''தென்னை மரங்களில் கரையான் தாக்குதல் உள்ளது. அதை எப்படித் தடுப்பது?'' -- விவசாயக்குறிப்புக்கள்,
''தென்னை மரங்களில் கரையான் தாக்குதல் உள்ளது. அதை எப்படித் தடுப்பது?'' எஸ். கந்தசாமி, பொள்ளாச்சி. கன்னியாகுமரி மாவட்ட ம...
https://pettagum.blogspot.com/2013/09/blog-post_5700.html
''தென்னை மரங்களில் கரையான் தாக்குதல் உள்ளது. அதை எப்படித் தடுப்பது?''
எஸ். கந்தசாமி, பொள்ளாச்சி.
கன்னியாகுமரி மாவட்ட முன்னோடி இயற்கை விவசாயி மீனாட்சிசுந்தரம் பதில் சொல்கிறார்.
''கரையான்கள், விவசாயிகளின் நண்பன்தான். ஆனால், சில
நேரங்களில் இந்த நண்பன் அதிக உரிமை எடுத்துக் கொண்டு தொல்லைப்
படுத்துவதுண்டு. பொதுவாக, தென்னந்தோப்புக்களில் உள்ள எல்லா மரங்களிலும்
கரையான் தாக்குதல் இருக்காது. பச்சையான பொருளை கரையான்கள் உண்ணாது.
வேர்கள், பட்டைகள் காய்ந்திருக்கும் மரங்களில் மட்டுமே கரையான்கள்
இருக்கும்.
இதனால், மரங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. இதனால்,
மரத்தில் காய் பறிக்க ஏறும்போது, கொஞ்சம் சிரமம் இருக்கும். கிரீஸ், கழிவு
ஆயில் அல்லது தார் இவற்றில் ஏதாவதொன்றை அடிமரத்தில் இருந்து, இரண்டு அடி
உயரத்துக்குப் பூசி விட்டால், கரையான் பிடிக்காது. கரையான் அதிகம் உள்ள
தென்னந்தோப்புகளில், கோழிகளை வளர்க்கலாம். கரையான், கோழிகளுக்கு ஏற்ற நல்ல
புரதச்சத்து கொண்ட உணவு. கரையான் வந்தால் வருத்தப்படுவதை விடுத்து, அதை
லாபகரமாகப் பயன்படுத்தும் விதத்தை யோசிப்பதுதான் புத்திசாலித்தனம்.''
தொடர்புக்கு, செல்போன்: 94438-44752.
1 comment
நல்ல யோசனை.
Post a Comment