ஐயோ பிரெட்...!உபயோகமான தகவல்கள்,
ஐயோ பிரெட்...! பினாங்கு பயனீட் டாளர் சங்கம்... மலேசியா நாட்டில் உள்ள பிரபலமான நுகர்வோர் அமைப்பு. சினிமா ஆபாசம் முதல், அடுப்பங்கரை உப்பு...
https://pettagum.blogspot.com/2012/11/blog-post_8629.html
ஐயோ பிரெட்...!
பினாங்கு பயனீட் டாளர் சங்கம்... மலேசியா நாட்டில் உள்ள பிரபலமான நுகர்வோர் அமைப்பு. சினிமா ஆபாசம் முதல், அடுப்பங்கரை உப்பு வரை... இவர்கள் போராட்டத்தில் இடம் பிடிக்காத விஷயங்களே இல்லை. இதற்காகவே உலக அளவிலான தமிழர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்த அமைப்பு, உணவு மற்றும் உணவுப் பொருட்கள் விஷயத்தில் நடக்கும் தில்லுமுல்லு களை, அம்பலப்படுத்தி வருவது... அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தவறுவதில்லை!
மலாய், சீனர், இந்தியர்... என மூன்று பிரிவு மக்கள் மத்தியிலும் ஏக மரியாதையுடன் இருக்கும் இந்த சங்கத்தின் கல்விப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ். அவரைச் சந்தித்தபோது, தாங்கள் உணவுப் பொருள்களை கையில் எடுத்து போராட ஆரம்பித்திருப்பது பற்றி விரிவாகவே பேசினார்.
''மக்கள்... உலக விஷயம் முதல் உள்ளூர் செய்திகள் வரை அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், உண்ணும் உணவில் என்ன உள்ளது என்கிற விழிப்பு உணர்வு குறைவாகவே உள்ளது. பாரம்பரியமிக்க தமிழ்ப் பண்பாட்டை மறந்து... மேலைநாட்டு மோகத்தில் திளைக்கிறார்கள். அதை திசைதிருப்பி தமிழர்களின் உணவு வகைகளான சிறுதானியங்கள் பற்றி நிறைய பிரசாரம் செய்து வருகிறோம்'' என்ற சுப்பாராவ், 'பிரெட்’ என்று சொல்லப்படும் வெள்ளை ரொட்டி பற்றி சொன்ன தகவல்கள் அதிர்ச்சி ரகம்.
''வெள்ளைக்காரர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் வெள்ளை ரொட்டி மறக்க முடியாத, மறுக்க முடியாத அன்றாட உணவாகிவிட்டது. ஆனால், 'வெள்ளை ரொட்டி உடலுக்குக் கேடு' என்பதுதான் உண்மை. இதைப் பற்றித்தான் உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் ஒருமித்த குரலில் பிரசாரம் நடக்கிறது. இதன் ஆபத்தை உணர்ந்துள்ள சுவீடன் நாடு, வெள்ளை ரொட்டியை விலை கொடுத்து வாங்குபவர்களுக்கு, கூடுதல் வரி விதிக்கிறது. கோதுமையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ரொட்டியைத்தான் பயன்படுத்தச் சொல்கிறது அந்த அரசாங்கம். இதன் விலை, அனைவரும் வாங்கும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக, வெள்ளை ரொட்டி மூலமாக வசூலிக்கப்படும் கூடுதல் வரித்தொகையை, கோதுமை ரொட்டி தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கு வழங்குகிறது.
ரொட்டியில் அதன் இயற்கையான வைட்டமின்தான் இருக்க வேண்டும். ஆனால், வெள்ளை ரொட்டியில் இருப்பது செயற்கை வைட்டமின்கள்தான். அதனால்தான் அதை 'செத்த’ ரொட்டி என்றே உலக அளவில் அழைக்கிறார்கள். வெள்ளை ரொட்டி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மாவை, ரசாயனத்தின் துணைகொண்டு வெளுப் பாக்குகிறார்கள். அதைச் சாப்பிடும்போது, ரசாயனத்தின் எச்சங்களையும் சேர்த்தே சாப்பிடுகிறோம். வெள்ளை ரொட்டியில் செயற்கை வைட்டமின்களை பயன்படுத்துவதற்கு கனடா அரசாங்கம் தடைவிதித்துள்ளதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்'' என்றார் சுப்பாராவ் அழுத்தம் கொடுத்து!
அடுத்து உப்பினால் விளையும் தீமைகளையும், அதைத் தவிர்க்கும் வழிமுறைகளையும் பேசினார்... பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அலுவலர் சரஸ்வதி, ''நம் ஊரில், 'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்று சொல்லி வைத் திருப்பதை, தவறாக புரிந்து கொண்டு, அளவுக்கு அதிகமாக உப்பை பயன்படுத்துகிறார்கள் நம் மக்கள். அதனால்தான் ஏராளமான நோய்களை விலை கொடுத்து வாங்குகிறோம். அதைப்பற்றி பேசுவதைவிட, உப்புக்கு மாற்றாக என்ன செய் யலாம் என்பதைத்தான் பிரசாரம் செய்கிறோம்.
உப்பைச் சேர்ப்பதற்குப் பதிலாக... தாளிப்புப் பொருட்களை கூடுதலாகச் சேர்த்து சுவையைக் கூட்ட முடியும். வெங்காயம், இஞ்சி, பூண்டு, கடுகு, மிளகு, மஞ்சள், மிளகாய், கறிவேப்பிலை, பட்டை, புதினா, சீரகம் என்று உணவுக்குச் சுவையூட்டும் மூலிகைகள் ஏராளமாக நம்மிடம் உள்ளன. அவற்றையெல்லாம் பயன்படுத்தினாலே சுவை கிடைத்துவிடும். ஊறுகாய் தயாரிக்க, உணவுப் பொருட்களைப் பதப்படுத்த... உப்பைத்தான் பிரதானமாக பயன்படுத்துகிறார்கள். அதைவிட எலுமிச்சைச் சாற்றை பயன்படுத்தலாம். புளிப்புச் சுவைக்கு புளி, அன்னாசி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இறைச்சி, சூப், காய்கறிகள் சமைக்கும்போது, முதலிலேயே உப்பு போடுவதுதான் வழக்கமாக இருக்கிறது. இதைவிட, சமையலின் முடிவில் உப்பு சேர்த்தால், அதன் அளவை குறைக்க முடியும்'' என்று சமையல் டிப்ஸ் கொடுத்தார்.
கூடவே, ''இந்த நேரத்தில் இனிப்பான, உணவின் கசப்பான வேலையைப் பற்றியும் முக்கியமாக பதிவு செய்தாக வேண்டும். அதாவது, சீனி (வெள்ளை சர்க்கரை) மனிதர்களால் மிகப்பரவலாக உட்கொள்ளப்படுகிறது. இது மிகுந்த அபாயகரமான உணவு... ஊட்டச் சத்தில்லாத உணவு என்பதுதான் உண்மை. சீனி நமக்கு தேவையே இல்லாத ஒரு பொருள். உடலுக்குச் சக்தி தேவைப்படும் போது நாம் உண்ணும் பல உணவுகளை, நமது உடல் குளூக்கோஸாக மாற்றி எடுத்துக் கொண்டுவிடும். கூடவே சீனியையும் பயன்படுத்தும்போது, அது கூடுதல் கலோரியைக் கொடுக்கும். இது பயன்படுத்தப்படாத நிலையில், கொழுப்பாக சேமிக்கப்பட்டு, தேவையில்லாத பல பிரச்னைகளுக்கு வழியை ஏற்படுத்தும்.
புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டுக் கோளாறு, உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சரும வியாதிகள், விரைவில் முதுமை, பித்தக்கல், ஈரல் மற்றும் சீறுநீரகக் கோளாறு, பெண்ணுறுப்பு தொற்றுநோய், சொத்தைப்பல், மிகை சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் நீரிழிவு நோய் என பலவற்றுடன் சீனி அதிக தொடர்பு கொண்டிருக்கிறது. உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் இது பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அதனால், சீனிக்கு மாற்றாக கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை, வெல்லம், கல்கண்டு... போன்றவற்றை பயன்படுத்த சொல்லி வருகிறோம்'' என்று சொன்னார் சரஸ்வதி.
நிறைவாக பேசிய பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர், எஸ்.எம். முகம்மது இத்ரிஸ், ''உணவுப் பொருட்களில் உள்ள தீமைகள் பற்றி நாங்கள் பேசும்போது, எதிர்ப்பு கிளம்பும். சில கம்பெனிகள் வக்கீல் நோட்டீஸ்கூட அனுப்பு வார்கள். ஏன் அந்த உணவை எதிர்க்கிறோம் என்று, முறையான ஆராய்ச்சி அறிக்கையை கொடுப்போம். அதன்பிறகு மௌனமாகி விடுவார்கள்.
நம் முன்னோர்கள் 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்று வாழ்ந்தார்கள். தாயக மக்களும் சரி... கடல், கடந்து வாழும் எங்கள் மக்களும் சரி... அதையெல்லாம் மறந்துவிட்டார்கள். இங்கே அதையெல்லாம் மீண்டும் நினைவுபடுத்தி, மக்களின் மனங்களில் மாற்றங்களை கொண்டு வரும் வேலையைத்தான் செய்து வருகிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம்'' என்றார் உற்சாகத் துடன்.
''மக்கள்... உலக விஷயம் முதல் உள்ளூர் செய்திகள் வரை அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், உண்ணும் உணவில் என்ன உள்ளது என்கிற விழிப்பு உணர்வு குறைவாகவே உள்ளது. பாரம்பரியமிக்க தமிழ்ப் பண்பாட்டை மறந்து... மேலைநாட்டு மோகத்தில் திளைக்கிறார்கள். அதை திசைதிருப்பி தமிழர்களின் உணவு வகைகளான சிறுதானியங்கள் பற்றி நிறைய பிரசாரம் செய்து வருகிறோம்'' என்ற சுப்பாராவ், 'பிரெட்’ என்று சொல்லப்படும் வெள்ளை ரொட்டி பற்றி சொன்ன தகவல்கள் அதிர்ச்சி ரகம்.
ரொட்டியில் அதன் இயற்கையான வைட்டமின்தான் இருக்க வேண்டும். ஆனால், வெள்ளை ரொட்டியில் இருப்பது செயற்கை வைட்டமின்கள்தான். அதனால்தான் அதை 'செத்த’ ரொட்டி என்றே உலக அளவில் அழைக்கிறார்கள். வெள்ளை ரொட்டி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மாவை, ரசாயனத்தின் துணைகொண்டு வெளுப் பாக்குகிறார்கள். அதைச் சாப்பிடும்போது, ரசாயனத்தின் எச்சங்களையும் சேர்த்தே சாப்பிடுகிறோம். வெள்ளை ரொட்டியில் செயற்கை வைட்டமின்களை பயன்படுத்துவதற்கு கனடா அரசாங்கம் தடைவிதித்துள்ளதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்'' என்றார் சுப்பாராவ் அழுத்தம் கொடுத்து!
உப்பைச் சேர்ப்பதற்குப் பதிலாக... தாளிப்புப் பொருட்களை கூடுதலாகச் சேர்த்து சுவையைக் கூட்ட முடியும். வெங்காயம், இஞ்சி, பூண்டு, கடுகு, மிளகு, மஞ்சள், மிளகாய், கறிவேப்பிலை, பட்டை, புதினா, சீரகம் என்று உணவுக்குச் சுவையூட்டும் மூலிகைகள் ஏராளமாக நம்மிடம் உள்ளன. அவற்றையெல்லாம் பயன்படுத்தினாலே சுவை கிடைத்துவிடும். ஊறுகாய் தயாரிக்க, உணவுப் பொருட்களைப் பதப்படுத்த... உப்பைத்தான் பிரதானமாக பயன்படுத்துகிறார்கள். அதைவிட எலுமிச்சைச் சாற்றை பயன்படுத்தலாம். புளிப்புச் சுவைக்கு புளி, அன்னாசி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இறைச்சி, சூப், காய்கறிகள் சமைக்கும்போது, முதலிலேயே உப்பு போடுவதுதான் வழக்கமாக இருக்கிறது. இதைவிட, சமையலின் முடிவில் உப்பு சேர்த்தால், அதன் அளவை குறைக்க முடியும்'' என்று சமையல் டிப்ஸ் கொடுத்தார்.
நிறைவாக பேசிய பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர், எஸ்.எம். முகம்மது இத்ரிஸ், ''உணவுப் பொருட்களில் உள்ள தீமைகள் பற்றி நாங்கள் பேசும்போது, எதிர்ப்பு கிளம்பும். சில கம்பெனிகள் வக்கீல் நோட்டீஸ்கூட அனுப்பு வார்கள். ஏன் அந்த உணவை எதிர்க்கிறோம் என்று, முறையான ஆராய்ச்சி அறிக்கையை கொடுப்போம். அதன்பிறகு மௌனமாகி விடுவார்கள்.
Post a Comment