எந்த நோய்க்கு என்ன சாப்பாடு? கிக்கன் கிளினிக் !
எந்த நோய்க்கு என்ன சாப்பாடு? ...
https://pettagum.blogspot.com/2013/06/blog-post_536.html
எந்த நோய்க்கு என்ன சாப்பாடு?
என்று, உடம்போடு மாறுபடுதல் இல்லாத உணவினை அளவோடு உண்பவரது உயிர்க்கு நோயால் துன்பம் உண்டாகாது என்ற வாக்குக் கொடுக்கிறார் வள்ளுவர்.
உணவு... வாய்க்கு ருசியாக இருந்தால் மட்டும் போதுமா? உடல் நலத்துக்கு இம்சை செய்யாமல் இருக்க வேண்டும்தானே! அத்தகைய உணவு விதியை நமக்கு கற்றுத் தந்து, இனி நோய்களுக்கான மருந்து, மாத்திரையை விடுத்து, விருந்து மாத்திரை பந்திக்கு நம்மைச் சாப்பிட அழைக்கிறார் 'நளபாக சக்கரவத்தி' செஃப் ஜேக்கப் சகாய குமார்!
''உணவில் மைதா, அரிசி, சர்க்கரைங்கிற மூன்று வெள்ளைக்காரனை துரத்தினாலே ஆரோக்கியமா வாழலாம்'' என்று முத்தாய்ப்பாகச் சொல்லும் ஜேக்கப்... கோவை, சங்கரா கல்லூரியில் கேட்டரிங் டிபார்ட்மென்ட் டைரக்டராக இருக்கிறார். இவர் ஒரு சமையல் ஆராய்ச்சியாளர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஃபேர்வெல் டின்னருக்கு டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஒரு வாரம் தங்கியிருந்து இவர் படைத்த கொங்குநாட்டு விருந்து, இவருடைய திறமைக்கான அங்கீகாரம்! 2005-09-க்கான 'பெஸ்ட் யங் செஃப் இன்ஸ்ட்ரக்டர்' விருதையும் வாங்கியிருக்கும் இவர், தன் துறையில் நித்தமும் தேடலோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்!
''என்ன.. கை கழுவியாச்சா..?'' என ஆவலோடு கேட்கும் ஜேக்கப், இனி உங்களோடு...
''முதல்ல நாம பார்க்கப் போறது ஒபிஸிட்டி (obesity) எனப்படும் அதீத உடல் பருமனுக்கான உணவு வகைகள் பற்றி! பொதுவா, அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்த உணவை சாப்பிடும்போது, தேவைக்கு அதிகமான கலோரிகள் பயன்படுத்தப்படாம உடம்புல கொழுப்பா சேர்ந்து, ஒபிஸிட்டியை ஏற்படுத்திடும். இந்த உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரழிவு நோய்க்கும் வழி வகுத்துடும். அந்த நிலையில மருந்து மூலமா எடை குறைக்கறதைவிட, குறைந்த கலோரி உணவுகளும் உடற்பயிற்சியும்தான் இதற்கான சிறப்பான தீர்வா இருக்கும்.
பெரும்பாலானவங்களுக்கு காய்கறிகள்ல முட்டைகோஸ், முள்ளங்கி வாசனை பிடிக்கவே பிடிக்காது. ஆனா, இதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. அரை கிலோ கோஸ்ல 15 கலோரிகள்தான் உடல்ல சேரும். கூடவே, இது உடலுக்கு உஷ்ணத்தை கொடுத்து நீர், நார்ச்சத்து உணவுகளை அதிகமா சாப்பிட வைக்கும். கொழுப்பையும் கரைச்சுடும். அதேபோல, உடம்புல இருக்கற நச்சுத்தன்மையை முள்ளங்கி வெளியேற்றிடும். அதனால இந்தக் காய்கறிகளை உணவுல அதிகம் சேர்த்துக்கறது நல்லது'' என்கிற ஜேக்கப் உடல் பருமனைக் குறைப்பதற்கான உணவு முறைகளைத் தருகிறார்.
செய்முறை: முட்டைகோஸ், வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டுத் தண்ணீர் ஊற்றி அரை டீஸ்பூன் மிளகு, சீரகம் போட்டு, மஞ்சள்தூள், கொத்தமல்லி சேர்த்து மேலும் தண்ணீரை ஊற்றி வேகவிடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு,
அதில் மீதமுள்ள அரை டீஸ்பூன் மிளகு, சீரகம் போட்டுத் தாளித்து, சூப்பை
கொட்டி 2 கப் தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.
தண்ணீர் அதிகம் சேர்ப்பது மிகவும் நல்லது.
இதைத் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மதியம் வரை பசியே எடுக்காது. நன்றாக சிறுநீர் வெளியேறும். பொதுவாக, உடம்பில் உள்ள நீர்ச்சத்து வெளியேறினால், உடல் எடை குறையும்.
செய்முறை: சாதத்துடன் கோஸ் பொரியலை கலந்து மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி இறக்கவும். இதுதான் மதிய சாப்பாடு. இதற்கு தொட்டுக் கொள்ள அப்பளம், சிப்ஸ் என்று எதுவுமே சேர்த்துக் கொள்ளக்கூடாது.
செய்முறை: முள்ளங்கியைத் துருவி அதில் மஞ்சள்தூள், உப்பு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வும். (இதிலுள்ள வாடை போய்விடும்) பிறகு தண்ணீரை நன்றாக வடித்துவிடவும். இதில் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலந்து சப்பாத்தியின் மேல் பரவலாக போட்டு ரோல் செய்து சாப்பிடவும்.
இதுபோல் இரவில் இரண்டு சப்பாத்திகள் சாப்பிடலாம். அதற்குமேல் சாப்பிட முடியாது. மலச்சிக்கல் பிரச்னையும் இருக்காது. உடம்பும் லேசாக இருப்பதுபோல் உணரமுடியும்.''
என்ன.. மருந்துக்கு கொடுக்கும் காசை விருந்துக்குக் கொடுக்கத் தயாராகிவிட்டீர்களா..?
======================================================================
"ஒருவரின் வயதுக்குரிய நார்மல் எடையைக் காட்டிலும் 10 முதல் 20 சதவிகிதம் எடை அதிகமாக இருந்தால், அது ஓவர் வெயிட். 20 முதல் 25 சதவிகிதம் என்றால் அது, ஒபிஸிட்டி. இது, குண்டாகவும் இருக்கலாம். கொழுத்தும் போயிருக்கலாம். இது (BMI) பாடி மாஸ் இன்டெக்ஸ் (BMI = weight in Kg/ Height metre square) என்ற முறையில் கணக்கிடப்படும்.
உடலில் அதிகமாக கொழுப்புச் சேர்வதால் உடல் பருமனாகி எடை கூடிவிடும். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருத்தல், கொழுப்பு மற்றும் மொத்த கலோரிகள் அடங்கிய மிகுதியான உணவை உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால், கலோரிகள் பயன்படுத்தப்படாமல் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகின்றன. இதனால், உடலானது நோய்களின் வாசஸ்தலமாகிவிடுகிறது.
மருந்துகளைப் பயன்படுத்தி உடல் பருமனை குறைக்க முடியாது. உணவும் உடற்பயிற்சியும்தான் இதற்கு ஒரே தீர்வு. பொதுவாகவே உணவே மருந்து... மருந்தே உணவு என்பதுதான் உண்மை.
உடல் பருமன் நோய் உள்ளவர்களுக்கு கோஸ், முள்ளங்கியைச் சாப்பிடச் சொல்கிறார் செஃப். ஆனால், தைராய்டு பிரச்னை இருந்தால் கண்டிப்பாக இந்தக் காய்கறிகளைச் சேர்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக சௌசௌ, புடலங்காய், பீர்க்கங்காய் சாப்பிடலாம்."
கிக்கன் கிளினிக் ! |
புதிய பகுதி
முதுமையைக்கூட மூலிகையால் தள்ளி
வைத்து, நோயின்றி வாழ்வாங்கு வாழ்ந்தது நம் தமிழ்க்குடி! இன்றோ, பிறந்த
குழந்தை முதல்... பல் விழுந்த தாத்தா வரை பெரும்பாலானவர்கள் ஏதாவதொரு
நோயுடன்தான் ஜீவிக்கிறார்கள்!
சுண்டு விரல் வலிக்குக்கூட
ஸ்கேன் எடுப்பது ஃபேஷனாகிவிட்ட இந்த யுகத்தில், மருந்தில்லாத ஆரோக்கிய
வாழ்க்கையை, உணவு முறை மாற்றத்தால் சாத்தியப்படுத்துவதற்காகவே இந்தத்
தொடர்!'மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு'
ஊறுபாடு இல்லை உயிர்க்கு'
உணவு... வாய்க்கு ருசியாக இருந்தால் மட்டும் போதுமா? உடல் நலத்துக்கு இம்சை செய்யாமல் இருக்க வேண்டும்தானே! அத்தகைய உணவு விதியை நமக்கு கற்றுத் தந்து, இனி நோய்களுக்கான மருந்து, மாத்திரையை விடுத்து, விருந்து மாத்திரை பந்திக்கு நம்மைச் சாப்பிட அழைக்கிறார் 'நளபாக சக்கரவத்தி' செஃப் ஜேக்கப் சகாய குமார்!
''உணவில் மைதா, அரிசி, சர்க்கரைங்கிற மூன்று வெள்ளைக்காரனை துரத்தினாலே ஆரோக்கியமா வாழலாம்'' என்று முத்தாய்ப்பாகச் சொல்லும் ஜேக்கப்... கோவை, சங்கரா கல்லூரியில் கேட்டரிங் டிபார்ட்மென்ட் டைரக்டராக இருக்கிறார். இவர் ஒரு சமையல் ஆராய்ச்சியாளர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஃபேர்வெல் டின்னருக்கு டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஒரு வாரம் தங்கியிருந்து இவர் படைத்த கொங்குநாட்டு விருந்து, இவருடைய திறமைக்கான அங்கீகாரம்! 2005-09-க்கான 'பெஸ்ட் யங் செஃப் இன்ஸ்ட்ரக்டர்' விருதையும் வாங்கியிருக்கும் இவர், தன் துறையில் நித்தமும் தேடலோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்!
''என்ன.. கை கழுவியாச்சா..?'' என ஆவலோடு கேட்கும் ஜேக்கப், இனி உங்களோடு...
''முதல்ல நாம பார்க்கப் போறது ஒபிஸிட்டி (obesity) எனப்படும் அதீத உடல் பருமனுக்கான உணவு வகைகள் பற்றி! பொதுவா, அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்த உணவை சாப்பிடும்போது, தேவைக்கு அதிகமான கலோரிகள் பயன்படுத்தப்படாம உடம்புல கொழுப்பா சேர்ந்து, ஒபிஸிட்டியை ஏற்படுத்திடும். இந்த உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரழிவு நோய்க்கும் வழி வகுத்துடும். அந்த நிலையில மருந்து மூலமா எடை குறைக்கறதைவிட, குறைந்த கலோரி உணவுகளும் உடற்பயிற்சியும்தான் இதற்கான சிறப்பான தீர்வா இருக்கும்.
பெரும்பாலானவங்களுக்கு காய்கறிகள்ல முட்டைகோஸ், முள்ளங்கி வாசனை பிடிக்கவே பிடிக்காது. ஆனா, இதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. அரை கிலோ கோஸ்ல 15 கலோரிகள்தான் உடல்ல சேரும். கூடவே, இது உடலுக்கு உஷ்ணத்தை கொடுத்து நீர், நார்ச்சத்து உணவுகளை அதிகமா சாப்பிட வைக்கும். கொழுப்பையும் கரைச்சுடும். அதேபோல, உடம்புல இருக்கற நச்சுத்தன்மையை முள்ளங்கி வெளியேற்றிடும். அதனால இந்தக் காய்கறிகளை உணவுல அதிகம் சேர்த்துக்கறது நல்லது'' என்கிற ஜேக்கப் உடல் பருமனைக் குறைப்பதற்கான உணவு முறைகளைத் தருகிறார்.
காலையில்...முட்டைகோஸ் சூப்
தேவையானவை: முட்டைகோஸ் - கால்
கிலோ, பெரிய வெங்காயம் - 50 கிராம், தக்காளி - 1, இஞ்சி - 3 இன்ச், மிளகு,
சீரகம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு
டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.செய்முறை: முட்டைகோஸ், வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டுத் தண்ணீர் ஊற்றி அரை டீஸ்பூன் மிளகு, சீரகம் போட்டு, மஞ்சள்தூள், கொத்தமல்லி சேர்த்து மேலும் தண்ணீரை ஊற்றி வேகவிடவும்.
இதைத் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மதியம் வரை பசியே எடுக்காது. நன்றாக சிறுநீர் வெளியேறும். பொதுவாக, உடம்பில் உள்ள நீர்ச்சத்து வெளியேறினால், உடல் எடை குறையும்.
மதியத்துக்கு...முட்டைகோஸ் சாதம்
தேவையானவை: கோஸ் பொரியல் - 100 கிராம், வடித்த சாதம் - 100 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன். செய்முறை: சாதத்துடன் கோஸ் பொரியலை கலந்து மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி இறக்கவும். இதுதான் மதிய சாப்பாடு. இதற்கு தொட்டுக் கொள்ள அப்பளம், சிப்ஸ் என்று எதுவுமே சேர்த்துக் கொள்ளக்கூடாது.
இரவு... முள்ளங்கி சப்பாத்தி
தேவையானவை: முள்ளங்கி - 1,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன், சப்பாத்தி - 1, உப்பு - சிறிதளவு.செய்முறை: முள்ளங்கியைத் துருவி அதில் மஞ்சள்தூள், உப்பு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வும். (இதிலுள்ள வாடை போய்விடும்) பிறகு தண்ணீரை நன்றாக வடித்துவிடவும். இதில் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலந்து சப்பாத்தியின் மேல் பரவலாக போட்டு ரோல் செய்து சாப்பிடவும்.
இதுபோல் இரவில் இரண்டு சப்பாத்திகள் சாப்பிடலாம். அதற்குமேல் சாப்பிட முடியாது. மலச்சிக்கல் பிரச்னையும் இருக்காது. உடம்பும் லேசாக இருப்பதுபோல் உணரமுடியும்.''
என்ன.. மருந்துக்கு கொடுக்கும் காசை விருந்துக்குக் கொடுக்கத் தயாராகிவிட்டீர்களா..?
======================================================================
"தைராய்டு பிரச்னை இருந்தால் கோஸ்-முள்ளங்கி வேண்டாம் !"
செஃப்
ஜேக்கப் சொல்லும் மருந்து ரெசிபி பற்றி சென்னை, விஜயா மருத்துவமனையின்
பதிவுபெற்ற சீனியர் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தியின் சின்ன அலசல்!
"ஒருவரின் வயதுக்குரிய நார்மல் எடையைக் காட்டிலும் 10 முதல் 20 சதவிகிதம் எடை அதிகமாக இருந்தால், அது ஓவர் வெயிட். 20 முதல் 25 சதவிகிதம் என்றால் அது, ஒபிஸிட்டி. இது, குண்டாகவும் இருக்கலாம். கொழுத்தும் போயிருக்கலாம். இது (BMI) பாடி மாஸ் இன்டெக்ஸ் (BMI = weight in Kg/ Height metre square) என்ற முறையில் கணக்கிடப்படும்.
உடலில் அதிகமாக கொழுப்புச் சேர்வதால் உடல் பருமனாகி எடை கூடிவிடும். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருத்தல், கொழுப்பு மற்றும் மொத்த கலோரிகள் அடங்கிய மிகுதியான உணவை உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால், கலோரிகள் பயன்படுத்தப்படாமல் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகின்றன. இதனால், உடலானது நோய்களின் வாசஸ்தலமாகிவிடுகிறது.
மருந்துகளைப் பயன்படுத்தி உடல் பருமனை குறைக்க முடியாது. உணவும் உடற்பயிற்சியும்தான் இதற்கு ஒரே தீர்வு. பொதுவாகவே உணவே மருந்து... மருந்தே உணவு என்பதுதான் உண்மை.
உடல் பருமன் நோய் உள்ளவர்களுக்கு கோஸ், முள்ளங்கியைச் சாப்பிடச் சொல்கிறார் செஃப். ஆனால், தைராய்டு பிரச்னை இருந்தால் கண்டிப்பாக இந்தக் காய்கறிகளைச் சேர்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக சௌசௌ, புடலங்காய், பீர்க்கங்காய் சாப்பிடலாம்."
1 comment
புதிய பகுதி நல்ல ஆரம்பம்... பயனுள்ள குறிப்புகள்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
Post a Comment