கபாலபாதி கிரியா! ஆசனம்!!
...
https://pettagum.blogspot.com/2014/01/blog-post_5965.html
இப்பயிற்சி மண்டை யோட்டை சுத்திகரிக்கிறது. ஆதனால் இந்த ஆசனத்தை சுத்திகரிப்பு பயிற்சி என்று அழைக்கப்படுகிறது. ஒழுங்காக இப்பயிற்சியைச் செய்யும் போது நபர்களின் மூகம் ஒளி வீசும்.
செய்முறை:
விரிப்பில் தலை, கழுத்து, முதுகு ஆகியவற்றை நேராக இருக்கும்படி அமர வேண்டும். மூச்சை வேகமாக வெளியே விடவும். அடிவயிற்றின் அடிபாகம் லேசாக அசையட்டும். மூக்கு நுனியின் மீது எண்ணத்தைச் செலுத்தவும். சிறிது சிறிதாக மூச்சு இழுத்தும், அவைகளைத் தொடர்ந்து சிறிது சிறிது மூச்சு வெளி விடுவதும் செய்ய வேண்டும்.
ஆரம்பத்தில் ஒரு நொடிக்கு ஒரு முறை மூச்சு இழுப்பதும் வெளி விடுதலும் வேண்டும். இவ்வாறு காலையிலும், மாலையிலும் மூன்று சுற்றுகள் செய்யலாம்.
பலன்கள்:
இப்பயிற்சி மண்டையோடு, சுவாச அமைப்பு, நாசித் துவாரம் ஆகியவைகளை சுத்தமாக்குகிறது. கோழை நோய்களைக் குணமாக்குகிறது. சுவாச குழாய்களிலுள்ள சளியைப் போக்குகிறது. இதனால் ஆஸ்துமா குணமாகிறது.
Post a Comment