கோடைக் காலத்துல தாகத்தைத் தணிக்க.......சமையல் குறிப்புகள்,
கோடைக் காலத்துல தாகத்தைத் தணிக்க நிறைய சங்கதி நம்மகிட்ட இருக்கு. சித்திரை மாசத்துல, தேர்த் திருவிழா நிறைய நடக்கும். அப்போ, தேர் இழுத்துக்...
https://pettagum.blogspot.com/2013/05/blog-post_6779.html
கோடைக் காலத்துல தாகத்தைத் தணிக்க நிறைய சங்கதி நம்மகிட்ட இருக்கு.
சித்திரை மாசத்துல, தேர்த் திருவிழா நிறைய நடக்கும். அப்போ, தேர்
இழுத்துக்கிட்டு வர்றவங்களுக்கு, வீடுங்கதோறும் பானகம் தயார் பண்ணிக்
கொடுப்பாங்க. இந்தப் பானகத்தைக் குடிச்சா... தாகமும் அடங்கும்.
நீர்க்கடுப்பும் வராது. தேர் இழுத்துக்கிட்டு வர்றவங்க உடம்பும் உற்சாகமா
இருக்கும். புளியை நெல்லிக்காய் அளவு எடுத்துக்குங்க. வெல்லம் ஒரு
கைப்பிடி, சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை அளவுல
எடுத்துக்கலாம். புளியையும், வெல்லத்தையும் தண்ணியில கரைச்சி, வடிகட்டி
அடுப்புல ஒரு கொதிவிட்டு இறக்கிடலாம். அடுத்து, ஏலக்காய்த்தூள்,
சுக்குத்தூளையும் தூவி விட்டு, நல்லா கலக்கினா... பானகம் தயார். திருவிழா
நேரம் மட்டுமில்லீங்க, மத்த நேரத்தலயும்கூட இந்தப் பானகத்தைக் குடிச்சி,
உடம்பைத் தெம்பாக்கலாம்.
Post a Comment