குடும்ப பட்ஜெட்டில் மருத்துவச் செலவு அதிகமாகிறதா... செலவு ரசம்- வைத்துச் சாப்பிடுங்கள். பட்ஜெட் குறைந்து, ஆரோக்கியம் மேம்படும்!
உ ணவு எப்படி மனிதருக்கு முக்கியமோ, அதைப்போலவே உறக்கமும். குறைந்தது எட்டு மணி நேரமாவது உறங்க வேண்டும் என்பது உலகளாவிய மருத்துவக் கணிப்பு. ...
https://pettagum.blogspot.com/2017/07/blog-post_24.html
உணவு எப்படி மனிதருக்கு முக்கியமோ, அதைப்போலவே
உறக்கமும். குறைந்தது எட்டு மணி நேரமாவது உறங்க வேண்டும் என்பது உலகளாவிய
மருத்துவக் கணிப்பு. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உறங்குபவர்கள், அதன்
பிறகான பொழுதை மிகவும் உற்சாகமாகக் கடப்பார்கள். அவர்களின் செயல்திறனும்
கூடுதலாக இருக்கும். `ஒரு மனிதன் தொடர்ந்து ஒரு வாரம் கண்ணயராமல்
இருந்தால், அவனுக்கு நிச்சயம் மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடும்’ என்கிறார்கள்
மருத்துவர்கள். மனித வடிவமைப்பில், உறக்கம் என்பது பிரதானமானது. பசித்தபோது
உணவும் களைத்தபோது உறக்கமும் கட்டாயம் தேவை. அவை கிடைக்காதபட்சத்தில்
உடலின் இயந்திரத்தன்மை குலைந்துபோகும்.
இன்று உழைப்புக்கேற்ற உணவு என்ற அடிப்படையே மாறிவிட்டது. கடினமான உணவைச் சாப்பிட்டுவிட்டு மேனி அசையாமல் வேலைசெய்கிறார்கள். கடும் பணி செய்பவர்களுக்கு அதற்கேற்ற உணவு வாய்க்கவில்லை. இந்த முரண்பாடே, இன்று அதிகரித்துவரும் நோய்களுக்கான அடிப்படை. `இந்தியாவில் சுமார் 60 சதவிகிதம் பேர், போதிய உறக்கமின்மையால் தவிக்கிறார்கள்’ என்கிறது ஒரு மருத்துவ அறிக்கை. இதற்கு, பல காரணங்கள் உண்டு. உறக்கமின்மையை ஆங்கில மருத்துவம் `insomnia’ எனக் குறிப்பிடுகிறது. `தொடர்ச்சியான உறக்கமின்மையால் மூளை பாதிக்கப்படலாம்’ என்றும் சொல்கிறார்கள். பலவிதமான உடற்கோளாறுகளுக்கு உறக்கமின்மை தொடக்கப்புள்ளி என்பதை மறக்கக் கூடாது.
நல்ல உணவு, ஆழ்ந்த உறக்கம் இரண்டும்தான் நம் மூதாதையர்களின் ஆயுள் ரகசியம். கடும் உழைப்பு, அதற்கேற்ப சக்தியும் தரும் உணவு, கொண்டாட்டமான வாழ்க்கைமுறை, தடையற்ற உறக்கம் எனத் திட்டமிட்ட வாழ்க்கை அவர்களுடையது. உடலை உணவால் கட்டுப்படுத்தியதுதான் அவர்களின் ஆகப்பெரும் சாதனை. நோய்க்கு மருந்தாக மட்டுமின்றி உடல், உழைப்பு இரண்டின் தன்மைக்கேற்பவும் உணவை அமைத்துக்கொண்டார்கள்.
தட்பவெப்பம் மாறும்போது சளித் தொந்தரவு ஏற்படும். சுவாசக்கோளாறும் வரலாம். உறக்கம் பாதிக்கப்படும். ஜீரணக்கோளாறு, வயிற்றுப் பிரச்னைகள், வாயுத்தொந்தரவுகள் தரும் அவஸ்தைகளே உறக்கத்தைத் தின்றுவிடும். மனதைப் பாதிக்கும் பிரச்னைகளாலும் உறக்கம் பாதிக்கும். இப்படி உடற்சிக்கல், மனச்சிக்கல் எனப் பல காரணங்களால் உறக்கம் பாதிக்கப்பட்டாலும், ஒரு சர்வரோக நிவாரண உணவு இருக்கிறது. அதுதான் `செலவு ரசம்’. கொங்கு நாட்டுப் பகுதிகளில் இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது இந்தப் பாரம்பர்ய ரசம்.
“செலவு ரசம் செய்ய தேவைப்படும் `சுண்டுகார செலவுப் பொருள்கள்’ நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. கிராமப்புறங்களில் நடக்கும் சந்தைகளிலும் கிடைக்கும். செலவு ரசம் என்பது மருந்தைப் போன்றது. கொங்கு பகுதிகளில் பெரும்பாலும் வாரம் ஒருமுறை இதைச் செய்து உணவில் சேர்த்துக்கொள்வார்கள். நம் உடல் என்பது ஓர் இயந்திரம். அவ்வப்போது அதைத் துடைத்துச் சுத்தம் செய்தால்தான் நன்றாகச் செயல்படும். அப்படி உடலைச் சுத்தம் செய்யும் மருந்துதான் `செலவு ரசம்’. தூக்கமில்லாமல் தவிப்பவர்களுக்கு இது உடனடி நிவாரணம் தரும். உடல் நலத்துக்கு மட்டுமல்லாமல், மனநலக் கோளாறுகளுக்கும் இது ஏற்ற உணவு” என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச் சேர்ந்த மரபு உணவு ஆர்வலர் தனலட்சுமி கண்ணுச்சாமி.
செலவு ரசத்துக்கான ரெசிப்பியையும் தருகிறார் அவர்.
தேவையான பொருள்கள்:
சுண்டுகார செலவுப் பொருள்கள் - 1 பங்கு
(கடுகு, மிளகு, திப்பிலி, சீரகம், கசகசா, வால்மிளகு, கருஞ்சீரகம், கடல் நுரை, சித்தரத்தை, வெட்டிவேர், பெருங்காயம் அடங்கியது. நாட்டு மருந்துக் கடைகள், வாரச் சந்தைகளில் கிடைக்கும்.
100 ரூபாய்க்கு வாங்கினால் மூன்று தடவை பயன்படுத்தலாம்).
சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 5 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கொத்தமல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 3 கொத்து
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லித்தழை - 1 கொத்து
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
முதலில், பாதி அளவு சின்ன வெங்காயம், பூண்டு, சுண்டுகார செலவுப் பொருள்கள், சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லித்தூள், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்துக்கொள்ளுங்கள். மீதம் இருக்கும் சிறிய வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக வெட்டி, அதில் போட்டு வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அரைத்துவைத்துள்ள விழுதை அரை லிட்டர் தண்ணீரில் கலந்து கரைத்து ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பிறகு, கொத்தமல்லித் தழையைச் சிறு துண்டுகளாக வெட்டித் தூவி, இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைவிட்டு இறக்குங்கள். சுடு சோற்றில் இதை ஊற்றிச் சாப்பிட, அமுதம் போன்று இருக்கும்.
செலவு ரசத்தில் அப்படி என்ன சிறப்பு?
``நம் பாரம்பர்ய உணவுப் பட்டியலில் மிகவும் குறிப்பிடத்தக்கது இந்தச் செலவு ரசம். இதை, `மொத்த உடலுக்குமான மருந்து’ என்றும் சொல்லலாம். இதன் சிறப்பே அதன் சுவைதான். இதில் நிறைய மருத்துவப் பொருள்கள் கலந்திருந்தாலும், சுவையில் அந்தக் குணம் தெரியாது. வயிற்றுக்கோளாறுகள், வாயுசார்ந்த பிரச்னைகள், சுவாசச் சிக்கல்கள் அனைத்தையும் தீர்க்கும். இவை தவிர தாதுப்பொருள்கள், நார்ச்சத்து, வைட்டமின்களும் இதில் நிறைந்திருக்கின்றன. குழந்தைகள், வயதானவர்கள், பிரசவம் முடிந்த பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் இதை எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சல் இருப்பவர்களுக்கு இது ஏற்ற உணவு. தாய்ப்பால் தரும் பெண்கள் இந்த ரசத்தைக் குடித்தால், குழந்தைக்கு எதிர்ப்புச்சக்தி கூடும். உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு மட்டுமின்றி மனம் சார்ந்த பிரச்னைகளுக்கும் இதில் தீர்வு இருக்கிறது. மனக்குழப்பங்கள் நீங்கி ஆழ்ந்து உறங்கவும் இந்தச் செலவு ரசம் உதவும்...” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சங்கீதா.
குடும்ப பட்ஜெட்டில் மருத்துவச் செலவு அதிகமாகிறதா... செலவு ரசம் வைத்துச் சாப்பிடுங்கள். பட்ஜெட் குறைந்து, ஆரோக்கியம் மேம்படும்!
Thanks to http://www.vikatan.com/avalkitchen
இன்று உழைப்புக்கேற்ற உணவு என்ற அடிப்படையே மாறிவிட்டது. கடினமான உணவைச் சாப்பிட்டுவிட்டு மேனி அசையாமல் வேலைசெய்கிறார்கள். கடும் பணி செய்பவர்களுக்கு அதற்கேற்ற உணவு வாய்க்கவில்லை. இந்த முரண்பாடே, இன்று அதிகரித்துவரும் நோய்களுக்கான அடிப்படை. `இந்தியாவில் சுமார் 60 சதவிகிதம் பேர், போதிய உறக்கமின்மையால் தவிக்கிறார்கள்’ என்கிறது ஒரு மருத்துவ அறிக்கை. இதற்கு, பல காரணங்கள் உண்டு. உறக்கமின்மையை ஆங்கில மருத்துவம் `insomnia’ எனக் குறிப்பிடுகிறது. `தொடர்ச்சியான உறக்கமின்மையால் மூளை பாதிக்கப்படலாம்’ என்றும் சொல்கிறார்கள். பலவிதமான உடற்கோளாறுகளுக்கு உறக்கமின்மை தொடக்கப்புள்ளி என்பதை மறக்கக் கூடாது.
நல்ல உணவு, ஆழ்ந்த உறக்கம் இரண்டும்தான் நம் மூதாதையர்களின் ஆயுள் ரகசியம். கடும் உழைப்பு, அதற்கேற்ப சக்தியும் தரும் உணவு, கொண்டாட்டமான வாழ்க்கைமுறை, தடையற்ற உறக்கம் எனத் திட்டமிட்ட வாழ்க்கை அவர்களுடையது. உடலை உணவால் கட்டுப்படுத்தியதுதான் அவர்களின் ஆகப்பெரும் சாதனை. நோய்க்கு மருந்தாக மட்டுமின்றி உடல், உழைப்பு இரண்டின் தன்மைக்கேற்பவும் உணவை அமைத்துக்கொண்டார்கள்.
தட்பவெப்பம் மாறும்போது சளித் தொந்தரவு ஏற்படும். சுவாசக்கோளாறும் வரலாம். உறக்கம் பாதிக்கப்படும். ஜீரணக்கோளாறு, வயிற்றுப் பிரச்னைகள், வாயுத்தொந்தரவுகள் தரும் அவஸ்தைகளே உறக்கத்தைத் தின்றுவிடும். மனதைப் பாதிக்கும் பிரச்னைகளாலும் உறக்கம் பாதிக்கும். இப்படி உடற்சிக்கல், மனச்சிக்கல் எனப் பல காரணங்களால் உறக்கம் பாதிக்கப்பட்டாலும், ஒரு சர்வரோக நிவாரண உணவு இருக்கிறது. அதுதான் `செலவு ரசம்’. கொங்கு நாட்டுப் பகுதிகளில் இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது இந்தப் பாரம்பர்ய ரசம்.
“செலவு ரசம் செய்ய தேவைப்படும் `சுண்டுகார செலவுப் பொருள்கள்’ நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. கிராமப்புறங்களில் நடக்கும் சந்தைகளிலும் கிடைக்கும். செலவு ரசம் என்பது மருந்தைப் போன்றது. கொங்கு பகுதிகளில் பெரும்பாலும் வாரம் ஒருமுறை இதைச் செய்து உணவில் சேர்த்துக்கொள்வார்கள். நம் உடல் என்பது ஓர் இயந்திரம். அவ்வப்போது அதைத் துடைத்துச் சுத்தம் செய்தால்தான் நன்றாகச் செயல்படும். அப்படி உடலைச் சுத்தம் செய்யும் மருந்துதான் `செலவு ரசம்’. தூக்கமில்லாமல் தவிப்பவர்களுக்கு இது உடனடி நிவாரணம் தரும். உடல் நலத்துக்கு மட்டுமல்லாமல், மனநலக் கோளாறுகளுக்கும் இது ஏற்ற உணவு” என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச் சேர்ந்த மரபு உணவு ஆர்வலர் தனலட்சுமி கண்ணுச்சாமி.
செலவு ரசத்துக்கான ரெசிப்பியையும் தருகிறார் அவர்.
தேவையான பொருள்கள்:
சுண்டுகார செலவுப் பொருள்கள் - 1 பங்கு
(கடுகு, மிளகு, திப்பிலி, சீரகம், கசகசா, வால்மிளகு, கருஞ்சீரகம், கடல் நுரை, சித்தரத்தை, வெட்டிவேர், பெருங்காயம் அடங்கியது. நாட்டு மருந்துக் கடைகள், வாரச் சந்தைகளில் கிடைக்கும்.
100 ரூபாய்க்கு வாங்கினால் மூன்று தடவை பயன்படுத்தலாம்).
சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 5 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கொத்தமல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 3 கொத்து
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லித்தழை - 1 கொத்து
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
முதலில், பாதி அளவு சின்ன வெங்காயம், பூண்டு, சுண்டுகார செலவுப் பொருள்கள், சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லித்தூள், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்துக்கொள்ளுங்கள். மீதம் இருக்கும் சிறிய வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக வெட்டி, அதில் போட்டு வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அரைத்துவைத்துள்ள விழுதை அரை லிட்டர் தண்ணீரில் கலந்து கரைத்து ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பிறகு, கொத்தமல்லித் தழையைச் சிறு துண்டுகளாக வெட்டித் தூவி, இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைவிட்டு இறக்குங்கள். சுடு சோற்றில் இதை ஊற்றிச் சாப்பிட, அமுதம் போன்று இருக்கும்.
செலவு ரசத்தில் அப்படி என்ன சிறப்பு?
``நம் பாரம்பர்ய உணவுப் பட்டியலில் மிகவும் குறிப்பிடத்தக்கது இந்தச் செலவு ரசம். இதை, `மொத்த உடலுக்குமான மருந்து’ என்றும் சொல்லலாம். இதன் சிறப்பே அதன் சுவைதான். இதில் நிறைய மருத்துவப் பொருள்கள் கலந்திருந்தாலும், சுவையில் அந்தக் குணம் தெரியாது. வயிற்றுக்கோளாறுகள், வாயுசார்ந்த பிரச்னைகள், சுவாசச் சிக்கல்கள் அனைத்தையும் தீர்க்கும். இவை தவிர தாதுப்பொருள்கள், நார்ச்சத்து, வைட்டமின்களும் இதில் நிறைந்திருக்கின்றன. குழந்தைகள், வயதானவர்கள், பிரசவம் முடிந்த பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் இதை எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சல் இருப்பவர்களுக்கு இது ஏற்ற உணவு. தாய்ப்பால் தரும் பெண்கள் இந்த ரசத்தைக் குடித்தால், குழந்தைக்கு எதிர்ப்புச்சக்தி கூடும். உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு மட்டுமின்றி மனம் சார்ந்த பிரச்னைகளுக்கும் இதில் தீர்வு இருக்கிறது. மனக்குழப்பங்கள் நீங்கி ஆழ்ந்து உறங்கவும் இந்தச் செலவு ரசம் உதவும்...” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சங்கீதா.
குடும்ப பட்ஜெட்டில் மருத்துவச் செலவு அதிகமாகிறதா... செலவு ரசம் வைத்துச் சாப்பிடுங்கள். பட்ஜெட் குறைந்து, ஆரோக்கியம் மேம்படும்!
Thanks to http://www.vikatan.com/avalkitchen
Post a Comment