அனுபவம் பேசட்டும்!---ஹெல்த் ஸ்பெஷல்,
அனுபவம் பேசட்டும்! ஐந்தே ரூபாய்... 'அடடே’ தீர்வு! எனக்குத் தலைமுடி மிகவும் அடர்த்தி. சமீபத்தில் லேசாக அரிப்பு. சீப்பினால் நன்ற...
https://pettagum.blogspot.com/2012/10/blog-post_5563.html
அனுபவம் பேசட்டும்!
எனக்குத் தலைமுடி மிகவும் அடர்த்தி. சமீபத்தில் லேசாக அரிப்பு. சீப்பினால் நன்றாக வாரும்போது சுகமாக இருக்கும். ஆனால், அரித்த இடத்தில் லேசாக நீர்க் கசிவு ஏற்பட்டது. அது அப்படியே உலர்ந்து பொருக்குபோல் தலையில் படிந்துவிட்டது. அடுத்த நாள் தலையைச் சீவும்போது சீப்பில் தலைமுடியுடன் பொருக்கும் சேர்ந்து வரும். இதனால், தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கியது. எத்தனையோ டாக்டர்களைப் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. ஒருமுறை என் சொந்த ஊருக்குச் சென்றபோது என் தலையின் நிலையைப் பார்த்த ஒருவர், 'நாட்டு மருந்துக் கடையில், நீராடி முத்தும் பருப்புக் கந்தகமும் கிடைக்கும். வாங்கி அம்மியில் பொடித்து நல்லெண்ணெயில் கலந்து தலையில் பரவலாகத் தடவி நன்றாக ஊறவைத்து, தலைக்குக் குளித்தால் சரியாகிவிடும்’ என்றார். அவர் சொன்னதைக் கடைப்பிடித்தேன். ஒரே வாரத்தில் அரிப்பும் பொருக்கும் அறவே போய்விட்டது. ஆயிரக்கணக்கில் செலவழித்தும் குணமாகாத 'தலை’யாய பிரச்னையை ஐந்தே ரூபாயில் கை வைத்தியம் குணமாக்கிவிட்டது!
Post a Comment