'வீட்டில் செடிகளை வளர்ப்பது தனிமையை விரட்டி, மன அமைதிக்கு வழிவகுக்கும்' இனி, செடிகளோடு சுவாசிப்போம்!

ஸ்ட்ரெஸ் ஃப்ரீ ஹோம் எங்கும், எப்போதும் டென்ஷன். மன அமைதி தேடி, பசுமை நிறைந்த காடு, மலைப் பகுதிகளுக்குப் போவது  எல்லோருக்கும் சாத்த...

ஸ்ட்ரெஸ் ஃப்ரீ ஹோம்

எங்கும், எப்போதும் டென்ஷன். மன அமைதி தேடி, பசுமை நிறைந்த காடு, மலைப் பகுதிகளுக்குப் போவது  எல்லோருக்கும் சாத்தியமா என்ன? இயற்கையை வீட்டிற்குள்ளேயே அழைத்துவந்தால்?
 
'செடிகளை வளர்ப்பது தனிமையை விரட்டி,  மன அமைதிக்கு வழிவகுக்கும்' என்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.

எப்படி ஒரு வளர்ப்புப் பிராணி நமக்கு ஆறுதல் தருகிறதோ, அதுபோலத்தான் செடிகளும்.  பூக்களை, செடிகளை இரண்டு நிமிடங்கள் உற்று நோக்குங்கள். சங்கடமான மனமும் அமைதி பெறும். மன உளைச்சல் நீங்கி, படைப்பாற்றலை வளர்க்கக்கூடிய மன நிலையைத் தரும். செடிகள் நிறைந்த வீடுகளால், எண்ணங்கள் விரிவடைந்து நல்லதோர் சூழலைத் தர முடியும். இயற்கையான முறையில் மனப் பிரச்னைகளுக் குத் தீர்வாக, நம் வீடு இருந்தால், மருத்துவத்துக்குப் பல ஆயிரங்களை செலவிட வேண்டிய அவசியம் இருக்காது.  

அறுவைசிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள் இருக்கும் அறையில் செடிகள் இருந்தால், அவர்கள் வெகு சீக்கிரம் குணமடைவார்கள் என்கிறது ஓர் ஆய்வு. உயர் ரத்த அழுத்தம், குறைந்த இதயத்துடிப்பு, சோர்வு, பதற்றம், டென்ஷன், தேவையில்லாத சிந்தனைகள், மனச்சோர்வு போன்ற நோய்களைத் தவிர்க்க அவை உதவுகின்றன.  கம்ப்யூட்டர், டி.வி போன்ற அதிக வெளிச்சத்தைப் பார்த்து சோர்வடைந்த கண்களுக்குப் பச்சை நிறம் புத்துணர்வைக் கொடுக்கும்.  

ஆஸ்துமா, சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் தடையில்லாமல் சுவாசிக்க, செடிகள் உதவுகின்றன. ஒவ்வொரு செடியும் ஈரத்தன்மையை வெளியிடுவதால், வீட்டில் வசிப்போருக்கு வறண்ட சருமம், சளி, வறட்டு இருமல் போன்ற பிரச்னைகள் இருந்தாலும், சீக்கிரமே குணமாகிவிடும்' என்றார்.
'வீட்டிலே வளர்க்கக்கூடிய செடிகளுக்கு சூரிய வெளிச்சம் அவசியம் இல்லை. செடிகள் வீட்டை அழகாக்குவதுடன் அறையின் காற்றையும் தூய்மைப்படுத்திவிடும். வெப்பத்தைக் குறைக்கும்.

வீட்டில் பயன்படுத்தப்படும் ரூம் ஸ்ப்ரே, பாடி ஸ்ப்ரே, காஸ்மெட்டிக்ஸ் ரசாயனங்கள், சிகரெட், தூசு போன்ற காற்றில் கலந்திருக்கும் மாசை  உறிஞ்சும் சக்தி செடிகளுக்கு உள்ளது. இரைச்சலின் அளவையும் குறைக்கும்' என்கிறார் சென்னை, ஹரிதரங் ஷோரூம் உரிமையாளரான ரேஷ்மி சுனில்.

இவர்  கடந்த 40 ஆண்டு காலமாக அதிக செலவில்லாமல் ரம்மியமான சூழல் உள்ள வீடுகளை உருவாக்கித்தரும் லேண்ட்ஸ்கேப்பிங் துறையில், வெற்றிகரமாக இயங்கிவருபவர்.  

'ஒருமுறை நான் துபாய் சென்ற போது, அங்கு வீட்டிலிலேயே வளர்க்கக்கூடிய செடிகளைப் பார்த்ததும், ஏன், இந்தப் பசுமையை இந்தியாவில் ஏற்படுத்தக் கூடாது என்று தோன்றியது. அதற்காக வீட்டில் வளர்க்கக்கூடிய செடிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதன் தன்மை, நன்மை பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன். அதைவைத்து, வீட்டில் வளர்க்கக்கூடியவை,  உடல் நலத்தை மேம்படுத்தக் கூடியவை, மூலிகைச் செடிகள் என வகைப்படுத்தினேன்.  

இப்போது வீட்டின் உட்புறத்தி லும், வெளிப்புறத்திலும் அவசியம் வளர்க்கக்கூடிய செடிகளைத் தேர்ந்தெடுத்து வளர்த்து விற்பனையும் செய்கிறேன்' என்கிற ரேஷ்மி, எப்படி செடிகளை வீட்டினுள் வளர்ப்பது என வழிகாட்டுகிறார்.
'வீட்டின் உட்புறத்தில் வளர்க்கக்கூடிய செடிகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நீர் ஊற்றினாலே போதும். இவற்றை வளர்ப்பதற்கு மண் தேவை இல்லை. தேங்காய் பஞ்சு (கொகோ பீட்) மட்டுமே போதும். தண்ணீர் வெளியேறி கறைபிடிக்கும் என்ற பயமும் வேண்டாம். தேங்காய் ஓட்டின் நாரை நீக்கி, அழகிய வண்ணம் பூசி அதில் செடி வளர்க்கலாம். பழைய மரப் பெட்டி, பனம் பழ மட்டை, உடைந்த மீன் தொட்டி, மண் பானை, கண்ணாடி  பீங்கான் பாத்திரம் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே செடிகளை வளர்க்கலாம். மூங்கில் கொம்பில் துளையிட்டு, அதில் இரும்புக் கம்பியைக் கட்டி சுவற்றில் தொங்கவிட்டால், அதுவே தொங்கும் செடி.

செடிகள் வெறும் அழகியல் தொடர்பானவை மட்டுமல்ல... ஆரோக்கியத்தையும் மனநிலையையும் மாற்றும் தன்மை பெற்றவை.

வீட்டை அழகாக்கும் செடிகள்!
லெமன் க்ராஸ்: இது கொசுக்களை வீட்டில் அனுமதிக்காது. இதன் இலையைக் கசக்கி சுவாசித்தால், எலுமிச்சை மணம்் வீசும். இந்த நறுமணம், கொசுக்களை வீட்டிலிருந்து விரட்டியடிக்கும். இந்த இலைகளை வெந்நீரில் கொதிக்கவைத்துக் குடித்தால், வயிறு உப்புசம் குணமாகும்.

மின்ட் துளசி: மின்்ட் உள்ள மிட்டாய்களோ, சூயிங்கம்மோ சாப்பிட்டால் எப்படியிருக்குமோ, அத்தகைய சுவையை இந்த செடியின் இலைகள் தரும். சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணி.
ஆலோவேரா: கற்றாழை ஜெல்லை முகத்தில் பூசிவந்தால் பருக்கள், வடுக்கள் மறைந்து முகம் பிரகாசிக்கும். மோருடன் கற்றாழை ஜெல்லை சேர்த்துக் குடித்தால், கர்ப்பப்பை பிரச்னைகள் தீரும்.

ஆல் ஸ்பைசஸ்: இந்தச் செடி வீட்டில் இருந்தால், சமையலுக்கு எந்தவித மசாலா பொருட்களும் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. பட்டை, ஏலம், பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ போன்ற அனைத்துப் பொருட்களின் நறுமணத்தையும் இந்தச் செடியின் இலைகளே தந்துவிடும்.

சிறியாநங்கை: பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துகள் வீட்டில் வராமல் காக்கும்.

பேசில்: இந்த இலையில் கிரீன் டீ போட்டுக் குடிக்கலாம். உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.
இனி, செடிகளோடு சுவாசிப்போம்!

Related

ஹெல்த் ஸ்பெஷல் 7250148117233404185

Post a Comment

2 comments

Unknown said...

சிறப்பான முஇயர்சி வாழ்த்த்கள்

MohamedAli said...

தங்களின் வருகைக்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து பெட்டகம் பார்த்து கருத்துக்களை தெரிவிக்கவும். அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item