காய்கறி வாங்கும் போது...வீட்டுக்குறிப்புக்கள்,
சில விஷயங்கள் நமக்கு நன்கு தெரிந்திருந்தாலும், சில சமயம் அஜாக்கிரதையாக நடந்து கொள்கிறோம். அதில், காய்கறிகள் வாங்குவதும் ஒன்று. கடையில் வா...
https://pettagum.blogspot.com/2012/09/blog-post_2120.html
சில விஷயங்கள் நமக்கு நன்கு தெரிந்திருந்தாலும், சில சமயம் அஜாக்கிரதையாக நடந்து கொள்கிறோம். அதில், காய்கறிகள் வாங்குவதும் ஒன்று. கடையில் வாங்கும்போது கடைக்காரன் கொடுப்பதை கண் மூடித் தனமாக வாங்கிவிட்டு, அவஸ்தைப்படுவதை தவிர்த்து, சில நிமிடங்கள் செலவழித்து, நல்ல காய்களை தேர்ந் தெடுக்கலாமே!
- * முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்.
- * வெண்டை மற்றும் அவரை காயில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்.
- * கீரை மஞ்சள் பூத்திருந் தால் அருகில் கூட செல்லாதீர்கள். அரைக்கீரை, முளைக் கீரை போன்றவற்றில் தண்டுகள் பெருத் திருந்தால் சுவையாக இருக்காது.
- * வெண்மையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் மட்டுமே காலிப்ளவரை வாங் குங்கள். பூத்து விரிந்திருந்தால் சுவையிருக்காது.
- * வெங்காயம், வாழைக்காய், மாங்காய் போன்றவற்றை வாங்கும் போது, விரல்களால் அழுத்திப் பார்க்கவும். அழுந்தினால் வாங்கக்கூடாது. நூல்கோல், முள் ளங்கி, சுரைக்காய், சவ்சவ், பீர்க்கங்காய் போன்றவை அழுந்தினால் நல்லது என்று பொருள்.
- * அழுத்தமான ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சீக்கிர மாக வெந்து சூப்பர் சுவையாகவும் இருக்கும்.
- * நன்றாகப் பழுத்த தக்காளிகளைவிட, பாதி பழுத்த கெட்டியான தக்காளிகளே சுவையானவை.
- * வாழைத்தண்டை கிள்ளிப் பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல்.
Post a Comment