ஆரோக்கிய லஞ்ச்... அட்டகாச ரெசிப்பிகள்!

ஆரோக்கிய லஞ்ச்... அட்டகாச ரெசிப்பிகள்! உணவு உணவு/சிறுதானியம்... சிறப்பு! ‘பா லீஷ் செய்யப்பட்ட அ...

ஆரோக்கிய லஞ்ச்... அட்டகாச ரெசிப்பிகள்!
உணவு
உணவு/சிறுதானியம்... சிறப்பு!
‘பாலீஷ் செய்யப்பட்ட அரிசி மற்றும் மைதாவில் செய்யப்பட்ட உணவுகள்தான் சுவையானவை; சத்தான உணவுகள் என்றாலே சுவை இருக்காது’ எனப் பலரும் தவறாக நினைக்கின்றனர். சிறுதானிய ரெசிப்பிகள் சத்தும் சுவையும் நிறைந்தவை. சூப்பில் ஆரம்பித்து ‘டெஸர்ட்’ எனப்படும் இனிப்பு வகை வரை மூலிகைகள் மற்றும் சிறுதானியங்களைக்கொண்டு சுவையான உணவுகளைச் சமைக்க முடியும். குறிப்பாக மதிய உணவு. திருச்சி, ‘ஆப்பிள் மில்லட்’ உணவகத்தின் செஃப் இரா.கணேசன் சிறுதானிய ரெசிப்பிகளை அளிக்க, அவற்றின் பலன்களைப் பட்டியலிடுகிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.
தூதுவளை சூப்
தேவையானவை: தூதுவளை (வேருடன்) - தேவையான அளவு, பட்டை -2, கிராம்பு - 4, அன்னாசிப்பூ - 4, சோம்பு , சீரகம் - சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு, தக்காளி - 2, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், கடுகு, மஞ்சள் தூள், உப்பு - தேவைக்கு ஏற்ப.
செய்முறை: தூதுவளையை வேருடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி, சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது, தக்காளியைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். கடாயில்  எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் பொடித்துவைத்த பொடி, இஞ்சி பூண்டு கலவை இரண்டு டீஸ்பூன் சேர்த்து, நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில், ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். கொதிவந்ததும், தூதுவளை சாற்றைச் சேர்க்க வேண்டும். இது, நன்கு கொதித்ததும் ஏற்கெனவே வதக்கிவைத்த பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நேரம் கொதிக்கவிட வேண்டும். கடைசியில், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால், சூப் ரெடி.
பலன்கள்:  மிளகுத் தூள் சேர்த்துத் தூதுவளை சூப் சாப்பிடலாம். சளி, கோழை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இருமல், காய்ச்சல் உள்ளவர்களுக்குத் தூதுவளை சூப் நல்ல மருந்து. நெஞ்சுச்சளி, குடல்சளி இரண்டையும் தூதுவளை அகற்றும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு தூதுவளை சூப் குடிக்கலாம்.
வரகு - மல்லி சாதம்
தேவையானவை: வரகு - 500 கிராம், கொத்தமல்லித்தழை - 50 கிராம், பச்சை மிளகாய், வரமிளகாய், பூண்டு பல் - தலா 2, நறுக்கிய இஞ்சி - சிறிது, வேர்க்கடலை, கடலைப் பருப்பு, கடுகு, எண்ணெய் - சிறிதளவு. உப்பு - தேவைக்கு ஏற்ப.
செய்முறை:  வரகரிசியைச் சுத்தம்செய்து, தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.  நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைத் தனியாக சேர்த்து அரைத்து பேஸ்ட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலைப் பருப்பு, வரமிளகாய், கடுகு சேர்த்துத் தாளித்து, கடைசியாகக் கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். வேகவைத்த சாதத்தில், கடாயில் இருப்பதை ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறினால், சாதம் ரெடி.
பலன்கள்:  நார்ச்சத்து, மாவுச்சத்து இரண்டும் நிறைந்தது. பித்தத்தைச் சமன்படுத்தும் கொத்தமல்லியை சாதத்துடன் கலந்து சாப்பிடுவதால், உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கும். சுவையின்மை, வாந்திப் பிரச்னை உள்ளவர்களுக்கு வரகு மல்லி சாதம் ஏற்றது. குழந்தைகளுக்குக் குறைவாக கொடுக்க வேண்டும்.
காடைகண்ணி பாயசம்
தேவையானவை: காடைகண்ணி அரிசி - 100 கிராம், தண்ணீர் - 1/4 லிட்டர், கருப்பட்டி வெல்லம் அல்லது நாட்டு வெல்லம் - தேவையான அளவு, முந்திரி, திராட்சை, தேங்காய் , ஏலக்காய் - தேவையான அளவு, நெய் - சிறிதளவு.
செய்முறை: காடைகண்ணி அரிசியை கொரகொரப்பாக அரைக்க வேண்டும். தண்ணீரை நன்றாகக் கொதிக்கவைத்து, அரைத்துவைத்த காடைகண்ணியைச் சேர்த்து, நன்றாகக் கலந்து வேகவிட வேண்டும். இதற்கிடையில் வெல்லப்பாகு தயார் செய்ய வேண்டும். காடைகண்ணி வெந்ததும், வெல்லப்பாகை ஊற்றிக் கொதிக்கவிட வேண்டும். இறக்கும்போது, நெய்யில் முந்திரி, திராட்சை, தேங்காய், ஏலக்காய் தூளை வதக்கி, பாயசத்தில் சேர்க்க வேண்டும்.
பலன்கள்:  மாவுச்சத்து, புரதச்சத்து, துத்தநாகம் முதலான முக்கியச் சத்துக்கள் காடைகண்ணியில்  இருக்கின்றன. இது சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்தாகப் பயன்படுகிறது. கருப்பட்டி வெல்லத்தோடு சேர்த்துச் சாப்பிடுவதால், உடனடி எனர்ஜி கிடைக்கும்.
வரகரிசி - மோர் கஞ்சி
தேவையானவை: வரகரிசி - கால் கப், ஓமம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - அரை கப், மோர் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, மாங்காய், கேரட் - தலா 100 கிராம், நறுக்கிய  பெரிய வெங்காயம் - 1, எண்ணெய், பெருங்காயத்தூள் - தேவைக்கு.
செய்முறை: வரகரிசியைக் கல் பொறுக்கி சுத்தம் செய்து, சிறிது ஓமம், தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்க வேண்டும். மீதம் உள்ள ஓமம், பச்சை மிளகாய், நறுக்கிய மாங்காய், நறுக்கிய கேரட், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்துத் தாளித்துக்கொள்ள வேண்டும். வரகரிசியை வேகவைத்து இறக்கியவுடன் மோர் மற்றும் தாளித்தவற்றைச் சேர்த்து, நன்றாகக் கிண்டி, உப்பு, பெருங்காயத் தூள் தூவி கஞ்சியாகப் பருகலாம்.
பலன்கள்: வரகரிசி நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. மோர் கஞ்சியாகச் சாப்பிடும்போது,  செரிமானக் கோளாறுகள் சீராகும். நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருமே இந்தக் கஞ்சியைச் சாப்பிடலாம். ஓமம், மாங்காய், கேரட், பெருங்காயம் போன்றவற்றை இந்தக் கஞ்சியுடன் சேர்ப்பதால், தாதுஉப்புகள், வைட்டமின்கள் சத்தும் கிடைக்கும்.
நெல்லிக்காய் ஜூஸ்
தேவையானவை: விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, எலுமிச்சை சிறியது - 1, உப்பு - தேவையான அளவு, இஞ்சி - சிறிதளவு.
செய்முறை: நெல்லிக்காயைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, எழுமிச்சைச்சாறு, உப்பு, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்துப் பருகவும்.
பலன்கள்: நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமான மண்டலத்துக்கு மிகவும் நல்லது. சளிப்பிடிக்கும் என நினைப்பவர்கள், மஞ்சள் தூள் சேர்த்து இந்த ஜூஸ் அருந்தலாம். குழந்தைகளுக்குத் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.
வாழைப்பூ வடை
தேவையானவை:  வாழைப்பூ - ஒன்று, நீர் மோர் - 250 மி.லி., நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, சோம்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - சிறிதளவு, கடலைப் பருப்பு - 100 கிராம், இஞ்சி - சிறிய துண்டு.
செய்முறை:  கடலைப் பருப்பை ஒன்றரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, வடிகட்டி, கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். வாழைப்பூவை ஆய்ந்து மோரில் போட வேண்டும். பிறகு, மோரை வடித்து நறுக்கிய வாழைப்பூவை உப்புச் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். இதனுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு மாவு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகப் பிசைந்து, மாவைப் பருப்பு வடை போலத் தட்டி, கடாயில் எண்ணெய் சூடானதும் போட்டுப் பொரித்தெடுக்க வேண்டும்.
வேர்கடலைத் துவையல்
தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 200 கிராம், பூண்டு - 10 பல், பெரிய வெங்காயம் - 1, உப்பு , எண்ணெய் - தேவையான அளவு, உளுந்து - அரை தேக்கரண்டி, இஞ்சி - சிறிய துண்டு, கடுகு, கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலை, பூண்டு, வெங்காயம், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து சிறிதளவு நீர்விட்டு மிக்ஸியில் கெட்டி சட்னி பதத்தில்  அரைக்க வேண்டும். பிறகு, கடாயில் சிறிது எண்ணெய்விட்டு, கறிவேப்பிலை, உளுந்து, கடுகு ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து சட்னியுடன் சேர்த்துக் கலக்க வேண்டும். தாளிக்காமலும் சாப்பிடலாம்.
பலன்கள்: துவர்ப்புச் சுவை உள்ள உணவுகள்தான், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். வாழைப்பூ ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. உடல் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தும். பெண்களுக்குக் கர்ப்பப்பை சீராகச் செயல்படத் துணைபுரியும். வாழைப்பூவை வடை போல செய்து சாப்பிடும்போது, உடல் உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்.
வேர்க்கடலைத் துவையலில் புரதச்சத்து அதிகம். தாதுஉப்புகளும் நிறைந்துள்ளன. உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு இது.

Related

துவையல்கள் 3600844983801175290

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item