மரத்தை தாங்கிப் பிடிக்கிற வேர்களை போன்றவர்கள் நம் முன்னோர். வேர்கள் இல்லன்னா, மரம் இல்ல.....வேர்களை காப்போம்!

வேகமாக சென்று கொண்டிருந்த கார், மெல்ல தன் வேகத்தை குறைத்து, அந்த கட்டடத்தின் வாசலில் நின்றது. காரிலிருந்து இறங்கிய போது, தன் கால்கள் நட...

வேகமாக சென்று கொண்டிருந்த கார், மெல்ல தன் வேகத்தை குறைத்து, அந்த கட்டடத்தின் வாசலில் நின்றது. காரிலிருந்து இறங்கிய போது, தன் கால்கள் நடுங்குவதை உணர்ந்தார், ரவிராம்.

தன் அப்பாவோடு, 20 ஆண்டுகளுக்கு முன், இதே இடத்திற்கு வந்திருக்கிறார், ரவிராம்.

அவரது நினைவுகள், வேகமாக பின்னோக்கி சென்றன.
எத்தனையோ சிரமங்களுகிடையே, தன் சொற்ப சம்பளத்தில் ரவிராமை, இன்ஜினியரிங் படிக்க வைத்தார், அப்பா சபேசன்; அவனும் நன்றாக படித்து, முதல் வகுப்பில் தேறியதால், முன்னணி நிறுவனத்தில், வேலை கிடைத்தது.
ரவிராம் வேலைக்கு சென்ற ஒரே ஆண்டில், அவனுடைய அம்மா மரணமடைய, அடுத்த ஆண்டிலே ரவிராமிற்கு, திருமணம் செய்து வைத்தார், சபேசன்.

அதுவரை, நதி போல அமைதியாக சென்ற ரவிராமின் வாழ்க்கை, திருமணத்துக்கு பின், காட்டாறு போல மாறியது. எப்போதுமே விட்டு கொடுப்பவராக, கண்ணியமாக நடந்து கொண்டார், அப்பா. இருப்பினும், ரவிராமின் மனைவிக்கு, மாமனாரை பிடிக்கவில்லை. ஆனால், பேரன் ரகுவிற்கு தாத்தா மீது கொள்ளை பிரியம். அதனால், எப்போதும், அவரோடு ஒட்டிக் கொண்டு திரிவான். இதுவும், சபேசன் மீது வெறுப்பு ஏற்பட, ரவிராமின் மனைவிக்கு ஒரு காரணமாகி விட்டது.

இதற்கு மேல், ஒன்றாக இருக்க முடியாது என்ற நிலை ஏற்படவே, ஒருநாள், அப்பாவை தனியே அழைத்து, 'அப்பா... எனக்கு துபாய்ல, 'அசைன்மென்ட்' கொடுத்திருக்காங்க; ரெண்டு வருஷம் அங்கேயே இருந்தாகணும்; குடும்பத்தோடு போகலாம்ன்னு இருக்கேன். அதனாலே...'

'ஏம்பா இழுக்கற... எங்காவது முதியோர் இல்லம் இருந்தா அதுல என்னை, சேர்த்து விட்டுடேன்...' என்றார்.

விஷயம் தெரிந்து, அழத்துவங்கிய ரகு, 'அப்பா... தாத்தா நம்ம கூடவே இருக்கட்டும். அவர எங்கேயும் கொண்டு போய் விட்டுடாதீங்க; அப்படி இருந்தா, என்னையும் அவரோடவே சேர்த்து விட்டுடுங்க; நான், அங்கயிருந்தே ஸ்கூலுக்கு போறேன்...' என்று அடம்பிடித்தான்.
ரவிராமும், அவன் மனைவியும் அவனை சமாதானப்படுத்தினர்.
ஆனால், தன் மகன் தன்னிடம் சொன்னது எல்லாம் பொய் என்பதை, பேரன் மூலமாக அறிந்து, துடித்து போனார். பின், தன்னை தானே சமாதானப்படுத்தி, ரவிராமுடன், முதியோர் இல்லம் வந்து சேர்ந்தார். அதன்பின், தன் அப்பாவை வந்து பார்க்கவோ, வீட்டிற்கு அழைத்துப் போகவே இல்லை ரவிராம்.

இருபது ஆண்டுகள் பறந்தோடின; அப்பா சபேசனை கொண்டு வந்து சேர்த்த அதே முதியோர் இல்லத்திற்கு இப்போது, தன் மகன் ரகுவோடு வந்து இறங்கினார், ரவிராம்.

அப்பாவின் கை பிடித்து, மெல்ல நடத்தி, உள்ளே அழைத்துச் சென்றான் ரகு; கூடவே, அவன் மனைவியும் வந்தாள்.

''அப்பா... நீங்க தாத்தாவ இங்கே கொண்டு வந்து சேர்த்ததுக்காக, உங்கள இங்க கூட்டி வரல. எனக்கு, உங்க மீது ரொம்ப பாசம் இருக்கு; ஏன்னா, நீங்க என்னை பாசமா வளர்த்த அப்பா. அம்மா தந்த நெருக்கடியில தான், நீங்க தாத்தாவ இங்க கொண்டு வந்து சேர்த்தீங்கன்னு, எனக்கு நல்லாவே தெரியும். நான் உங்கள எந்த அளவுக்கு நேசிக்கிறேனோ, அதைவிட அதிகமாக, தாத்தாவை நேசிச்சேன். ஏன்னா, மரத்தை தாங்கிப் பிடிக்கிற வேர்களை போன்றவர்கள் நம் முன்னோர். வேர்கள் இல்லன்னா, மரம் இல்ல; அம்மா உயிரோட இருந்திருந்தா, அவங்க, உங்கள பத்திரமா பாத்துப்பாங்க. அவங்க இல்லாத நிலையில், நீங்க தனியா இருந்து கஷ்டப்படக் கூடாதுங்கிறதுக்காகத் தான் இங்க உங்கள விட்டுட்டு, நாங்க அமெரிக்கா போறோம். ஒரு வருஷம் மட்டும் இங்க இருங்க; நாங்க ரெண்டு பேரும், அமெரிக்கா போயிட்டு, உங்களுக்கு மகிழ்ச்சி தர்ற, ஒரு நல்ல செய்தியோடு திரும்பி வருவோம்,'' என்றான்.

''நீங்க ரெண்டு பேரும் நல்லவங்கன்னு எனக்கு தெரியும்; நான் செய்த பாவத்துக்கு, தண்டனைய அனுபவிச்சே ஆகணும்; இந்த ஒரு வருஷத்தை, நான் அப்படி நினைச்சிக்கிறேன். நீங்க, எந்த கவலையும் இல்லாம, நிம்மதியா போயிட்டு வாங்க,'' என்று கூறி அழுதார்.

ஓர் ஆண்டுக்கு பின், இந்தியா திரும்பிய ரகுவும், அவன் மனைவியும், முதியோர் இல்லத்திற்கு வந்தனர்.

''அப்பா இதை பாருங்க...'' என்று சொல்லி, கையில் இருந்த, 'டாக்குமென்ட்'டை அப்பாவிடம் கொடுத்தான், ரகு.

''என்னப்பா இது?''

''அமெரிக்காவுல நாங்க சம்பாதிச்ச பணத்தில, நம்ம கிராமத்தில, ஐந்து ஏக்கர் நிலம் வாங்கியிருக்கோம்; அதுக்கான கிரையப்பத்திரம் தான் இது. ஒரு, 'டிரஸ்ட்' ஏற்படுத்தி, அந்த இடத்தில, அழகான, 'ஹோம்' கட்டப்போறோம்; அதுல, பிள்ளைகளால கைவிடப்பட்ட வயதானவர்களை, எந்த கட்டணமும் வாங்காம சேர்த்து, அவங்கள பாதுகாக்கப் போறோம். நம்ம ஹோம்ல ஏழைகளுக்கு தான் முன்னுரிமை. அந்த இல்லத்துக்கு நீங்க தான் டிரஸ்டி; நீங்க தான்

எல்லாரையும் பத்திரமாக பாத்துக்க போறீங்க; புறப்படுங்கப்பா... நம்ம வீட்டுக்கு போகலாம்; இனிமே, நமக்கு நிறைய வேலைகள் காத்திருக்கு,'' என்றான்.


ரவிராமின் கைகளும், உதடுகளும் நடுங்க, கண்களிலிருந்து கண்ணீர், 'மளமள' வென்று கொட்ட, பேச இயலாமல், அப்படியே, சிலை போல் நின்றிருந்தார்.

Related

பெட்டகம் சிந்தனை 4240514508597932526

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item