உபயோகமான தகவல்கள்/உங்களுக்கு உதவும் சட்டங்கள்!

?வங்கிக் கடன் மூலம் வாகனம் வாங்கிய நிலையில், அந்தக் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், கேரன்டி தந்தவருக்கு (Guarantor) சிக்கல் வரும...


?வங்கிக் கடன் மூலம் வாகனம் வாங்கிய நிலையில், அந்தக் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், கேரன்டி தந்தவருக்கு (Guarantor) சிக்கல் வருமா?
ஏ.ரூபன்ராஜ், ராஜபாளையம்,
ஆர்.கணேசன், உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்.
‘‘வங்கியின் நிலை: வாகனக் கடனைப் பொறுத்தவரை, கடன் வாங்கியவருக்குத்தான் கடனை திருப்பிச் செலுத்த முழுப்பொறுப்பு இருக்கிறது. எதிர்பாராதவிதமாகக் கடன் திருப்பிச் செலுத்தப்படவில்லை என்றால் வங்கி அல்லது கடன் வழங்கிய நிதி நிறுவனம், வாகனத்தைப் பறிமுதல் செய்து, விற்று கடன் தொகையை எடுத்துக் கொள்ளும். வாகனத்தை விற்றுக் கிடைத்த பணம் கடன் தொகைக்குக் குறைவாக இருந்தால், வங்கி / நிதி நிறுவனம் கடன் வாங்கியவரிடம் பாக்கி தொகையை வசூலிக்கும்.  அப்படியும் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், கடனுக்கு கேரன்டி அளித்தவரை அணுகி கடனை வசூலிக்கலாம். கேரன்டி தந்தவர் நிலை: கடன் வாங்கியவர் கடனை திருப்பிக் கட்ட இயலாமல் வாகனம் பறிமுதல் செய்யப்படும் நிலையில், அந்தக் கடனுக்கு கேரன்டி தந்தவர், வங்கி மற்றும் கடனாளி யின் சம்மதத்தோடு வாகனத்தின் பாக்கி கடன் தொகையையும் வங்கியிடம் செலுத்தி வாகனத்தை வாங்கலாம். உறுதி அளித்தவர் வாகனத்தை வாங்க செய்த செலவை கடனாளியிடமிருந்து திருப்பி வசூலிக்க உரிமை உண்டு.
 கடனாளியின் நிலை: கடனாளி வங்கியிடமிருந்து வாங்கிய கடன் தொகையைக் கட்ட முடியாமல், கேரன்டி அளித்தவர் வங்கிக்கு கடன் தொகையைக் கட்டி வாகனத்தை எடுத்துக்கொண்டால், கடன் வாங்கியாவது கேரன்டி தந்தவரின் சம்மதத்தோடு, வங்கிக்குச் செலுத்திய தொகையை அவருக்கு திருப்பிச் செலுத்திவிட்டு, வாகனத்தை எடுத்துக்கொள்ளலாம்.’’
==========================================================================?என் வயது 61. எனக்கு ஒரு மகன் (வயது 35),  ஒரு மகள் (29) இருக்கிறார்கள். என் அப்பா சுயமாக சம்பாதித்த சொத்து எனக்கு உயில் மூலமாகக் கிடைத்தது. இப்போது இந்தச் சொத்தை நான் யாருக்கெல்லாம் எழுதிவைக்க முடியும்?
அ.ராமநாதன், நாகப்பட்டினம்,
சுரேஷ் பாபு, வழக்குரைஞர்.
"இந்தச் சொத்து உங்களுக்கு உயில் மூலம் கிடைத்துள் ளதால், இதனை உங்களின் சொந்த சொத்தாகவே கருதப்படும். எனவே, இந்தச் சொத்தை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் எழுதிவைக்க உங்களுக்கு உரிமை உண்டு. சொத்து மற்றும் வாரிசு பிரச்னைகளில் சில நுணுக்கமான சட்ட சிக்கல்கள் எழக்கூடும் என்பதால்  வழக்குரைஞர் ஒருவரை கலந்தாலோசித்து, அவர் வழிகாட்டுதலுடன் செயல்படுவது நல்லது."


Related

உபயோகமான தகவல்கள் 8751100440549391398

Post a Comment

2 comments

sury siva said...

முதல் கேள்விக்கான பதில் முற்றிலும் சரி எனச் சொல்ல

இயலவில்லை.

ஒரு வாகனக் கடன் வாங்கிய நபர் இ.எம்.ஐ. என மாதாந்திரம் செலுத்தாது 3 தவணைகளுக்கு மேல் இருந்தால், காரண்டாருக்கும் நோட்டிஸ் அனுப்பப்படுகிறது.

அந்த நோட்டிஸ் வாசகங்கள் காரண்டாரின் சம்பளம் ஜப்தி செய்யப்படும் என்ற பயமுறுத்தலும் உள்ளடிக்கியிருக்கிறது.

ஒரு மிடில் கிளாஸ் வங்கி அலுவலர் தெரியாத்தனமாக ஆட்டோ கடனுக்கு காரண்டி செய்யப்போய், ஆட்டோ கடன் வாங்கியவர் வங்கிக்கும், காரண்டாருக்கும் தெரியாமல், ஆட்டோ வை விற்று விட, காரண்டாருக்கு நோட்டிஸ் வர,

பாவம், காரண்டார் தவித்துப்போய் விட்டார். இது நடந்தது 1980 ல். .

இது மாதிரியான சந்தர்ப்பங்களில், பொது துறை வங்கிகள், சற்று மனிதாபிமானத்துடன் செயல்படுகின்றன.

தனியார் வங்கிகளிடம் அதை எதிர்பார்க்க முடியாது. எளிதில் கடனை வசூல் செய்ய எந்த வழிகளையும் அவர்கள் கடைப்பிடிப்பார்கள்.

அண்மையில், வராத கடன்களை, ஒட்டு மொத்தமாக ஒரு தர்டு பார்ட்டிக்கு விற்று விடும் சூழ் நிலை இருக்கிறது. அதைத் தவிர
கலேக்டிங் ஏஜென்சி அவர்களுக்கே உரிய வழிகளில் வசூல் செய்ய முற்படுகிறார்கள்.

ஆக, காரண்டி போடுமுன்,
ஒரு முறைக்கு இரு முறை யோசிக்கவும்.

வூட்டுக்காரியைக் கேட்டு எதிலும் கையெழுத்து போடுங்கள்.

பெண் புத்தி பின் புத்தி என்பார்கள்.
உண்மை.
பின்னே வருவதையும் முன்கூட்டி சொல்லும் திறமை கொண்டவர்கள்
வீட்டுப் பெண்டிர்.

சுப்பு தாத்தா.

MohamedAli said...

அன்பிற்கினிய நண்பர் சிவா என்கிற சுப்பு தாத்தா அவர்களுக்கு வணக்கங்கள்! தங்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று! ஜாமீன் போடும் நபர்கள் இதையும் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்று நானும் விருப்புகின்றேன். அடிக்கடி நல்ல கருத்துறைகளை தரவேண்டுகின்றேன். இப்படிக்கு என்றும் அன்புடன் பெட்டகம் A.S.முஹம்மது அலி

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item