30 வகை சுண்டல் --- 30 நாள் 30 வகை சமையல்,

காராமணி இனிப்பு சுண்டல் தேவையானவை: சிவப்பு காராமணி - ஒரு கப், பாகு வெல்லம் (பொடித்தது) - ஒரு கப், வறுத்துப் பொடித்த எள் - 2 டீஸ்பூன்,...

காராமணி இனிப்பு சுண்டல்
தேவையானவை: சிவப்பு காராமணி - ஒரு கப், பாகு வெல்லம் (பொடித்தது) - ஒரு கப், வறுத்துப் பொடித்த எள் - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: சிவப்பு காராமணியை வறுத்து, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து சிறிது கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும். இதை வெந்த காராமணியுடன் சேர்த்து... எள்ளுப் பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்... காராமணி இனிப்பு சுண்டல் தயார்.

கடலைப்பருப்பு சுண்டல்
தேவையானவை:  கடலைப்பருப்பு - 200 கிராம், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு... வேக வைத்த கடலைப்பருப்பை தண்ணீர் வடித்து சேர்த்து, உப்பு, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பார்லி  சாபுதானா சுண்டல்
தேவையானவை: பார்லி, ஜவ்வரிசி, வறுத்த வேர்க்கடலை - தலா 100 கிராம், பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  பார்லி, ஜவ்வரிசியை நன்கு ஊற வைத்து, தண்ணீர் வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சி விழுது, மிளகுத்தூள் சேர்த்து, ஊற வைத்த பார்லி, ஜவ்வரிசி, உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரி, பிஸ்தா, பொட்டுக்கடலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பச்சைப் பட்டாணி சுண்டல்
தேவையானவை:  பச்சைப் பட்டாணி - 200 கிராம், துருவிய கேரட் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - ஒரு தலா டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று.
செய்முறை:  தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்து வைக்கவும். பச்சைப் பட்டாணியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து... குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வேக வைத்த பட்டாணியை தண்ணீர் வடித்து சேர்க்கவும். இதனுடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, வறுத்துப் பொடித்ததையும் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லியைத் தூவி கலந்து பரிமாறவும்.

வேர்க்கடலை சுண்டல்
தேவையானவை:  பச்சை வேர்க்கடலை - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - தலா ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையுடன் உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து... வேக வைத்த கடலையை தண்ணீர் வடித்து சேர்த்து, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பயறு இனிப்பு சுண்டல்
தேவையானவை:  பச்சைப் பயறு - 200 கிராம், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்.
செய்முறை: பச்சைப் பயறை லேசாக வறுத்து, 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தைப் பொடித்து, நீரில் கரைத்து சிறிது கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அடிப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும். பாகு கெட்டியானதும் வேக வைத்த பயறை தண்ணீர் வடித்து சேர்த்து, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.

பாசிப்பருப்பு கார சுண்டல்
தேவையானவை:  பாசிப்பருப்பு - 200 கிராம், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து, வெடித்ததும் பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த பாசிப்பருப்பை தண்ணீர் வடித்து சேர்க்கவும். பிறகு உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஃப்ரூட் சுண்டல்
தேவையானவை:  முளைகட்டிய சோளம், கொய்யாபழத் துண்டுகள், ஆப்பிள் துண்டுகள், பப்பாளிப்பழத் துண்டுகள் - தலா ஒரு கப், உலர் திராட்சை - 10.
செய்முறை: முளைகட்டிய சோளத்துடன் நறுக்கிய கொய்யாப்பழத் துண்டுகள், ஆப்பிள் துண்டுகள், பப்பாளி பழத் துண்டுகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உலர் திராட்சையையும் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: சுலபமாக செய்யக்கூடிய இந்த சுண்டலில் ருசியும், சத்தும் ஏராளம்!

ரங்கோலி சுண்டல்
தேவையானவை: பச்சைப் பட்டாணி, முளைகட்டிய சோளம், சோயா - தலா ஒரு கப், கேரட் துருவல் - 4 டீஸ்பூன், மாங்காய் (துருவியது) - 2 டீஸ்பூன், இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோளம், பட்டாணி, சோயா எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து குக்கரில் வைத்து, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கி, தண்ணீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இஞ்சி விழுது, மாங்காய் துருவல், கேரட் துருவல், வேக வைத்த சோளம், பட்டாணி, சோயா சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லியை மேலே தூவினால்... ரங்கோலி சுண்டல் ரெடி!

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்
தேவையானவை:  வெள்ளை கொண்டைக்கடலை - 200 கிராம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை: கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊற வைக்கவும். காலையில் நன்றாகக் களைந்து, குக்கரில் வைத்து தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். வெறும் வாணலியில் தனியா, காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பை வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வேக வைத்த கடலையை தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு சேர்த்து, வெடித்ததும் வேக வைத்த கொண்டைக்கடலையைப் போட்டுக் கிளறி, அரைத்த பொடியை சேர்த்து... பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பயறு  பனீர் சுண்டல்
தேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு - 2 கப், பனீர் - 10 துண்டுகள், கேரட் துருவல் - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய பச்சைப் பயறுடன், கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பனீர் துண்டுகளை நெய்யில் பொரித்து இதனுடன் சேர்த்து, மிளகுத்தூள் போட்டு நன்றாகக் கலக்கவும்.

புதினா  கொத்தமல்லி சுண்டல்
தேவையானவை:  புதினா - ஒரு கட்டு, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய கோஸ் - ஒரு கப், வேக வைத்த வேர்க்கடலை - ஒரு கப், முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப்,  மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புதினாவை ஆய்ந்து நறுக்கவும். கடாயில் நெய் விட்டு புதினா,கோஸ், கொத்தமல்லி சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும். பிறகு, வேக வைத்த வேர்க்கடலை, முளைகட்டிய பச்சைப் பயறு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

நெய் அப்பம்
தேவையானவை:  கோதுமை மாவு - ஒரு கப், நெய் - 100 மில்லி, தேங்காய் துருவல் - ஒரு கப், அரிசி - 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு கப் ஏலக்காய் - 4.
செய்முறை:  தேங்காய் துருவல், அரிசி, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து, ஏலக்காயை உரித்துப் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதை கோதுமை மாவுடன் கலந்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். ஆப்பக் கல்லில் நெய் விட்டு, மாவை சிறு கரண்டியில் எடுத்து ஊற்றி, வெந்தவுடன் திருப்பிப் போட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு:  நவராத்திரி பூஜையில் நெய் அப்பத்துக்கு முக்கிய இடம் உண்டு.

மொச்சை சுண்டல்
தேவையானவை:  காய்ந்த மொச்சை - 250 கிராம், தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மொச்சையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். மொச்சையை தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, இஞ்சி விழுதை போட்டு, வேக வைத்த மொச்சையையும் தண்ணீர் வடித்து சேர்க்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், பொடித்து வைத்த பொடி, கறிவேப்பிலை போட்டு நன்கு கிளறி, இறக்கும் சமயம் கொப்பரைத் துருவல் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
குறிப்பு: தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை மொத்தமாக பொடித்து வைத்துக்கொண்டும் சுண்டலுக்கு தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

மல்டி பருப்பு சுண்டல்
தேவையானவை: கடலைப்பருப்பு, பச்சை வேர்க்கடலை, முளைகட்டிய கொள்ளு - தலா ஒரு கப், எள்ளு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, கொள்ளு, வேர்க்கடலையுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். எள்ளு, காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடிக்கவும். வேக வைத்த கொள்ளு, கடலைப்பருப்பு, வேர்க்கடலையில் இருந்து தண்ணீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, எள்ளு - மிளகாய் பொடி, வேக வைத்த பருப்புகள் சேர்த்துக் கிளறவும். அதனுடன் கொப்பரைத் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கிரிஸ்பி சுண்டல்
தேவையானவை:  முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், பொரித்த கார்ன்ஃப்ளேக்ஸ் - ஒரு கப், ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - 100 கிராம், காராபூந்தி - 100 கிராம், உப்பு - தேவையான அளவு
செய்முறை:  பச்சைப் பயறுடன் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பிறகு தண்ணீர் வடித்து, பொரித்த கார்ன்ஃப்ளேக்ஸ், ஓமப்பொடி, காராபூந்தி சேர்த்துக் கலந்து சாப்பிடக் கொடுக்கவும்.

பூந்தி தயிர்வடை
தேவையானவை:  உளுத்தம்பருப்பு - 250 கிராம், புளிப்பு இல்லாத தயிர் - அரை லிட்டர், பச்சை மிளகாய் - 3, நறுக்கிய கொத்தமல்லி, கேரட் துருவல் - தலா 2 டீஸ்பூன், காராபூந்தி - 100 கிராம், எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து தண்ணீரை வடித்து... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும், வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு எடுக்கவும். வடைகளை வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து, தயிரில் போடவும். நன்கு ஊறியதும், மேலே பூந்தி, கேரட் துருவல், கொத்தமல்லி தூவவும்.

அவல்  சர்க்கரை புட்டு
தேவையானவை: கெட்டி அவல் - 250 கிராம், நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10, சர்க்கரை - 200 கிராம்.
செய்முறை:  அவலை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சர்க்கரையை பொடித்து அதனுடன் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து சாப்பிடக் கொடுக்கவும்.

எள்ளு சாதம்
தேவையானவை:  பாசுமதி அரிசி - 250 கிராம், எள்ளு - 25 கிராம், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  அரிசியுடன் ஒரு பங்குக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். எள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை வறுத்துப் பொடித்து, சாதத்தில் சேர்த்து...  நல்லெண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு:  புரட்டாசி சனிக்கிழமையில் இந்த எள்ளு சாதத்தை பெரும்பாலான வீடுகளில் செய்வார்கள்.

தாளிப்பு தயிர் சுண்டல்
தேவையானவை:  முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், பொடியாக நறுக்கிய பேபிகார்ன்  - ஒரு கப், கேரட் துருவல் - ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சுத்தம் செய்து நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், தயிர் (புளிப்பு இல்லாதது) - 200 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பயறு, கொண்டைக்கடலையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, இஞ்சி தாளித்து, கேரட் துருவலை சேர்க்கவும். இதை தயிரில் போட்டு, உப்பு சேர்த்து... வேக வைத்த பயறு, கொண்டைக்கடலை, வதக்கிய பேபிகார்ன், மிளகுத்தூள் சேர்த்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலையை மேலே தூவி சாப்பிடக் கொடுக்கவும்.
குறிப்பு: ருசியுடன் சத்தும் மிகுந்த இந்த தாளிப்பு சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. விருப்பப்பட்டால், சிறிது சர்க்கரை சேர்த்துக் கலக்கலாம்.

வாழைப்பழ அல்வா
தேவையானவை: வாழைப்பழம் - 4, சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப் பருப்பு, கேசரி பவுடர் - சிறிதளவு, நெய் - 100 மில்லி.
செய்முறை: வாழைப்பழத்தை நெய் சேர்த்து வதக்கி, நன்கு மசித்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாக கிளறி... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

தேங்காய் சாதம்
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, நெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: அரிசியுடன் ஒரு பங்குக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காய் துருவலை எண்ணெய் விட்டு வறுக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலையை தாளிக்க வும். சாதத்தை அகலமான பாத் திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து, வறுத்த தேங்காய், தாளித்தது ஆகிய வற்றை சேர்த்துக் கலக்கவும். பிறகு, முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
குறிப்பு: இதில் வறுத்த வேர்க்கடலையும் சேர்க்கலாம்.

பால் பொங்கல்
தேவையானவை: அரிசி - 200 கிராம், பால் - 500 மில்லி, சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10, நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:  அரிசியுடன் ஒரு பங்குக்கு மூன்று பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து 4 விசில் விட்டு இறக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி, சாதத்துடன் சேர்த்து மசித்து, சர்க்கரை சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு... ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு போட்டு கலந்து, இறக்கவும்.
குறிப்பு:  திராட்சை, பிஸ்தாவை வறுத்து சேர்க்கலாம்.

அன்னாசிப்பழ கேசரி
தேவையானவை:  ரவை - 200 கிராம், சர்க்கரை - 150 கிராம், அன்னாசிப்பழத் துண்டுகள் - ஒரு கப், நெய் - 100 மில்லி, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10.
செய்முறை: ரவையை நெய் விட்டு சிவக்க வறுக்கவும். அன்னாசிப்பழத் துண்டுகளை மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு... அன்னாசிப் பழ விழுது சேர்த்து, கொதித்ததும் ரவையை தூவிக் கிளறி வேகவிடவும். நன்கு வெந்ததும், சர்க்கரையைப் போட்டுக் கிளறி... ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்க்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தேங்காய்  அரிசி பாயசம்
தேவையானவை:  தேங்காய் துருவல் - ஒரு கப், அரிசி - ஒரு கைப்பிடி அளவு, பொடித்த வெல்லம் - 200 கிராம், காய்ச்சிய பால் - 500 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி - 10, வாழைப்பழம் - ஒன்று.
செய்முறை: அரிசி, தேங்காய் துருவலை சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் தண் ணீர் விட்டு அரிசி - தேங்காய் விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். நன்கு வெந்ததும், பொடித்த வெல்லம் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன், காய்ச்சிய பாலை சேர்த்து, ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரி போட்டு இறக்கவும். வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
குறிப்பு: கொப்பரைத் தேங் காயை, மெல்லியதாக  நறுக்கி நெய்யில் வறுத்து சேர்க்கலாம். பலாச்சுளையையும் நறுக்கி சேர்க்கலாம்.

காய்கறி வடை
தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கோஸ் துருவல், கேரட் துருவல் - தலா 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 250 மில்லி.
செய்முறை:  பருப்புகளை ஒன்றாக ஊற வைத்து, தண்ணீர் வடித்து, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கேரட் துருவல், கோஸ் துருவல் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: கீரை சேர்த்தும் வடை தயாரிக்கலாம்.

அக்கார வடிசல்
தேவையானவை:  அரிசி - 250 கிராம், வெல்லம் - 250 கிராம், பால் - 500 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப் பருப்பு - 10, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, நெய் - 100 மில்லி.
செய்முறை: அரிசியுடன் ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் பால் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெல்லத்தைக் கரைத்து, சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு வைத்து கெட்டியானதும், சாதத்துடன் கலந்து மசிக்கவும். அதனுடன் வறுத்த முந்திரி, நெய், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்த்துக் கலக்கவும்.

ஜவ்வரிசி பாயசம்
தேவையானவை: ஜவ்வரிசி - 100 கிராம், சர்க்கரை - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10, காய்ச்சிய பால் - 500 மில்லி.
செய்முறை:  ஜவ்வரிசியை நன்றாக வேக வைக்கவும். வெந்தவுடன் சர்க்கரையை சேர்க்க வேண்டும். பின்பு காய்ச்சிய பாலைக் கலந்து, கெட்டியாகும் வரை கிளறவும். அதனுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி, இறக்கவும்.
குறிப்பு: சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்தும் தயாரிக்கலாம்.

உக்காரை
தேவையானவை:  கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு கப், வெல்லம் - 150 கிராம், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஊற வைத்து தண்ணீர் வடித்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, கெட்டியாக பாகு காய்ச்சிக் கொள்ளவும். இட்லித் தட்டில் சிறிது நெய் தடவி, அரைத்த பருப்பை வைத்து ஆவியில் வேகவிட்டு எடுத்து, ஆறிய உடன் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால்... உதிரி உதிரியாக வரும். இதனுடன் பாகு சேர்த்து நன்கு கலந்து, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு சேர்க்கவும்.
குறிப்பு: இது பாரம்பரியம் மிக்க இனிப்பு வகைகளில் ஒன்று.

பாதாம்  தேங்காய் பர்ஃபி
தேவையானவை: பாதாம் பருப்பு - 10, நெய் - 4 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், சர்க்கரை - 100 கிராம், ரவை - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: தேங்காய் துருவல், பாதாம் பருப்பை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். சர்க்கரையுடன் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்ததும் அரைத்த தேங்காய் விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் விட்டு கிளறி, ரவை தூவி... கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய உடன் துண்டுகள் போடவும்.
குறிப்பு: முந்திரியை சேர்த்து அரைத்தும் தயாரிக்கலாம்.

Related

30 நாள் 30 வகை சமையல் 8349962952144700155

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item