சந்தேகங்கள்-கேள்வி-பதில்-- உபயோகமான தகவல்கள்!
நானும் என் கணவரும் சேர்ந்து பொதுத்துறை வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு என் கணவர் இறந்துவிட்டா...
https://pettagum.blogspot.com/2014/01/blog-post_2134.html
நானும்
என் கணவரும் சேர்ந்து பொதுத்துறை வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கு
வைத்திருந்தோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு என் கணவர் இறந்துவிட்டார்.
இப்போது அந்தக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு நான் என்ன செய்ய
வேண்டும்?
ரம்யா, திருச்சி.
சுப்புராமன், முதன்மை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமை அலுவலகம், சென்னை.
''உங்களின் கணவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்யும்
வகையில் அவருடைய இறப்பு சான்றிதழை வங்கியில் சமர்ப்பிக்கவேண்டும். இதனுடன்
இருவரின் பெயரில் இருந்த சேமிப்புக் கணக்கை உங்களின் பெயருக்கு மட்டும்
மாற்றி தரும்படி ஒரு கடிதத்தையும் இணைத்து தரவேண்டும்.
மேலும், அந்தச் சேமிப்புக் கணக்குக்கு நாமினி ஒருவரை
நியமிப்பது அவசியம். இதையெல்லாம் செய்தபிறகு வங்கி அந்தக் கணக்கை உங்களின்
பெயருக்கு மாற்றித் தரும். தொடர்ந்து அதே கணக்கு எண்ணை நீங்கள்
பயன்படுத்தலாம்.''
என்னுடைய
அப்பா ஒரு வருடத்துக்கு முன்பு இஎல்எஸ்எஸ் திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய்
முதலீடு செய்திருந்தார். தற்போது அவர் இறந்துவிட்டார். இதில் மூன்று வருடம்
லாக் இன் பீரியடு உள்ளது. அந்தப் பணத்தை எப்படி எடுப்பது?
-பூமாலை, கோவை.
சுவாமிநாதன், இயக்குநர், ஓம் ஸ்பெக்ட்ரம் ஃபைனான்ஷியல் கன்சல்டன்ட்
''இஎல்எஸ்எஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் வருமான வரி
பிரிவு 80சி-ன்படி வரிவிலக்குப் பெறமுடியும். ஆனால், அந்த முதலீட்டுக்கு
மூன்று வருடம் லாக் இன் பீரியடு இருக்கும். இடையில் பணத்தை எடுக்க
முடியாது. உங்களுடைய அப்பா அவரின் பெயரில் முதலீடு செய்து, அதில் நாமினியாக
உங்கள் பெயரைப் போட்டிருந்தால் உங்களின் பான் கார்டு நகல், முகவரிக்கான
சான்று ஆகியவற்றை இணைத்துகொடுத்து கேஒய்சி படிவத்தை நீங்கள் பூர்த்தி
செய்துகொடுக்க வேண்டும்.
அதன்பிறகு முதலீடு உங்களின் பெயருக்கு மாறிவிடும். லாக்
இன் பீரியடில் மூன்று ஆண்டுகளில் மீதி இருக்கும் காலம் முடிந்த பிறகு
யூனிட்களை விற்றுக்கொள்ளலாம்.
ஒருவேளை நாமினி குறிப்பிடப்படவில்லை என்றால்,
சட்டப்படியான வாரிசு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இது சமர்ப்பித்த
பிறகு, லாக் இன் பீரியடு முடிந்தபின் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.''
ஃப்ளோட்டர்
இன்ஷூரன்ஸ் பாலிசியில் அடையாள அட்டையை குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்
தருவார்களா அல்லது பொதுவான ஓர் அட்டையைத் தருவார்களா?
குமார், காஞ்சிபுரம்.
ப.பாகுபலி, மேலாளர், நேஷனல் இன்ஷூரன்ஸ் கம்பெனி, சென்னை.
''ஃப்ளோட்டர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கவராகும் குடும்ப
உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியாகத்தான் அடையாள அட்டை வழங்கப்படும்.
கவரேஜ் தொகை என்பது அனைவருக்கும் பொதுவாக இருக்கும். தேவைக்கேற்ப அதைப்
பயன்படுத்திக்கொள்ளலாம்.''
Post a Comment