ஒருங்கிணைந்த பண்ணையில் அசோலாவை எப்படிப் பயன்படுத்தலாம் ?’’

‘‘ஒருங்கிணைந்த பண்ணை வைத்துள்ளோம். இங்கு அசோலாவை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சொல்லவும்?’’ அசோலா வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த காஞ்சிபுர...

‘‘ஒருங்கிணைந்த பண்ணை வைத்துள்ளோம். இங்கு அசோலாவை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சொல்லவும்?’’

அசோலா வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சுப்பு பதில் சொல்கிறார்.

‘‘கிராமப்புற மக்களால் ‘கம்மல் பாசி’ என்று அழைக்கப்படும் அசோலா ஒவ்வொரு விவசாயி தோட்டத்திலும் இருக்கவேண்டிய, வளர்க்க வேண்டிய உயிரி. அதுவும், இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு அசோலா ஓர் அட்சயப்பாத்திரம் என்றே சொல்ல முடியும். மண்ணை வளப்படுத்தும் வேலையை மட்டும் இது செய்வதில்லை. ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பில்கூட அசோலா முக்கியப் பங்குவகிக்கிறது.

தினமும் அரைக்கிலோ அளவுக்கு அசோலாவைப் பால் மாடுகளுக்குக் கொடுத்தால், அதிகபட்சம் 1 லிட்டர் வரை கூடுதல் பால் கிடைப்பதைப் பல விவசாயிகளும் நிரூபணம் செய்துள்ளனர். மேலும், அசோலா கொடுப்பதால் 25% தீவனச் செலவு குறையும். கோழிகளுக்குக் கொடுத்தால் முட்டையிடும் திறன் கூடும். முட்டையின் எடையும் அதிகரிக்கும்.

மீன்களுக்குப் போட்டால் விரைவாக வளரும். ஆடுகளுக்குக் கொடுக்கும்போது ஆட்டின் எடையும் அதிகரிக்கும். ஆடுகளை அச்சுறுத்தும், நீலநாக்கு நோய்களும் அண்டாது. முருங்கைக் கீரையில் வடை, போண்டா செய்து சாப்பிடுவதுபோல, அசோலாவிலும் வடை, போண்டா... போன்ற பலகாரங்கள் செய்து சாப்பிடலாம். புரதச்சத்து மிக்க இந்த உணவைச் சாப்பிடும்படி, உணவியல் வல்லுநர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
அசோலாவை ஒருமுறை வளர்க்கத் தொடங்கிவிட்டால், பலமுறை வளர்ந்து பலன் கொடுத்துக்கொண்டே இருக்கும். குறைந்த செலவில், எளிய முறையில் அசோலாவை வளர்க்க முடியும். அதற்குத் தொட்டியில் 7 செ.மீ முதல் 10 செ.மீ உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்கிக் கொள்ளவும். பாலித்தீன் ஷீட் மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தியும் தரையிலேயே தொட்டியை உருவாக்கிக் கொள்ளலாம். சூரியஒளி படும் இடத்தில் இந்தத் தொட்டி இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.


தொட்டியிலிருக்கும் தண்ணீரில் சாணம் ஒரு கிலோ, பாறைத்தூள் ஒரு கைப்பிடி, அசோலா ஒரு கைப்பிடி போட்டுக் கலக்கிவிடவும். அடுத்த ஒரே வாரத்தில் பத்து மடங்கு அளவுக்கு அசோலா பெருகியிருக்கும். மீண்டும் அசோலா வேண்டுமென்றால், சாணம் மற்றும் பாறைத்தூளைத் தொட்டியில் போட்டால் போதும். அப்படியே பெருக ஆரம்பித்துவிடும்.

நெல் பயிரில் ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில், அசோலாவை இடலாம். நெல் வயலில் பச்சைப் போர்வை போர்த்தியதுபோல படர்ந்திருக்கும். இதனால், நீர் ஆவியாவது தடுக்கப்படும். நெற்பயிரில் ஏற்படும் களைகளும் கட்டுப்படும். வழக்கத்தைவிடக் கூடுதலாக விளைச்சல் கிடைக்கும்.

நன்மை செய்கிறது என்பதால் நெல் அறுவடை வரை அசோலாவை வயலில் வைத்திருக்க வேண்டாம். இரண்டாம் களை எடுக்கும்போது, அசோலாவை வயலிலேயே மிதித்து விட வேண்டும். இதன்மூலம் தழை, மணி, சாம்பல் போன்ற முக்கியமான சத்துகள் பயிர்களுக்குக் கிடைக்கும்.
நெல் சாகுபடியைப் பொறுத்தவரை, மூன்று போகம் அசோலாவைத் தொடர்ந்து இடுபொருளாகப் பயன்படுத்தி வந்தால், அந்த வயலில் நல்ல விளைச்சல் கிடைக்கும். மண்வளமும் பெருகிவிடும்.

அடுத்த போகத்தில் எந்தப் பயிரைச் சாகுபடி செய்தாலும், நல்ல விளைச்சல் கிடைக்கும். இந்த அற்புதமான உயிர் உரத்தை, விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முதல்முறை அசோலா வளர்க்கும்போது சிலருக்குச் சரியாக வளராது. அடுத்தமுறை சாணம், பாறைத்தூள்... போன்றவற்றைச் சரியான அளவில் பயன்படுத்தினால், நிச்சயம் சிறப்பாக வளர்ந்து பலன் கொடுக்கும். எனவே, முதல் முயற்சியில் தடை ஏற்பட்டால் தயங்கி விட்டுவிட வேண்டாம்.’’

தொடர்புக்கு, செல்போன்: 96006 12649.

Related

விவசாயக்குறிப்புக்கள் 2683703606225957421

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item