வேப்பம் பூ ரசம்-அம்மை நம்மை அணுகாது!
இ யற்கையின் சீற்றங்களுக்குப் பெரும்பாலும் இயற்கையிலேயே தீர்வும் இருக்கும் என்பதற்குச் சான்று, கோடையில் பூக்கும் வேப்பம் பூ. நவீனம் ஏறக்கு...
https://pettagum.blogspot.com/2014/04/blog-post_1202.html
இயற்கையின்
சீற்றங்களுக்குப் பெரும்பாலும் இயற்கையிலேயே தீர்வும் இருக்கும்
என்பதற்குச் சான்று, கோடையில் பூக்கும் வேப்பம் பூ. நவீனம் ஏறக்குறைய
மறந்தேபோய்விட்ட உணவு, வேப்பம் பூ ரசம். வேப்பம் பூவைச் சேகரித்து நிழலில்
உலர்த்திக் காய வைத்துக்கொள்ளுங்கள். (நாட்டு மருந்துக்கடை, அப்பளம்/வடாம்
விற்கும் கடைகளில் வேப்பம் பூ கிடைக்கும்!) சாதாரணமாக ரசப்பொடிக்குப்
போடும், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, சீரகம் இவற்றுடன் கூடுதலாக இந்த
வேப்பம் பூவையும் சேர்த்து ரசம் வைத்து கோடையில் வாரம் மூன்று நாள்
சாப்பிட்டால், அம்மை நம்மை அணுகாது.
Post a Comment