டிப்ஸ்...டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள்,
டிப்ஸ்...டிப்ஸ்.... ...
https://pettagum.blogspot.com/2013/06/blog-post_28.html
டிப்ஸ்...டிப்ஸ்....
சப்பாத்தி,
பூரிக்கு மாவு பிசைந்ததும் தனித்தனி உருண்டைகளாக செய்ய அதிக நேரம்
பிடிக்கும். மாவைப் பிசைந்ததும், நீண்ட உருளை போல் செய்து, உலர்ந்த மாவில்
புரட்டுங்கள். பிறகு, கத்தியால் சம இடைவெளி விட்டு வெட்டினால் வேலை
சீக்கிரத்தில் முடிந்துவிடும். சப்பாத்திகளும் சம அளவிலானதாக இருக்கும்.
==========================================================================
தேங்காய் துவையல், சட்னி போன்றவை கெட்டுப் போகாமல் இருக்க புளி சேர்ப்பது வழக்கம். புளிக்குப் பதிலாக தெளிவான ரசத்தை விட்டு அரைத்தால் டேஸ்ட்டும் வித்தியாசமாக இருக்கும்.
==========================================================================
வெண்டைக்காயை பொரியல் செய்யும்போது, கொழகொழப்புடன் இருப்பது சிலருக்கு பிடிக்காமல் போகும். ஒரு தக்காளியைத் துண்டுகளாக்கி சேர்த்து வதக்கிப் பாருங்கள்... வெண்டை பொரியல் பொலபொலப்புடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
===========================================================
பால் சேர்த்து செய்யும் பாயசம் 'திக்'காக இருக்க வேண்டுமா? பாலை அப்படியே சேர்க்காமல், மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி நுரையுடன் சேருங்கள். பாயசம் 'திக்'காக இருக்கும். இதனுடன் இரண்டு டீஸ்பூன் Ôகண்டன்ஸ்டு மில்க்Õ அரைத்துச் சேர்த்தால் டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
- ===========================================================
எள்ளுருண்டை செய்வதற்கு முன் எள்ளை தண்ணீரில் அலசினால் கையில் ஒட்டிக் கொண்டு பாடாய் படுத்தி எடுத்துவிடும். பெரிய ஓட்டை உள்ள சல்லடை அல்லது வடிகட்டியில் எள்ளைப் போட்டு தண்ணீருக்குள் அமிழ்த்தி எடுத்தால் எளிதாக அலசி விடலாம்.
============================================================
பாத்திரம்
துலக்குவதற்கு உப்புத் தண்ணீர்தான் கிடைக்கிறது என்றால், என்னதான்
க்ளீனிங் பவுடர் அல்லது 'லிக்விட்' உபயோகித்தாலும் நுரையே வராது. இதனால்
பாத்திரத்தை கழுவிய திருப்தியும் இருக்காது. க்ளீனிங் பவுடர் (அ) லிக்விடை
சிறிது நல்ல தண்ணீரில் கரைத்து பாத்திரத்தைத் துலக்குங்கள். நன்றாக நுரை
வருவதுடன் பாத்திரம் பளிச்சென பிரகாசிக்கும்.
=========================================================================
பீங்கான் தட்டுகள், கண்ணாடி பொருட்கள் போன்றவற்றை வரிசையாக அடுக்கும்போது கீறல் விழாமல் இருக்க, ஒவ்வொரு தட்டின் இடையிலும் டிஷ்யூ பேப்பரை வைத்து விடுங்கள். ஒன்றோடு ஒன்று உராயாமல் தட்டுகள் பாதுகாப்பாக இருக்கும்.
=========================================================================
தக்காளி குருமா, ரசம், கிரேவி போன்றவற்றைத் தயாரிக்க, தக்காளி விழுதுக்கு மிக்ஸியை பயன்படுத்தாமல், கேரட் துருவியைக் கொண்டு தக்காளியை மெதுவாக தேயுங்கள். விழுதுகள் எளிதாக கிடைத்துவிடும். தோலையும் தூக்கி எறிந்து விடலாம்.
தேங்காய் துவையல், சட்னி போன்றவை கெட்டுப் போகாமல் இருக்க புளி சேர்ப்பது வழக்கம். புளிக்குப் பதிலாக தெளிவான ரசத்தை விட்டு அரைத்தால் டேஸ்ட்டும் வித்தியாசமாக இருக்கும்.
==========================================================================
வெண்டைக்காயை பொரியல் செய்யும்போது, கொழகொழப்புடன் இருப்பது சிலருக்கு பிடிக்காமல் போகும். ஒரு தக்காளியைத் துண்டுகளாக்கி சேர்த்து வதக்கிப் பாருங்கள்... வெண்டை பொரியல் பொலபொலப்புடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
===========================================================
பால் சேர்த்து செய்யும் பாயசம் 'திக்'காக இருக்க வேண்டுமா? பாலை அப்படியே சேர்க்காமல், மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி நுரையுடன் சேருங்கள். பாயசம் 'திக்'காக இருக்கும். இதனுடன் இரண்டு டீஸ்பூன் Ôகண்டன்ஸ்டு மில்க்Õ அரைத்துச் சேர்த்தால் டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
- ===========================================================
எள்ளுருண்டை செய்வதற்கு முன் எள்ளை தண்ணீரில் அலசினால் கையில் ஒட்டிக் கொண்டு பாடாய் படுத்தி எடுத்துவிடும். பெரிய ஓட்டை உள்ள சல்லடை அல்லது வடிகட்டியில் எள்ளைப் போட்டு தண்ணீருக்குள் அமிழ்த்தி எடுத்தால் எளிதாக அலசி விடலாம்.
============================================================
=========================================================================
பீங்கான் தட்டுகள், கண்ணாடி பொருட்கள் போன்றவற்றை வரிசையாக அடுக்கும்போது கீறல் விழாமல் இருக்க, ஒவ்வொரு தட்டின் இடையிலும் டிஷ்யூ பேப்பரை வைத்து விடுங்கள். ஒன்றோடு ஒன்று உராயாமல் தட்டுகள் பாதுகாப்பாக இருக்கும்.
=========================================================================
தக்காளி குருமா, ரசம், கிரேவி போன்றவற்றைத் தயாரிக்க, தக்காளி விழுதுக்கு மிக்ஸியை பயன்படுத்தாமல், கேரட் துருவியைக் கொண்டு தக்காளியை மெதுவாக தேயுங்கள். விழுதுகள் எளிதாக கிடைத்துவிடும். தோலையும் தூக்கி எறிந்து விடலாம்.
Post a Comment