கேழ்வரகு இனிப்பு அடை --- சமையல் குறிப்புகள்,
கேழ்வரகு உடலுக்கு மிகவும் சிறந்தது. அதனை கூழ், அடை, புட்டு செய்து சாப்பிடலாம். அந்த வகையில் இனிப்பு பிரியர்களுக்காக சுவையான ...
https://pettagum.blogspot.com/2012/11/blog-post_8236.html
கேழ்வரகு உடலுக்கு மிகவும் சிறந்தது. அதனை கூழ், அடை, புட்டு செய்து சாப்பிடலாம். அந்த வகையில் இனிப்பு பிரியர்களுக்காக சுவையான கேழ்வரகு இனிப்பு அடை செய்வதற்கான சமையல் குறிப்பு இது.
தேவையான பொருட்கள்
- கேழ்வரகு மாவு - 1 கப் (ராகி மாவு)
- வெல்லம் - 1/2 கப்
- துறுவிய தேங்காய் – 1/4 கப்
- ஏலக்காய் பொடி
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
- வெல்லத்தை உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு கரண்டி அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
- வெல்லம் முழுவதும் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
- வடிகட்டிய வெல்லக் கரைசலோடு துறுவிய தேங்காய், ஏலக்காய் பொடி, கேழ்வரகு மாவு சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிவிடவும்.
- உதிரியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
- சிறிய எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி வாழையிலையில் எண்ணெய் தடவி மெல்லிய வடைகளாகத் தட்டி சூடான தோசைக்கல்லில் நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
- கேழ்வரகு மாவு நன்கு வேக வேண்டும். எனவே சிறுந்தீயில் நன்கு வேகவைத்து எடுக்கவும்.
- சூடான, சுவையான, உடலுக்கு ஏற்ற இனிப்பு அடை தயார். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
Post a Comment