நான் ஏன் ரத்த தானம் செய்ய வேண்டும்? 1. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று ரத்த தானம் செய்கிறவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்ப...
நான் ஏன் ரத்த தானம் செய்ய வேண்டும்?
1. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று ரத்த தானம் செய்கிறவர்களுக்கு
ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு மூன்றுக்கு ஒரு பங்கு குறைகிறது.
2. உடலில் புது ரத்தம் பாய்கிறது. அதாவது, ரத்த தானம் செய்த பின் புதிதாய் சிவப்பணுக்கள் உடலில் உற்பத்தி ஆகின்றன
3. ரத்த சோதனைகள் : அனீமியா, ரத்த அழுத்தம், உடல் எடை, ஹெபாடிடிஸ் பி,
ஹெபாடிடிஸ் சி, எய்ட்ஸ், பால்வினை வியாதிகள், மலேரியா- இவை உங்களுக்கு
இருக்கின்றனவா என்று இலவசமாக சோதனை செய்யப்படும்.
4. உங்கள் உடல் எடுத்த ரத்தம் அத்தனையையும் இரண்டு நாட்களிலேயே திரும்பச் சுரந்து விடும்.
5. ரத்த தானம் செய்வதால் உடல் நலம் கெடாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். எந்த அபாயமும் இல்லை.
6. ரத்த அழுத்தம் சோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் உங்கள் உடல் நிலை குறித்து அறிய முடியும்.
7. ஒரு யூனிட் ரத்த தானம் செய்யப்படும்போது 650 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
8. நாம் நல்ல உடல் நிலையில் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்ற மன தைரியம் பிறக்கின்றது.
9. உங்கள் ரத்த தானமானது 3 உயிர்களை காப்பாற்றக்கூடும்
Post a Comment