ஜூன் 14 உலக ரத்த தான விழிப்புஉணர்வு தினம்! ஹெல்த் ஸ்பெஷல்!!

ஜூன் 14 உலக ரத்த தான விழிப்புஉணர்வு தினம் 'அன்பே சிவம்’ படத்தில் நெகிழ்ச்சியான ஒரு காட்சி. ஒரு கோர ரயில் விபத்து நடந்த இடத்தில், &#...

ஜூன் 14 உலக ரத்த தான விழிப்புஉணர்வு தினம்
'அன்பே சிவம்’ படத்தில் நெகிழ்ச்சியான ஒரு காட்சி. ஒரு கோர ரயில் விபத்து நடந்த இடத்தில், 'ஏபி நெகட்டிவ் ரத்தம் அவசரமாக தேவைப்படுது... யாராவது தானம் செய்யத் தயாரா?'' என்று ஒரு டாக்டர் கேட்க, தன் அருகில் நிற்கும் மாதவனைக் காட்டி, 'இவருக்கு, ஏபி நெகட்டிவ் பிளட் குரூப் தான்...  இவர் கொடுப்பார்’ என்று கமல் சொல்வார். ஆனால், 'எனக்கு ரத்தம் கொடுக்கப் பிடிக்கலை... நான் வேணும்னா வேறு வேலை செய்றேன்' என்பார் மாதவன். அந்த நேரம், காயம் அடைந்தவர்களுக்கு உதவ வந்திருக்கும் சிஸ்டர் வென்னாசா, ரத்தம் கொடுக்க மறுக்கும் மாதவனை விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவனிடம் கூட்டிச்செல்வார். 'என்னை எமோஷனல் பிளாக்மெயில் செய்யாதீங்க’ என்று முரண்டுபிடித்தபடி செல்லும் மாதவன், அந்த சிறுவனைப் பார்த்த நொடியில் மனம் மாறுவார்.
படத்தைப் பார்த்தே பதறும் நாம், நிஜத்தில் நடக்கும் விபத்துக்களைப் பார்த்தால் விக்கித்துப் போய்விடுவோம். அந்த சிறுவனைப்போல நாள்தோறும் ஆயிரக் கணக்கானவர்கள் ரத்தத்துக்காகக் காத்திருக்கின்றனர். என்னதான் விழிப்புஉணர்வு இருந்தும் பலருக்கும் ரத்தம் கொடுப்பதில் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு நாளும், 'ரத்தம் தேவை’ என்று செல்போனில் வரும் எஸ்.எம்.எஸ்-ஐ பார்வர்ட் செய்வதுடன் நம் கடமை முடிந்துவிடக் கூடாது. அடுத்தவர்களுக்காக சில துளி கண்ணீர் சிந்துவதைவிட, பாதிக்கப்பட்டவர்களுக்காக பல துளிகள் ரத்தத்தைத் தானமாகக் கொடுப்பதுதான், உயிரையே மீட்டுத்தரும் உன்னத சேவை.
ஜூன் 14 உலக ரத்த தான விழிப்புஉணர்வு தினம். ரத்த தானம் செய்வது பற்றி சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் ரத்த வங்கி பிரிவுத் தலைவர் டாக்டர் ஜோத்சனா கோடாதியிடம் கேட்டோம்:
'உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை நம் உடலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்செல்லவும், கழிவுப் பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது ரத்தம். இந்த ரத்தம் தேவைப்படுவோருக்கு வழங்கக்கூடிய ஒரு சிறந்த பரிசுப் பொருள். நாம் ஒவ்வொரு முறை தானமாகக் கொடுக்கும் ரத்தம் மூன்று உயிர்களைக் காக்கும்.
பொதுவாக பெரிய அறுவைசிகிச்சை செய்யும்போதும், தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தில் படுகாயம் அடைந்து ரத்த இழப்பு ஏற்பட்டவர்கள், தீக்காயம் அடைந்தவர்கள், ரத்தப் புற்றுநோயாளிகளுக்கு என, ரத்த தானம் உயிர் காக்கும் ஒன்று. பிரசவத்தின்போது ரத்த இழப்பு ஏற்பட்டு தாயும் சேயும் இறக்கும் கொடுமை இன்னும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்கு தேவையான ரத்தம் கிடைப்பதன் மூலம் உயிரிழப்பைத் தவிர்க்க முடியும்.
இதுபற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆண்டு பிரசவ காலத்தில் ரத்த இழப்பால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கத்தில் ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது' என்றவர், யார் எல்லாம் ரத்தம் கொடுக்கலாம், யார் கொடுக்கக்கூடாது என்பதையும் விவரித்தார்.
'18 வயது முதல் 65 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் ரத்த தானம் செய்யலாம்.
தானம் கொடுப்பவர், எடை 45 கிலோவுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 100 மி.லி.க்கு 12.5 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
ரத்த அழுத்தம் இயல்பான நிலையில் இருக்க வேண்டும். அதாவது சிஸ்டாலிக் என்பது 160/100 என்றும் டயாசிஸ்டாலிக் என்பது 90/60-க்குள் இருக்க வேண்டும்.
ரத்தம் தானமாகப் பெறப்படுவதற்கு முன், இவை அனைத்தையும் பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக்கொள்ளப்படும். மேலும் ரத்த வகை, ஆர்.எச். பிரிவு போன்ற பரிசோதனைகளும் செய்யப்பட்ட பின்னரே ரத்தம் எடுக்கப்படும்.
18 வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் புகட்டும் பெண்கள், மாதவிலக்கு நேரத்தில் உள்ள பெண்கள், பெரிய அறுவைசிகிச்சை செய்தவர்கள் ஆறு மாதங்களுக்கு உள்ளாகவும், சிறிய அறுவைசிகிச்சை செய்தவர்கள் மூன்று மாதங்களுக்கு உள்ளாகவும் ரத்த தானம் செய்யக் கூடாது. மேலும், மலேரியா காய்ச்சல் வந்தவர்கள் ஆறு மாதம் வரையிலும், மஞ்சள் காமாலை உள்ளவர்கள் ஒரு வருடம் வரையிலும், காசநோய் உள்ளிட்ட வேறு எந்த ஒரு நோய்க்கு சிகிச்சை எடுத்து வருபவர்களும், தடுப்பூசி ஏதேனும் எடுத்துக் கொண்டவர்கள், ஸ்டீராய்டு - ஹார்மோன் மருந்து மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள், பால்வினை எச்.ஐ.வி. நோய் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது. மேலும், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்களும் ரத்த தானம் செய்யக் கூடாது. ஒரு முறை ரத்த தானம் செய்தவர்கள் மூன்று மாதங்கள் கழித்தே மீண்டும் ரத்த தானம் செய்யலாம்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 5507443444851364313

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item