“ஆத்துல கண்டம்... அருவியில கண்டம்!” ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட் -- உபயோகமான தகவல்கள்!

“ஆத்துல கண்டம்... அருவியில கண்டம்!” ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட் பி க்னிக்... டூர் என்றாலே... 'நிறைய தண்ணீர் இருக்கற ஆறு, அருவின...

“ஆத்துல கண்டம்... அருவியில கண்டம்!”
ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்
பிக்னிக்... டூர் என்றாலே... 'நிறைய தண்ணீர் இருக்கற ஆறு, அருவினு பார்த்துப் போடுங்க' என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குஷியாவார்கள். ஆனால், இப்படிப்பட்ட நீர்நிலைகளைத் தேடி உற்சாகமாக ஓடுபவர்கள்... ஆவல் மிகுதியால் அவற்றிலிருக்கும் ஆபத்துகளை மறந்து குதியாட்டம் போட... கடைசியில், 'பாண தீர்த்த அருவிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் நீரில் மூழ்கி பலி', 'தேக்கடியில் படகு கவிழ்ந்து 30 சுற்றுலா பயணிகள் மரணம்' என்று தலைப்புச் செய்திகளாகி அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்துவிடுகிறார்கள்!
''நீர்நிலைகளில் ஏற்படும் பெரும்பாலான மரணங்களுக்குக் காரணமே... சுயதவறுகள்தான். எச்சரிக்கை பலகைகளை மதிக்கத் தவறுவது, பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றத் தவறுவது போன்றவையே உயிருக்கு உலை வைக்கின்றன'' என்று சொல்லும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் திண்டுக்கல் நிலைய அலுவலர் புருஷோத்தமன், நீர்நிலைகளில் காத்திருக்கும் ஆபத்துகளையும், தப்பிக்கும் வழிகளையும் அக்கறையுடன் அடுக்கினார்.
குளத்தில் காத்திருக்கும் ஆபத்து!
கோயில்களுக்குச் செல்வோர், அங்கிருக்கும் நீர் நிறைந்த கோயில் குளத்தைப் பார்த்ததும் உடனே இறங்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், குளத்தின் படிக்கட்டுகளில் இருக்கும் பாசி, சட்டென்று வழுக்கி ஆளையே காவு வாங்கிவிடும். பொதுவாக, அதிக பயன்பாட்டில் இருக்கும் குளம் என்றால், அதிகமாக பாசி இருக்காது. பயன்பாடு குறைவான இடமாக இருந்தால்... தனியாக இறங்க நினைக்கும்போது, பாசியால் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, குளத்தின் தன்மை, படிகள் வழுக்குமா என்பதைஎல்லாம் அங்குள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து, அதன்படி நடந்துகொள்ளுங்கள்.
தப்பிக்கும் வழி: குளம், ஏரி போன்ற தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகளில் ஒருவர் தவறி விழுந்துவிட்டால், பதற்றத்தில் அனைவருமே உள்ளே குதிப்பது போன்ற மடத்தனம் வேறில்லை. மேலே இருப்பவர்களில் யாருக்காவது நீச்சல் தெரிந்தால் மட்டுமே முயற்சிக்க  வேண்டும். இல்லையென்றால், உதவிக்கு வேறு யாரையாவதுதான் அழைக்க வேண்டும். மீட்பு முயற்சியில் இறங்குபவர்கள், மூழ்கிக் கிடப்பவரின் தலை முடியைக்கொத்தாக பிடித்துத் தூக்க வேண்டும். உடலின் வேறு பாகங்களைத் தொடக்கூடாது. அப்படி தொட்டால், பயத்தின் காரணமாக, காப்பாற்றுபவரையும் தண்ணீருக்குள் மூழ்கடித்துவிடுவார்கள்... ஜாக்கிரதை!
அச்சமூட்டும் ஆறுகள்!
'வெளியூர்க்காரனுக்கு ஆறு பயம்... உள்ளூர்க்காரனுக்கு பேய் பயம்' என்பார்கள். அதற்குக் காரணம், ஆறுகளின் ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்பதுதான். பொதுவாக ஆறுகளில் அதன் வேகத்தின் காரணமாக நீர்சுழல்கள் இருக்கும். அதிலும் அணையிலிருந்து தண்ணீர் வெளியேறும் பகுதி என்றால், கேட்கவே தேவையில்லை. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கல்லணை, அணைக்கரை உள்ளிட்ட பல இடங்களிலும் முதலைகள் நிறைந்திருக்கும். இதுபோன்ற இடங்களுக்குச் செல்வோர், சட்டென்று தண்ணீரில் இறங்கிவிடக் கூடாது. கோடைகாலத்தில், இந்த ஆறுகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும். அவற்றிலும் முதலைகள் காத்திருக்கக்கூடும்! முதலைகளிடம் சிக்கிய பிறகு மீள்வது சுலபமில்லை.
விழுங்கக் காத்திருக்கும் புதைகுழிகள்!
அணைகளைப் பொறுத்தவரை தொடர்ந்து தண்ணீர் தேங்கி இருப்பதால், அணைகளின் கரையோரப் பகுதிகளில் புதைமணல் இருக்கும். இது தெரியாமல் கால் வைத்தால், அதோகதிதான்! திருச்சி அருகேயுள்ள முக்கொம்பு அணைப்பகுதியில் இப்படிப்பட்ட புதைமணல் குழிகள் நிறையவே இருக்கின்றன. இதில் ஆண்டுதோறும் மரணத்தைத் தழுவுவோரின் பட்டியல் உயர்ந்துகொண்டே இருக்கிறது.
தப்பிக்கும் வழி: பொதுவாக இப்படி புதைகுழியில் சிக்கிக்கொள்பவர்கள் உடனடியாக உள்ளே போய்விட மாட்டார்கள். காப்பாற்ற அவகாசம் கிடைக்கும். நீச்சல் தெரியும் என்றாலும், நேரடியாக குதித்து காப்பாற்ற நினைக்கக் கூடாது. நீளமாக கம்பு, கயிறு போன்றவற்றை கொடுத்து காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். வேறு வழியில்லாதபோது, நீச்சல் தெரிந்தவர்கள், கயிறு ஒன்றை எடுத்து ஒரு முனையை கரையிலிருப்பவர்களிடம் கொடுத்துவிட்டு, மறுமுனையை இடுப்பில் கட்டிக்கொண்டு காப்பாற்றும் முயற்சியில் இறங்க வேண்டும். புடவை, துப்பட்டா என கிடைத்ததைப் பயன்படுத்தலாம்.
கலங்கவைக்கும் கடல் அலைகள்!
பொங்கி வரும் கடல் அலைகளைப் பார்த்ததுமே இறங்கி விளையாடத் தோன்றும். ஆனால், இது மிக மிக ஆபத்தான ஒன்று. எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருக்கும் கடல் பகுதி என்றால், கண்டிப்பாக கால் நனைப்பதைக்கூட தவிர்த்துவிடுங்கள். குளிக்கக்கூடிய கடல் பகுதி என்றாலும் உஷார்... உஷார்.
தப்பிக்கும் வழி: ஒருவேளை கடல் அலைகளில் சிக்கிக்கொண்டால் பதற்றப்படாதீர்கள். அலை வரும்போது, நீருக்குள் மூழ்கி அலைக்கு அடியில் செல்லுங்கள் அல்லது குதித்து அலையின் மேலே எழ முயற்சி செய்யுங்கள். இப்படி செய்தால் ஒரு சில அலைகளே உங்களை கரைபக்கம் ஒதுக்கிவிடும்.
படகு சவாரி... ஜாக்கிரதை!
படகு சவாரி இல்லாத  சுற்றுலா தலங்கள் மிகக்குறைவு. ஆனால், இப்படி சவாரி செல்லும்போது, உயிர்காக்கும் கவச உடைகளை அணிந்துகொள்வது முக்கியம். ஒரே பக்கமாக அனைவரும் சென்றுவிடக் கூடாது. அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏறக்கூடாது போன்றவற்றை எல்லாம் கடைப்பிடியுங்கள். ஒருவேளை படகு ஓட்டுபவர்கள் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு இஷ்டம்போல ஆட்களை ஏற்றினாலோ... உயிர்காக்கும் சாதனங்கள் இல்லையென்றாலோ... பயணத்தையே தவிர்த்துவிடுங்கள். 'இவ்வளவு தூரம் வந்துட்டு, படகுல போகலைனா எப்படி?' என்று ஏறினால், அன்றைக்கு பார்த்துகூட அங்கே படகு விபத்து நடக்கலாம்... யார் கண்டது?
தப்பிக்கும் வழி: படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டால்... உடனே பயந்துவிடக் கூடாது. தண்ணீரில் விழுந்தவுடன் பயத்தில் தண்ணீரைக் குடித்துவிடாமல், விழுந்த படகு... அல்லது லைப் ஜாக்கெட் என ஏதாவது கைக்கு அருகில் கிடைக்கிறதா என பாருங்கள். நீரில் மூழ்காமல் சற்று தாமதப்படுத்த முடிந்தால் போதும்... அதற்குள் உதவிகள் கிடைத்துவிடக்கூடும்'' என்று ஒவ்வொன்றை யும் தெளிவாக விவரித்தார் புருஷோத்தமன்.
அழகு ஆபத்து = அருவிகள்!
அருவிகள் என்றாலே அழகோடு ஆபத்தும் நிறைந்தே இருக்கும். குற்றாலம், பாபநாசம், காளிகேசம், கும்பக்கரை, ஒகனேக்கல், அதிரப்பள்ளி என்று எந்த அருவிக்குச் சென்றாலும், அவற்றின் ஆபத்தான பக்கத்தைப் பற்றி முதலில் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். இந்த அருவிகளில் எல்லாம் தண்ணீர் விழும் இடங்களில் ஆபத்தான பாறைகள் நிறைந்திருக்கும். இவற்றுக்குள் குதித்தால், பாறைகளில் சிக்கிக்கொண்டு பரலோகம் போக வேண்டியதுதான். அருவிகளின் மேற்புறத்துக்குச் சென்று குளிப்பதும் ஆபத்தானது. கொஞ்சம் தவறினாலும், பாறைகளின் வழியாக வழுக்கிச் சென்று, பல அடி உயரத்திலிருந்து கீழே விழும் அருவி நீருக்கு இரையாக நேரிடும்.

Related

உபயோகமான தகவல்கள் 1510527641284492463

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item