விக்கலை நிறுத்த வழி உள்ளதா?' மருத்துவ டிப்ஸ்!
'எனக்குத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக விக்கல் இருந்தது. 'அதிர்ச்சி வைத்தியம் தந்தால், உடனே சரியாகிவிடும். தண்ணியைக் குட...
https://pettagum.blogspot.com/2014/01/blog-post_3310.html
'எனக்குத் தொடர்ந்து
மூன்று நாட்களுக்கு மேலாக விக்கல் இருந்தது. 'அதிர்ச்சி வைத்தியம் தந்தால்,
உடனே சரியாகிவிடும். தண்ணியைக் குடிச்சா சரியாகும்’ என்று ஆளாளுக்கு
அட்வைஸ் செய்தார்கள். ஆனால், விக்கல் விடவில்லை. மாத்திரை வாங்கிச்
சாப்பிட்டு, இப்போது ஓரளவு பரவாயில்லை. இப்படித் தொடர்ந்த விக்கல் ஏன்
வருகிறது? அதை நிறுத்த வழி உள்ளதா?'
ஆதிராஜன், செங்கல்பட்டு.
'விக்கல் எடுத்தால் கொஞ்சம் தண்ணீர் குடித்தால், சட்டென
நின்றுவிடும். தண்ணீர் குடிக்காமலேயே இருப்பது, அரக்கப்பரக்க உணவை அள்ளிப்
போட்டுக்கொள்வது, சூடாகச் சாப்பிடுவது, மிக அதிகமாக உணவை உண்பது போன்ற
காரணங்களால் விக்கல் ஏற்படுகிறது. மேலும், கொழுப்பு சார்ந்த உணவுகளை அதிகம்
எடுத்துக்கொள்வது, புரதச் சத்து உணவுகளைச் சாப்பிடாமலே இருப்பது, பயம்,
மனரீதியான பிரச்னைகளாலும் விக்கல் வரலாம். விக்கலினால் பெரிய அளவில்
பாதிப்பு இல்லை என்றாலும் மூன்று, நான்கு நாட்கள் தொடர்ந்து விக்கல்
இருந்தால், சிறுநீரகம், கல்லீரல் கோளாறு, மாரடைப்பு, நரம்பு வாதம்,
நுரையீரல் பிரச்னை, சர்க்கரை நோய் போன்ற பல நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.
இதற்கு, பிராணாயாமப் பயிற்சி சிறந்த பலனைத் தரும்.
ஒரு
காகிதக் கவரை வைத்து ஊதி, திரும்பவும் அந்தக் காற்றை சுவாசிக்க வேண்டும்.
இதுபோல் இருபது முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் கரிமிலவாயு
அளவு அதிகரித்து, பிராணவாயுவின் அளவு குறையும். இதனால் விக்கல் நிற்கும்.
உட்கார்ந்த நிலையில் மூச்சை உள்ளிழுத்து வெளியேவிட வேண்டும்.
20 எண்ணும் வரை மூச்சை நன்றாக அடக்கிக்கொள்ள வேண்டும். இப்படி ஐந்து முறை செய்ய வேண்டும்.
தும்மலைக்கூட வரவழைத்துக்கொள்ளலாம்.'
டாக்டர் கு.கணேசன், பொதுநல மருத்துவர், ராஜபாளையம்.
Post a Comment