பிரணாயாமம் -- உடற்பயிற்சி,
மூச்சை மிகச்சரியான முறையில் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் நீண்டகாலம் உயிருடன், ஆரோக்கியமாக வாழ முடியும். மிகச்சிறந்த சுவாச பயிற்சிகள் மூலம் எண்...
https://pettagum.blogspot.com/2013/04/blog-post_3.html
மூச்சை மிகச்சரியான முறையில் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் நீண்டகாலம் உயிருடன், ஆரோக்கியமாக வாழ முடியும். மிகச்சிறந்த சுவாச
பயிற்சிகள் மூலம் எண்ணிலடங்கா சித்திகளை கூட பெற முடியும் என்கிறார்கள் ரிஷிகள்
மூச்சு பயிற்சியின் மூலம் ரத்தத்தில் இருக்கும் அசுத்தங்கள் களையப்பட்டு விடுவதால் தூயரத்தம் மிகத்தூய்மையான உயிர்காற்றான
பிராணவாயுவை சுமந்து சென்று உடலின் நுண்ணிய உறுப்புகளுக்கு உணவாக தருகிறது.
மனிதனின் மூளை அதன் சக்தியில் வெறும் 4 சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்துவதாக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். உடலுக்கு ஆதாரமான உயிர்க்காற்றை காற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தி உடலையும், ஆன்மாவையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி பிராணனைக் கட்டுப்படுத்தும் பிராணயாமம் கூறுகின்றது.
மூச்சுப் பயிற்சி பயிலும் ஒருவர், பத்மாசனத்தில் அமர்ந்து, வலது நாசித்துவாரத்தை இடது கை மோதிர விரலால் மூடி, இடது நாசித்துவரத்தின் வழியாக சீராக மூச்சினை உள்ளிழுக்கவேண்டும். அவ்வாறு உள்ளிழுத்த சுவாசக் காற்றினை எவ்வளவு நேரம் நெஞ்சினுள் நிறுத்த முடியுமோ, அவ்வளவு நேரம் நிறுத்திய பின்னர் இடது கை கட்டை விரலால் இடது நாசிதுவாரத்தை மூடிக் கொண்டு, வலது நாசித் துவாரத்தின் வழியாக மெதுவாகும், ஒரே சீராகவும் வெளியிடுதல் வேண்டும்.
பின்னர் இடது நாசிதுவாரத்தை மூடி வலது நாசி துவாரத்தின் வழியே சீராக மூச்சினை உள்ளிழுத்து, நிலை நிறுத்திய பின்னர், வலது நாசி துவாரத்தின் வழியே சீராக மூச்சினை வெளியிட வேண்டும். இவ்வாறு செய்வது ஒரு சுழற்சியாகும்.
இவ்வாறு இடது நாசி வழியாக உள்ளிழுக்கும் சுவாசம் பதினாறு மத்திரைகால அளவும், உள் நிலை நிறுத்தும் கால அளவு அறுபத்தி நான்கு மாத்திரை கால அளவும், வலது நாசிவழியாக வெளிவிடும் சுவாசகால அளவு முப்பத்திரெண்டு மாத்திரை கால அளவும் இருக்க வேண்டும்.
இதனைபோலவே வலது நாசி துவாரத்தில் ஆரம்பித்து இடது நாசி துவாரத்தில் வெளியிட வேண்டும், மீண்டும் சுழற்சியினை தொடரவேண்டும். இவ்விதம் மூச்சுப் பயிற்சி ஒரு நாளில் நான்கு முறை சூரியஉதயம், மதியம், சூரிய அஸ்தமனம், நடு இரவு ஆக என்பது எண்ணிக்கை வரையில் செய்யவேண்டும்.
தொடர் பயிற்சியின் விளைவாக மூன்று மாதங்களில் நாடி சுத்தி நடைபெற ஆரம்பிக்கும். இவ்வாறு நாடி சுத்தம் அடைந்தால் யோகம் செய்பவரின் உடலின் தோற்றத்தினில் மாறுதல்கள் ஏற்படத் துவங்கும்.
மனிதனின் மூளை அதன் சக்தியில் வெறும் 4 சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்துவதாக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். உடலுக்கு ஆதாரமான உயிர்க்காற்றை காற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தி உடலையும், ஆன்மாவையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி பிராணனைக் கட்டுப்படுத்தும் பிராணயாமம் கூறுகின்றது.
மூச்சுப் பயிற்சி பயிலும் ஒருவர், பத்மாசனத்தில் அமர்ந்து, வலது நாசித்துவாரத்தை இடது கை மோதிர விரலால் மூடி, இடது நாசித்துவரத்தின் வழியாக சீராக மூச்சினை உள்ளிழுக்கவேண்டும். அவ்வாறு உள்ளிழுத்த சுவாசக் காற்றினை எவ்வளவு நேரம் நெஞ்சினுள் நிறுத்த முடியுமோ, அவ்வளவு நேரம் நிறுத்திய பின்னர் இடது கை கட்டை விரலால் இடது நாசிதுவாரத்தை மூடிக் கொண்டு, வலது நாசித் துவாரத்தின் வழியாக மெதுவாகும், ஒரே சீராகவும் வெளியிடுதல் வேண்டும்.
பின்னர் இடது நாசிதுவாரத்தை மூடி வலது நாசி துவாரத்தின் வழியே சீராக மூச்சினை உள்ளிழுத்து, நிலை நிறுத்திய பின்னர், வலது நாசி துவாரத்தின் வழியே சீராக மூச்சினை வெளியிட வேண்டும். இவ்வாறு செய்வது ஒரு சுழற்சியாகும்.
இவ்வாறு இடது நாசி வழியாக உள்ளிழுக்கும் சுவாசம் பதினாறு மத்திரைகால அளவும், உள் நிலை நிறுத்தும் கால அளவு அறுபத்தி நான்கு மாத்திரை கால அளவும், வலது நாசிவழியாக வெளிவிடும் சுவாசகால அளவு முப்பத்திரெண்டு மாத்திரை கால அளவும் இருக்க வேண்டும்.
இதனைபோலவே வலது நாசி துவாரத்தில் ஆரம்பித்து இடது நாசி துவாரத்தில் வெளியிட வேண்டும், மீண்டும் சுழற்சியினை தொடரவேண்டும். இவ்விதம் மூச்சுப் பயிற்சி ஒரு நாளில் நான்கு முறை சூரியஉதயம், மதியம், சூரிய அஸ்தமனம், நடு இரவு ஆக என்பது எண்ணிக்கை வரையில் செய்யவேண்டும்.
தொடர் பயிற்சியின் விளைவாக மூன்று மாதங்களில் நாடி சுத்தி நடைபெற ஆரம்பிக்கும். இவ்வாறு நாடி சுத்தம் அடைந்தால் யோகம் செய்பவரின் உடலின் தோற்றத்தினில் மாறுதல்கள் ஏற்படத் துவங்கும்.
Post a Comment