“இப்ப தான் நாங்க நிம்மதியா இருக்கோம்!”
“இப்ப தான் நாங்க நிம்மதியா இருக்கோம்!” விகடன் டீம் நீ ண்ட நாட்களுக்குப் பிறகு, சிரித்து ...
https://pettagum.blogspot.com/2016/01/blog-post_79.html
“இப்ப தான் நாங்க நிம்மதியா இருக்கோம்!”
தேவியின் அம்மா பூங்கோதை சொல்கிறார்...
``நல்லாத்தான் பள்ளிக்கூடம் போயிட்டிருந்தா. படிப்புல படுசுட்டி. விளையாட்டு, சேட்டைனு எல்லா பிள்ளைகளையும்போலவே இருந்தா. இந்த சந்தோஷம் எல்லாம் அவளோட எட்டு வயசு வரைக்கும்தான்’’ என்றவர் முட்டிவந்த கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார்.
ஒருநாள் சர்க்கரை அளவு குறைஞ்சு மயக்கமாகிடுவா; இன்னொரு நாள் சர்க்கரை அளவு அதிகமாகி, உடம்பு இழுத்துக்கும். `என் புள்ளைக்கு இப்படி ஒரு கொடுமையா?!'னு மனசு கிடந்து பதறும். அவளுக்கு எந்தெந்த நேரத்துல எல்லாம் சர்க்கரை அளவு கூடும் - குறையும், அப்போ என்ன செய்யணும்னு டாக்டரும் நர்ஸும் சொல்லிக்கொடுத்தாங்க. அதன்படி நானே கவனிக்க ஆரம்பிச்சேன். என்னதான் பத்திரமாப் பார்த்துக்கிட்டாலும், மயங்கி விழுந்துட்டா உடனே ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டுபோகணும். அது மாறாமல் தொடர்ந்துகிட்டே இருந்தது.
அந்த நேரத்துலதான், `உடம்புல பொருத்துற இன்சுலின் பம்ப் (தானியங்கி மருந்து செலுத்தும் கருவி) ஒண்ணு வந்திருக்கு. அதை தேவிக்குப் பொருத்திட்டா சர்க்கரை கூடும்போது - குறையும்போது அதுவே தன்னால மருந்தை உடம்புக்குள்ள செலுத்திக்கும். நாம பயப்படத் தேவை இல்லை'னு டாக்டர் சொன்னார். ஆனா, அந்த மெஷின் விலை ஒன்றரை லட்ச ரூபாய்க்கும் அதிகம். `அவ்வளவு பணத்துக்கு என்ன பண்றது?’னு எங்களுக்குத் திக்குனு ஆகிப்போச்சு... அப்பத்தான் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு சொக்கலிங்கம் சார் மூலமா எழுதிப்போட்டோம். அவங்க எங்களுக்கு உடனே இன்சுலின் பம்ப் வாங்கிக் கொடுத்தாங்க. தேவி உடம்புல அதைப் பொருத்தியாச்சு. இப்பத்தான் நாங்க நிம்மதியா இருக்கோம். தேவியும் முன்பைப்போல நல்லா சிரிச்சு, விளையாடுறா’’ என்றார்.
தேவிக்கு சிகிச்சை அளித்துவரும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் மணிவண்ணன் பேசினார்...
``தேவியை நன்கு பரிசோதனை செய்து பார்த்ததில், மயக்கம் வருது என்று கூறிய நாட்களில் எல்லாம் அவளுக்கு உடலில் சர்க்கரை அளவு மிகக் குறைவாக இருந்தது. சில நாட்களில் சர்க்கரை அளவு அதிகமாகி கோமா (Diabetic Ketoacidosis) நிலைக்குச் சென்றாள். அவளுக்கு குளூக்கோஸும் இன்சுலினும் மாற்றி மாற்றிக் கொடுத்துவந்தோம். அவளுடைய சர்க்கரை அளவு, காலையில் மிகக் குறைவாகவும், இரவில் அதிகமாகவும் இருந்தது. Brittle Diabetes என்ற சர்க்கரை நோய் வகையாக இருக்குமோ என எனக்குச் சந்தேகம் வந்தது. நான் கணித்தது சரிதான். CGMS (Continuous Glucose Monitoring System) பரிசோதனையில் தேவிக்கு Brittle Diabetes இருப்பது உறுதியானது. இது மோசமான வியாதி. இதை கன்ட்ரோலிலேயே வைத்திருக்க வேண்டும்.
குழந்தைகளில் ஆயிரத்தில் மூன்று பேருக்கு இந்த வகை சர்க்கரை நோய் வருகிறது. இந்த நோயாளர்களுக்கு, சில சமயங்களில் சர்க்கரை அளவு அதிகமாகி, கோமா நிலைக்குச் (Diabetic Ketoacidosis) செல்வர். சர்க்கரையின் அளவைக் குறைக்க இன்சுலின் ஊசி மருந்தை அதிகப்படுத்தினால், உடனே தாழ்நிலை சர்க்கரை (Hypoglycaemia) ஏற்பட்டு, தாழ்நிலை கோமாவுக்குச் செல்வர். இவர்களின் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம். இதற்கான தீர்வு, இன்சுலின் பம்ப் (Insulin Pump) பொருத்துவதுதான். இங்கிலாந்தில் இந்த நோய் ஆயிரத்துக்கு ஆறு பேரிடம் உள்ளது. நம் நாட்டில் ஆய்வுசெய்தால் இது அதிகமாக இருக்கும். என்னிடம் வருகிற பேஷன்ட்டுகளில் 27 பேருக்கு உள்ளது.
அறம் செய விரும்புவோம்!
Thanks to Ananta vikatan
Post a Comment