இன்ஷூரன்ஸ் க்ளைம்: தீர்வு சொல்லும் தீர்ப்பாயம்! இன்ஷூரன்ஸ்!!

இன்ஷூரன்ஸ் க்ளைம்: தீர்வு சொல்லும் தீர்ப்பாயம்! இ ன்ஷூரன்ஸ்  பாலிசி எடுத்திருப்பவர்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி யிருக்கிறது. ...

இன்ஷூரன்ஸ் க்ளைம்: தீர்வு சொல்லும் தீர்ப்பாயம்!

ன்ஷூரன்ஸ்  பாலிசி எடுத்திருப்பவர்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி யிருக்கிறது. குறிப்பாக, க்ளைம் சார்ந்த பிரச்னைகளை அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.  க்ளைம் சார்ந்த பிரச்னைகளில் சிக்காமலிருக்க என்ன வழி என்பது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த நுகர்வோர் குறைதீர்க்கும் அமைப்பான 'கான்சர்ட் டிரஸ்ட்’ (Concert Trust)  சென்னையில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. இதில் நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து ஓய்வுபெற்று, இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மேனாக (தீர்ப்பாயம்) இருந்த வி.ராமசாமி, பாலிசி தாரர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளித்தார். இன்ஷூரன்ஸில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன, எதற்காக இன்ஷூரன்ஸ் தீர்ப்பாயத்தை அணுகுகிறார்கள் என்று கேட்டோம்.
தகவல்களை மறைக்காதீர்கள்!
''இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர் களில் சிலர் சிறு தவறுகளை செய்துவிடுகிறார்கள். உதாரணமாக, லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது சில கேள்விகளை இன்ஷூரன்ஸ் நிறுவனம் கேட்கும். பாலிசிதாரரின் பழக்கவழக்கம், உடல்நலம் குறித்து கேள்வி கேட்கும். இதற்கான பதிலை உள்ளபடி எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஆனால், பாலிசி எடுப்பவர்கள் சிலசமயங்களில் தவறான தகவலைத் தந்துவிடுகிறார்கள். அதாவது, ஒருவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தால், அதை மறைத்துவிடுகிறார்கள்.   ஒருவர் உடல்நலம் குறைந்து, மரணம் அடைந்தால், அதற்கான காரணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஆராயும். அந்தசமயத்தில் மது அருந்தும் பழக்கத்தினால் பாலிசிதாரர் இறந்தார் என தெரியவந்தால், அவருக்குத் தரவேண்டிய க்ளைமை நிராகரிக்கும். ஒரு பாலிசிதாரர், பாலிசி எடுத்த இரண்டு வருடத்துக்குள் மரணம் அடைந்தால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் துருவித்துருவி விசாரணை நடத்தும் என்பதை பாலிசிதாரர்கள் மறக்கக்கூடாது.  
மூன்றாம் நபர் வாகன இன்ஷூரன்ஸ்!
அடுத்து, மூன்றாம் நபர் வாகன இன்ஷூரன்ஸ் கட்டாயம் என்பதால் பலரும் அதை எடுக்கிறார்கள். ஆனால், அந்த பாலிசியில் சொல்லப்பட்டுள்ள நிபந்தனைகளை யாரும் படித்துப் பார்ப்பதில்லை. இதனால் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதாவது, ஒரு வாகனம் திருடுபோன 48 மணி நேரத்துக்குள் காவல்துறைக்கும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் தகவல் தெரிவிக்கவேண்டும். அப்படி தெரிவிக்கவில்லை எனில், அதையே காரணமாகக் காட்டி,  இன்ஷூரன்ஸ் நிறுவனமானது க்ளைமை நிராகரிக்க வாய்ப்புண்டு. எனவே, இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் வாகனம் தொலைந்தவுடன் அதை இன்ஷூரன்ஸ் எடுத்த நிறுவனத்துக்கும், காவல்துறைக்கும் தெரியப்படுத்துவது அவசியம்.  
மருத்துவக் காப்பீடு!
மருத்துவக் காப்பீட்டைப் பொறுத்தவரை, தாமதமாக க்ளைம் கிடைப்பது, க்ளைம் செய்த தொகையைவிட குறைவான தொகை கிடைப்பது, கேஷ்லெஸ் வசதி கிடைக்கவில்லை என்பது போன்ற பிரச்னைகள் குறித்து  அதிக புகார்கள் வருகிறது.
அதாவது, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் சிகிச்சை பெற்றபின் க்ளைம் செய்யும்போது சில காரணங்களினால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளைம் தொகையைக் குறைக்கும். பாலிசிதாரர் தேர்ந்தெடுக்கும் அறையைப் பொறுத்து க்ளைம் தொகை நிர்ணயிக்கப்படும். பாலிசியின் கவரேஜ் தொகையில் 1% அறை வாடகையாக இருக்கும். ஆனால், தனி அறையைத் தேர்வு செய்யும்போது, மருத்துவர் தனியாக வந்து பார்ப்பதால் கட்டணம் சிறிதளவு அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.
எனவே, இன்ஷூரன்ஸ் நிறுவனம் அறை வாடகையை அடிப்படையாக வைத்து மருத்துவர் கட்டணம், மருந்து செலவு ஆகியவற்றைக் குறைக்க வாய்ப்புண்டு.  
கேஷ்லெஸ் வசதி!
மேலும், சில மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் வசதி இருக்காது. மருத்துவமனையில் சேர்ந்து, மருத்துவ செலவுகளை நாம் முதலில் செய்துவிட்டு, பிற்பாடு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து க்ளைம் பெற வேண்டியிருக்கும். இதுபற்றி டி.பி.ஏ.விடம் கேட்டால், அந்த மருத்துவமனை எங்கள் நெட்வொர்க்கில் இல்லை என எளிதாகச் சொல்லிவிடுவார்கள்.
இதனால் பாலிசிதாரரே பணத்தை ஏற்பாடு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் ஏற்படும் மனஉளைச்சல் காரணமாகவும் சிலர் ஆம்புட்ஸ்மேனிடம் மனு செய்வார்கள். இதற்கு ஒரே தீர்வு, கேஷ்லெஸ் வசதிகொண்ட மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவம் பார்ப்பது அல்லது நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவமனை டி.பி.ஏ.வின் நெட்வொர்க்கில் இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்வதுதான்.
யாரெல்லாம் அணுகலாம்?
இன்ஷூரன்ஸ் தீர்ப்பாயத்திடம் வரும் அத்தனை புகார்களிலும் மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில், சில பிரச்னைகளில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் முடிவு சரியானதாகவே இருக்கும். மனு செய்பவரின் தன்மை, அவரது நிலைமை, மனுவில் கூறப்பட்டுள்ள காரணம் ஆகியவற்றைப் பொறுத்துதான் தீர்வு அமையும்.  
ரூ.20 லட்சத்துக்குள் கவரேஜ் உள்ள தனிநபர் பாலிசிதாரரே தீர்ப்பாயத்திடம் தீர்வு கேட்டு மனு செய்ய முடியும். இங்கு மனு செய்வதற்குமுன் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் குறைதீர்ப்பு மையத்துக்கு கடிதம் அல்லது மெயில் மூலமாக பிரச்னையை எழுதி அனுப்ப வேண்டும். கடிதமாக அனுப்பும்போது பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். உங்கள் புகார் குறித்து இன்ஷூரன்ஸ் நிறுவனம் 30 நாட்கள் வரை எந்தவிதமான தீர்வும் எடுக்கவில்லை எனில், மேற்கொண்டு தீர்ப்பாயத்திடம் புகார் செய்யலாம்.
இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பும் கடிதத்தின் நகல், பாலிசி பத்திரத்தின் நகல், மருத்துவ செலவு செய்திருந்தால் அதற்கான பில் என அத்தனை ரசீதுகளின் நகல்களையும் இணைத்து தீர்ப்பாயத்திடம் மனு செய்யலாம். இதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. தீர்ப்பாயத்திடம் மனு செய்த 90 நாட்களுக்குள், அந்த மனுவை விசாரித்து அதற்கான தீர்வு என்ன என்பதை பாலிசிதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மனு மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனில், நேரடியாக ஐ.ஆர்.டி.ஏ தலைவருக்கு புகார் எழுதி அனுப்பலாம்'' என்று முடித்தார் வி.ராமசாமி.  
இனி, இன்ஷூரன்ஸ் விஷயத்தில் ஆரம்பம் முதலே உஷாராக இருப்பீர்கள்தானே?

Related

இன்ஷூரன்ஸ் 6824871202360284025

Post a Comment

1 comment

MohamedAli said...

welcome and thanks By pettagum A.S. Mohamed Ali

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item