, பெரியவர்களுக்கும் இது பொருந்தும். கேன்சரால் பாதிக்கப்பட்டு கடுமையான வலி இருப்பவர்களுக்குக்கூட நல்ல நகைச்சுவைக் காட்சிகள், திரைப்படங்கள்தாம் காண்பிக்கப்படுகின்றன. அந்த அளவுக்கு வலிகளைப் போக்கும் நிவாரணியாக சிரிப்பு இருக்கிறது.

மனஅழுத்தத்தைக் குறைக்கும்!
நம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் அழுத்தங்களைக் குறைக்க சிரிப்பு அவசியம். சிரிக்கும்போது நம் உடம்பில் அட்ரினல் சுரப்பிகள் சுரக்கின்றன. இது மனஅழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசால் (Cortisol)ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது. நாம் மனஅழுத்தத்தோடு இருந்தால், அது நம் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் குறைத்துவிடும். அதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ,மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தினமும் சிரிப்பு என்னும் மருந்தை எடுத்துக்கொண்டால், வழக்கமாகச் சுரக்கும் கார்டிசால் ஹார்மோன்கள் 69 சதவிகிதம் குறைகின்றன என்பது பல ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. சிரிப்பு, நம் ஞாபகசக்தியை மேம்படுத்தும். மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
மனச்சோர்வைப் போக்கும்!
ஒவ்வொருவரும் ஏதோ ஒரு லட்சியத்தோடுதான் பயணித்துக்கொண்டிருக்கிறோம். சில நாள்கள் நம் லட்சியத்தை அடைவதற்குச் சாதகமாகவும், பல நாள்கள் அதற்கு எதிரானதாகவும் நமக்குத் தோன்றும். அதனால் நமக்கு மனச்சோர்வு உண்டாகும். அனைத்து நாள்களையும் சாதகமானவையாகப் பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். அதற்கு, நாம் ஒவ்வொரு நாளும் `சிரித்து வாழ வேண்டும்.’ சிரிப்பு, நம் மூளைக்குச் செய்யப்படும் மசாஜ் போன்றது.
அதற்காக வம்படியாகச் சிரிக்கக் கூடாது. பின்னர் அதுவே நமக்கு மனஅழுத்தத்தைக் கொடுத்துவிடும். மனம்விட்டுச் சிரிக்க வேண்டும். அதற்கு நாம் நகைச்சுவையுணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மனச்சோர்விலிருந்து விடுபட முடியும். மனச்சோர்விலிருந்து விடுபட்டால்தான் நன்றாக உறங்க முடியும். நன்றாக உறங்கினால்தான் ஒவ்வொரு நாளையும் உற்சாகமாகத் தொடங்க முடியும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்!
சிரிப்பு நம் ரத்த நாளங்களைத் தூண்டி, ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவும். மனஅழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசால் போன்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள், ரத்த நாளங்களைச் சுற்றி ஒரு சுவர்போல இருக்கும். நாம் சிரிக்கும்போது அது குறைந்துவிடும். ரத்த நாளங்கள் பாதுகாக்கப்படும்.

இதயத்தைக் காக்கும் சிரிப்பு!
ரத்த நாளங்களுக்குள்ளே எண்டோதெலியம் (Endothelium) என்னும் ஹார்மோன் மெல்லிய கோடுகளைப்போல இருக்கும். ரத்த ஓட்டத்தைச் சீராகவைத்திருக்கவும், ரத்தத்தை உறையவைக்கவும் இந்த ஹார்மோன்கள்தாம் உதவுகின்றன. சிரிக்கும்போது எண்டோதெலியம் விரிவடைந்து சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவிபுரியும். இதனால் இதயம் பாதுகாக்கப்படும். வலிப்பு போன்ற நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
அமெரிக்காவின், மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் நகைச்சுவையுணர்வின் பலன்களை அறிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். ஒரு குழுவுக்குப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிய ஒரு திரைப்படமும், மற்றொரு குழுவுக்கு முழுக்க முழுக்க நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த படமும் ஒளிபரப்பப்பட்டது. பின்னர், இரண்டு குழுவையும் மருத்துவர்கள் ஆய்வுசெய்தார்கள். ஆய்வின் முடிவில் இரண்டாவது, குழுவைச் சேர்ந்த மாணவர்களின் ரத்த ஓட்டம் மிகச் சிறப்பாக இருந்ததையும், நல்ல கொழுப்புகள் உடலில் கூடியிருந்ததையும் கண்டறிந்தார்கள்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும்!
சிரிக்கும்போது நம் உடலில் உள்ள டி - செல்கள் தூண்டப்படுகின்றன. அதனால் பீட்டா எண்டார்பின் (Beta-endorphins) போன்ற ஹார்மோன்கள் சுரந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. ஜப்பானில் நடைபெற்ற ஓர் ஆய்வு இதைத் தெரிவிக்கிறது.

விழிவெண்படல நோயால் (Atopic keratoconjunctivitis) பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்லி சாப்ளின் நடித்த நகைச்சுவைத் திரைப்படமான 'மாடர்ன் டைம்ஸ்' ஒளிபரப்பப்பட்டது. திரைப்படத்தைப் பார்த்துச் சிரித்து மகிழ்ந்ததில் அவர்களின் உடலில் இம்யயூனோகுளோபுலின்களின் (Immunoglobulins) உற்பத்தி அதிகமாகியிருந்தது கண்டறியப்பட்டது. அதாவது நோயை உண்டாக்கும் வைரஸ்களைத் தாக்கி பாதிப்பைக் குறைத்திருக்கிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் பதினான்கு ஆய்வாளர்கள் தங்கியிருந்து அவர்களின் அன்றாடச் செயல்பாடுகளை ஆய்வுசெய்தார்கள். ஆய்வின் முடிவில் சிரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றலைக் கொஞ்சம் தூண்டுவதாகக் கண்டறிந்தார்கள். இப்போதும் இது, ஆய்வுநிலையில்தான் இருக்கிறது. ஒருவேளை இது சாத்தியமானால், கேன்சருக்கு சிரிப்பே மருந்தாக இருக்கும்’’ என்கிறார் மருத்துவர் ஸ்வாதிக்.

நாம் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், நமக்குக் கிடைக்கவேண்டிய சில அங்கீகாரங்கள் சிரிப்பில்லாத, நம் `சிடுசிடு’ முகத்தால் பறிபோயிருக்கலாம். நம்மை உண்மையாக நேசிக்க ஒருவர்கூட இல்லாமல் போகலாம். சிரிப்பு ஒன்று மட்டுமே மனிதர்களை இணைக்கும் பாலம். எனவே நாள் முழுக்கச் சிரிப்போம், மனதாரச் சிரிப்போம், நலமாக இருப்போம்!

Related

ஹெல்த் ஸ்பெஷல் 2493051975998870881

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item