மசாலா காராமணி --- சமையல் குறிப்புகள்,
பயறு வகைகள் மிகவும் சத்து நிறைந்த ஒன்றாகும். தற்காலம் நவ நாகரீக உணவு முறையில் அவை பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருகிறது. பயறு வகைகளி...
https://pettagum.blogspot.com/2012/11/blog-post_4778.html
பயறு வகைகள் மிகவும் சத்து நிறைந்த ஒன்றாகும். தற்காலம் நவ நாகரீக உணவு
முறையில் அவை பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருகிறது. பயறு வகைகளில்
காராமணி அல்லது பெரும்பயறு -ஐ கொண்டு செய்யப்படும் மசாலா காராமணியின்
செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது கேரளாவில் " பயறு கறி" என
கூறுவார்கள்.
தேவையான பொருட்கள்
1. காராமணி ( சிகப்பு) - 1 கப்.
2. தேங்காய் பூ - 1/4 கப்.
3. சிறிய வெங்காயம் - 3
( சாம்பார் வெங்காயம்)
4. இஞ்சி - 1 சிறிய துண்டு.
5. பூண்டு - 2 பல் ( flakes)
6. பச்சை மிளகாய் - 1
7. மஞ்சள் பொடி - 1/2 டீ ஸ்பூன்.
8. மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்.
9. எண்ணை - 1 டீ ஸ்பூன்.
10. கறி வேப்பிலை.
11. உப்பு - தேவையானது.
செய்முறை
காராமணியை நன்றாக சுத்தம் செய்துவிட்டு 1 மணி நேரம் தண்ணீரில் ஊற
வைக்கவும். அதன் பின் தண்ணீரை கொட்டிவிட்டு, காராமணியை குக்கரினுள் தேவையான
தண்ணீரை சேர்த்து அதன் பின் சிறிது ( தேவையானது) உப்பை போட்டு
வேகவைக்கவும். பின் இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு இவற்றை
அரைத்துக்கொள்ளவும். சிறிய வெங்காயத்தை சிறிய துண்டுகளாக
வெட்டிக்கொள்ளவும். வானலி அல்லது பேன் -ஐ அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி
சூடு செய்யவும். அரைத்த இஞ்சி, பச்சமிளகாய், பூண்டு, வெட்டப்பட்ட வெங்காயம்
இவற்றை அதில் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி,
தேங்காய் பூ இவற்ரையும் போட்டு வதக்கவும். பிறகு குக்கரில் வேகவைத்த
காராமணியை அதில் போட்டு கிளறி விடவும். இப்பொழுது மசாலா காராமணி ரெடி!.
Post a Comment