டிப்ஸ்...டிப்ஸ்....சமையல் அரிச்சுவடி,
உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் ஆகியவற்றைச் சமைக்கும்போது தண்ணீரில் சில சொட்டு வினிகர் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும். ரவா, மைதா தோசைக்கு...
https://pettagum.blogspot.com/2013/06/blog-post_9716.html
உருளைக்கிழங்கு,
காலிஃபிளவர் ஆகியவற்றைச் சமைக்கும்போது தண்ணீரில் சில சொட்டு வினிகர்
சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும். ரவா, மைதா தோசைக்குக் கரைத்த மாவிலேயே
தேவையான எண்ணெயை ஊற்றிவிட்டால், ஒவ்வொரு தோசைக்கும் தனித்தனியே எண்ணெய்
ஊற்ற
வேண்டியதில்லை.
-
அலுமினியப் பாத்திரம் அடிப்பிடித்துவிட்டால், வெங்காயத்தை சிறுதுண்டுகளாக வெட்டி, பாத்திரத்தின் அடியில் போட்டு வைத்து, அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் அடிப்பிடித்த அடையாளமே தெரியாது. கண்ணாடிப் பாத்திரக் கறைகளில், வினிகரில் ஒரு துணியை நனைத்துத் தேய்த்து, பிறகு டேபிள் சால்ட் கொண்டு கழுவினால் கறைகள் போய்விடும்.
-
வாழைக்காயை சீவிவிட்டு, தோலைத் தூக்கி எறிய வேண்டாம். சீவும்போதே சிறிது சதைப்பற்றுடன் சீவி, அதை சிறு துண்டுகளாக நறுக்கவும். சிறிது எண்ணெயில் துண்டுகளாக்கிய தோலைப் போட்டு வதக்கவும். அதனுடன், தேவையான அளவு மிளகாய் வற்றல், உப்பு, புளி, பெருங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி அரைத்தால், தோசைக்குத் தொட்டுக் கொள்ள சுவையான வாழைக்காய் தோல் சட்னி ரெடி!
அவலை புளிநீரிலோ, மோரிலோ 2 நிமிடங்கள் ஊற வைத்து உப்புமா செய்தால் வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும். கடையில் பாம்பே ரவை வாங்கி வந்ததும், அதை வெறும் வாணலியில் பொன் நிறத்தில் வாசனை வரும் வரை வறுத்து, ஆறிய பிறகு சம்புடத்திலோ, இறுக்கமான மூடி உள்ள பாட்டிலிலோ போட்டு வைத்துவிட்டால், 3-4 மாதங்களுக்கு புழு, பூச்சி அண்டாது.
சமைக்கும் பொருள் களை குறைந்த தீயில் பாத்திரங்களில் மூடி போட்டு சமைப்பது சிக்கனம். மூடியில்லாமல் சமைக்கும்போது வெப்பம் காற்றுடன் கலந்து, சமைக்கும் நேரத்தை அதிகப்படுத்தும். பயறு, அரிசி ஆகியவற்றை சமைப்பதற்கு முன் ஊற வைத்து சமைத்தால், சமைக்கும் நேரம் குறையும். எரிபொருள் மிச்சமாகும். குறிப்பிட்ட இடைவெளி யில் கேஸ் அடுப்பு பர்னரை சுத்தப்படுத்துவது அவசியம்.
நிதானமாக நீலநிற ஜ்வாலையுடன் கேஸ் அடுப்பு எரிந்தால், நல்ல முறையில் இருக்கிறது என்று அர்த்தம். மஞ்சள் நிற ஜ்வாலை என்றால் பர்னர் சுத்தமாக இல்லை என்று அர்த்தம். கால் கிலோ தனியாவையும் 100 கிராம் கறிவேப்பிலையையும் நன்றாக மணம் வரும் வரை வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். புளிக்குழம்பு, கூட்டு, பொரியல் செய்யும் போது 2 ஸ்பூன் அரைத்த பொடியைத் தூவினால் வாசனை தூக்கலாக இருக்கும்.
எந்த வடாம் போட்டாலும், உப்பைக் குறைவாகப் போட வேண்டும். ஏனென்றால், காய்ந்தவுடன் பொரிக்கும்போது உப்பு அதிகமாக இருக்கும்.வடகத்தில் உப்பு அதிகம் ஆகிவிட்டால், காய்ந்த வற்றலை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் வைத்து எடுத்து, மறுபடியும் வெயிலில் உலர்த்தினால் உப்பு போய்விடும். வடகம், வற்றல் செய்யும்போது சிறிது பாலை விட்டுக் கிளறினால், வெண்மையாக ‘பளிச்’சென இருக்கும்.
புளித்த தயிரை வீணாக்காமல் ஒரு கப் தயிருக்கு ஒரு கப் ரவை சேர்த்து, ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, இஞ்சி பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி தேவையான அளவு எடுத்துப் பொடியாக நறுக்கி ரவை கலவையில் சேர்த்து, வடையாகத் தட்டி, எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் சுவையான ஸ்பெஷல் வடை தயார்!
வெயில் காலத்தில் உறை ஊற்றியவுடன் ஒரு பல் தேங்காயைக் கீற்றாகக் கீறிப் போட்டால், தயிர் புளிக்காமல் இருக்கும். கீரையை நறுக்கியவுடன், உப்பு நீரில் போட்டு, சமைத்த பிறகு ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் பசுமை மாறாமல் இருக்கும்.
-
அலுமினியப் பாத்திரம் அடிப்பிடித்துவிட்டால், வெங்காயத்தை சிறுதுண்டுகளாக வெட்டி, பாத்திரத்தின் அடியில் போட்டு வைத்து, அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் அடிப்பிடித்த அடையாளமே தெரியாது. கண்ணாடிப் பாத்திரக் கறைகளில், வினிகரில் ஒரு துணியை நனைத்துத் தேய்த்து, பிறகு டேபிள் சால்ட் கொண்டு கழுவினால் கறைகள் போய்விடும்.
-
வாழைக்காயை சீவிவிட்டு, தோலைத் தூக்கி எறிய வேண்டாம். சீவும்போதே சிறிது சதைப்பற்றுடன் சீவி, அதை சிறு துண்டுகளாக நறுக்கவும். சிறிது எண்ணெயில் துண்டுகளாக்கிய தோலைப் போட்டு வதக்கவும். அதனுடன், தேவையான அளவு மிளகாய் வற்றல், உப்பு, புளி, பெருங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி அரைத்தால், தோசைக்குத் தொட்டுக் கொள்ள சுவையான வாழைக்காய் தோல் சட்னி ரெடி!
அவலை புளிநீரிலோ, மோரிலோ 2 நிமிடங்கள் ஊற வைத்து உப்புமா செய்தால் வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும். கடையில் பாம்பே ரவை வாங்கி வந்ததும், அதை வெறும் வாணலியில் பொன் நிறத்தில் வாசனை வரும் வரை வறுத்து, ஆறிய பிறகு சம்புடத்திலோ, இறுக்கமான மூடி உள்ள பாட்டிலிலோ போட்டு வைத்துவிட்டால், 3-4 மாதங்களுக்கு புழு, பூச்சி அண்டாது.
சமைக்கும் பொருள் களை குறைந்த தீயில் பாத்திரங்களில் மூடி போட்டு சமைப்பது சிக்கனம். மூடியில்லாமல் சமைக்கும்போது வெப்பம் காற்றுடன் கலந்து, சமைக்கும் நேரத்தை அதிகப்படுத்தும். பயறு, அரிசி ஆகியவற்றை சமைப்பதற்கு முன் ஊற வைத்து சமைத்தால், சமைக்கும் நேரம் குறையும். எரிபொருள் மிச்சமாகும். குறிப்பிட்ட இடைவெளி யில் கேஸ் அடுப்பு பர்னரை சுத்தப்படுத்துவது அவசியம்.
நிதானமாக நீலநிற ஜ்வாலையுடன் கேஸ் அடுப்பு எரிந்தால், நல்ல முறையில் இருக்கிறது என்று அர்த்தம். மஞ்சள் நிற ஜ்வாலை என்றால் பர்னர் சுத்தமாக இல்லை என்று அர்த்தம். கால் கிலோ தனியாவையும் 100 கிராம் கறிவேப்பிலையையும் நன்றாக மணம் வரும் வரை வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். புளிக்குழம்பு, கூட்டு, பொரியல் செய்யும் போது 2 ஸ்பூன் அரைத்த பொடியைத் தூவினால் வாசனை தூக்கலாக இருக்கும்.
எந்த வடாம் போட்டாலும், உப்பைக் குறைவாகப் போட வேண்டும். ஏனென்றால், காய்ந்தவுடன் பொரிக்கும்போது உப்பு அதிகமாக இருக்கும்.வடகத்தில் உப்பு அதிகம் ஆகிவிட்டால், காய்ந்த வற்றலை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் வைத்து எடுத்து, மறுபடியும் வெயிலில் உலர்த்தினால் உப்பு போய்விடும். வடகம், வற்றல் செய்யும்போது சிறிது பாலை விட்டுக் கிளறினால், வெண்மையாக ‘பளிச்’சென இருக்கும்.
புளித்த தயிரை வீணாக்காமல் ஒரு கப் தயிருக்கு ஒரு கப் ரவை சேர்த்து, ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, இஞ்சி பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி தேவையான அளவு எடுத்துப் பொடியாக நறுக்கி ரவை கலவையில் சேர்த்து, வடையாகத் தட்டி, எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் சுவையான ஸ்பெஷல் வடை தயார்!
வெயில் காலத்தில் உறை ஊற்றியவுடன் ஒரு பல் தேங்காயைக் கீற்றாகக் கீறிப் போட்டால், தயிர் புளிக்காமல் இருக்கும். கீரையை நறுக்கியவுடன், உப்பு நீரில் போட்டு, சமைத்த பிறகு ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் பசுமை மாறாமல் இருக்கும்.
Post a Comment